December 6, 2025, 2:09 PM
29 C
Chennai

ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: ராம.கோபாலன் வலியுறுத்தல்!

stalin - 2025

இஸ்லாமிய திருமண வரவேற்பு ஒன்றுக்குச் சென்றிருந்த திமுக., தலைவர் ஸ்டாலின், இந்துக்களின் திருமண முறைகளையும் சடங்குகளையும் குறித்து இழிவுபடுத்திப் பேசினார். இது பல்வேறு மட்டத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சமூக வலைத்தளங்கள் மூலம் இந்த பேச்சின் வீடியோ பகிரப் பட்டு வருகிறது. இதனால் பலரும் திமுக., தலைவர் மு.க.ஸ்டாலினின் முதிர்ச்சியற்ற பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஸ்டாலினின் இந்தப் பேச்சுக்கு இந்து முன்னணி அமைப்பின் நிறுவுனர் ராம.கோபாலன் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். மேலும், இந்து சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை…

திமுக திருந்தாத கட்சி, திமுகவில் இருக்கும் தன்மானமும்,
சுயமரியாதை உள்ள இந்துக்கள் இதனை உணர்ந்து, அக்கட்சியிலிருந்து வெளியேற வேண்டும்..

திராவிட முன்னேற்ற கழக தலைவர் ஸ்டாலின், நேற்று ஒரு இஸ்லாமிய திருமண வரவேற்பு விழாவில் கலந்துகொண்டு, இந்துக்களின் வேள்வி திருமண சடங்கை கொச்சைப்படுத்தி பேசியுள்ளார், திமுக திருந்தவே திருந்தாது என்பதை இவரது பேச்சு வெளிப்படுத்துகிறது.

திமுகவின் தலைவராக இருந்தவரும், ஸ்டாலினின் தந்தையுமான கருணாநிதி, ரம்ஜான் நோன்பு கஞ்சி குடித்துவிட்டு, இஸ்லாத்தை புகழ்ந்து பேசியிருக்கலாம். ஆனால், அங்குபோய் இந்துக்களின் பழக்க வழக்கங்களை கேலி செய்து புண்படுத்துவார். அந்த வழியில், தற்போது ஸ்டாலின் செயல்பட்டுள்ளார்.

ஈவெரா காலம், கருணாநிதி காலம் மாதிரி இப்போது இந்து சமுதாயம் இல்லை என்பதை திமுகவிற்கு இந்து முன்னணி தெரிவித்துக் கொள்கிறது. இந்து என்றால் திருடன் என்று பேசிய கருணாநிதி மீதான வழக்கு இன்னமும் நிலுவையில் தான் இருக்கிறது. அதனை எதிர்கொள்ளாமல் என்னவெல்லாம் சாமாதானமாக பேசினார் கருணாநிதி என்பதை இந்து சமுதாயம் மறக்கவில்லை. திமுகவில் இருக்கும் சுயமரியாதையும் தன்மானமும் உள்ள இந்துக்கள் சூடு சொரணையோடு வாழ வேண்டுமானால், ஸ்டாலின் பேச்சிற்குக் கண்டனத்தை தெரிவிக்க வேண்டுகிறோம்.

தமிழ் இலக்கியங்கள் ஐவகை திருமணங்களை குறிப்பிடுகிறது. தமிழ் இலக்கியங்களிலும், புராணங்களிலும் வேள்வி திருமண சடங்கு உள்ளது. அது அறிவியல் பூர்வமான சடங்கு. அதே சமயம் பலவகையான திருமண சடங்குகள் இந்து சமுதாயத்தில் இருக்கிறது. இதனை எல்லாம் இந்து திருமண சட்டம் ஏற்றும் கொண்டுள்ளது. திருமணத்தை இப்படித்தான் செய்ய வேண்டும் என்று எந்த ஒரு நபரும் இந்து சமுதாயத்தில் குறிக்கீடு செய்ய முடியாது. அவரவர் சமுதாய வழக்கத்தை அவரவர் குடும்பமே முடிவு செய்கிறது.

திமுக தலைவர் நடத்தும் திருமண சடங்கான, திருமண விழாவை எழவு வீடாக நினைத்து தனது சொந்த கருத்தையும், கட்சி அரசியலையும் புகுந்தும் அநாகரிக திருமணமும் இந்து திருமணத்தின் படிதான் நடந்து வருகிறது. கிறிஸ்தவ, முஸ்லீம் சமுதாய திருமணங்களில் திமுக தலையீடவும் முடியாது, அந்த மதங்கள் அதற்கு இடமும் தருவதில்லை.

அங்குபோய் கலந்து கொள்ளலாம், அந்த அளவு மட்டுமே திமுக தலைவருக்கு அவர்கள் அனுமதி அளிப்பார்கள். திருமணத்தை நடத்துவது பாதிரியார், முல்லா மௌல்வி போன்றோர் தான்.

இஸ்லாமிய திருமண வரவேற்பு விழாவிற்கு போனதற்கு, திமுகவின் பாணியில் அங்கு இல்லாத நிக்காஹ் செய்து கொண்ட தம்பதிகளை வாழ்த்திவிட்டு, பிரியாணி சாப்பிட்டுவிட்டு வந்திருக்க வேண்டும். அங்கு போய் இந்து திருமணங்களைப் பற்றி கேவலமாக பேசியிருப்பது ஸ்டாலின், திமுகவை இந்து விரோத கட்சியாக கொண்டு செல்லவே விரும்புகிறார் என்பதை காட்டுகிறது.

கிறிஸ்தவர்களும், முஸ்லீம்களும் அவரவர் மத நம்பிக்கைகளை கொச்சைப்படுத்தினால், வெகுண்டெழுகிறார்கள். ஆனால் இந்துக்கள் அமைதியாக இருப்பதால் கோழைகளாக நினைத்து, ஸ்டாலின் போன்றவர்கள் நடந்துகொள்கிறார்கள்.

அரசியல் கட்சி என்பது அனைவருக்கும் பொதுவானதாக, அனைத்து சமூகத்தையும் மதித்து செயல்பட வேண்டும், கருத்து தெரிவிக்க வேண்டும். திமுக திருந்தாத கட்சி, அதன் இறுதி அத்தியாயத்தை எழுதவே ஸ்டாலின் இதுபோல் நடந்து கொள்கிறார் என கருதுகிறோம்.

திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. ஸ்டாலின் தனது பேச்சிற்கு இந்து சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என கோருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories