இன்று… கிடைத்தற்கரிய புனித நாள்! செவ்வாய் கிருத்திகை..!

LORD THORANAMALAI SHRI MURUGAN. - 2026

நாளை ஒரு அபூர்வமான கிரக நிலை : 12-03-2019 கிடைத்தற்கரியது!

முருகப் பெருமானுக்கு உகந்த நாளான செவ்வாய்க் கிழமையும், முருகப் பெருமானுக்கு உகந்த நட்சத்திரமான கிருத்திகையும், முருகப் பெருமானுக்கு உகந்த திதி சஷ்டியும், பூமி வசிய நாளும் சேர்ந்து வரக்கூடிய மிக மிக அபூர்வமான கிரக நிலை  இன்று (12-03-2019).

சித்தர்கள் கூறிய அபூர்வமான பூமி வசிய நாள் – நாளை(மாசி 28; 12-03-2019 – செவ்வாய் கிழமை):

சித்தர்கள் கூறிய அபூர்வமான பூமி வசிய நாள் 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டில் மூன்றே நாட்கள் மட்டுமே!

அதுவும் பத்து நிமிடங்கள் மட்டுமே: மனை இல்லாதவர்களுக்கு சொந்த மனை அமைய ஒரு நல்ல வாய்ப்பு!

முனிவர்கள் வாக்கு: யார் யாருக்கு இந்த பூமியில் சொந்தமாக இடம் இல்லை என்று வருத்தப்படுகிறீர்களோ அவர்களுக்கெல்லாம் நல்ல இல்லம் கிடைக்கக்கூடிய சோதிட சாஸ்திர ஆதி சாஸ்திர விதிப்படி,

வசிஸ்டர் முனிவரும், கெளசிக முனிவரும் இணைந்து அவர்களால் சங்கல்பித்த ஒரு நிகழ்வுதான் பூமி வசிய நாள். செவ்வாய் கிழமைகளில் கிருத்திகை நட்சத்திரம், ஹஸ்தம், பரணி, ரோகிணி நட்சத்திரங்கள் வருகிறதோ அவ்விடத்தில் இருந்து கடக லக்னமாக வரும் நாட்கள் 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டில் மூன்றே மூன்று நாட்கள் மட்டுமே உண்டு.

அந்த 03 நாட்களில் பூமி வசிய நாள் என்று ஒரு 10 நிமிடம் உண்டு. அது…

  1. சித்திரை 18 ஆம் தேதி(01-05-2018) செவ்வாய்க்கிழமை – காலை 10:10 am முதல் காலை 10:20 am வரை(10 நிமிடங்கள்) (இந்நாள் 2018 இல் முடிந்தது).

  2. வைகாசி 01 ஆம் தேதி(15-05-2018) செவ்வாய்க்கிழமை. காலை 10:17am முதல் காலை 10:27am வரை(10 நிமிடங்கள்). (இந்நாள் 2018 இல் முடிந்தது).

  3. மாசி 28 ஆம் நாள்(12-03-2019) செவ்வாய்க்கிழமை. மாலை 04:27 pm முதல் 04:37 pm வரை. (இன்று).

இம்மூன்று நாட்களும் செவ்வாய்க் கிழமைகளில் மட்டுமே வரும். ஏனென்றால் சோதிடத்தில் செவ்வாய் கிரகம் பூமி மற்றும் மண்ணுக்குரியது. பிருகு முனிவரால் அருளப்பெற்ற யோக ஜாதக அமைப்பு இது.

வரும் மாசி மாதம் 28 ஆம் தேதி(12-03-2019) செவ்வாய்க்கிழமை மாலை 04:27 pm to 04:37 pm வரை உள்ள பத்து நிமிடத்தில் மட்டும் நல்ல மணலை எடுத்து முதலில் பூமியை வணங்கி, பின் பூமா தேவியையும் வணங்கி 10 நிமிட பூமி பயிற்சி செய்ய வேண்டும். பூமி பயிற்சி தெரிந்தவர் பூமி பயிற்சி செய்து கொள்ளலாம்.

தெரியாதவர்கள் நல்ல சிறு மணலை எடுத்து லிங்கத்தை போல் உருட்டி வைத்து பூசை செய்து அதை நைவேத்யமாக எடுத்து நாவிலே ஒரு சிட்டிகை சுவைத்து வசிக்க நல்ல இடம், சொந்த மனை அமைய வேண்டும் என்று பிராத்தனை செய்தால் நிச்சியமாக உங்களுக்கு மட்டுமல்ல ஏழு(07) தலைமுறைகளில் உங்களுக்கு நல்ல ஒரு பூமி ஸ்தானம் உங்களுக்கு கிடைக்கும்.

நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் நீங்கள் வாழ முடியும். இது கெளசிக முனிவர் மற்றும் வசிஷ்டர் முனிவரின் வாக்கு. கெளசிக முனிவர் மற்றும் வசிஷ்டர் முனிவரால் அருளப்பெற்ற சோதிட வானசாத்திர ஆதிவிதிப்பிடி அமைந்த சூட்சுமமான கிரகநிலைகள் இது. இறைவனுக்கும் முனிவர்களுக்கும் மட்டுமே அறிந்த இரகசியமான பூமி வசிய நாள் இந்நாள்.

பிராப்தம்(பூர்வ புண்ணிய பலம்) உள்ளவர்களுக்கு மட்டுமே இதை நுகர முடியும், படிக்கவும் முடியும், பிராத்தனை செய்யவும் முடியும், பயிற்சி செய்யவும் முடியும்.

உலகிலுள்ள அனைவருக்கும் இது பொருந்தும்.  இது மிக மிக மறைமுகமான, கிடைத்தற்கரிய, அபூர்வமான சித்தர் வாக்கு. யாம் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறட்டும்..

– சித்தர் சீராம பார்ப்பனனார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories