ஏறுதழுவுதல் நாயகன் கும்பக்கோன் மருமகன்!

Published:

srikrishna - 2026

அன்னை யசோதையின் தமையன் அரசர் கும்பக்கோன். அரசர் கும்பக்கோன்-தர்மதா தம்பதியினருக்கு ஸ்ரீ தாமன் என்ற மகனும், நப்பின்னை என்ற மகளும் இருந்தனர்.

நப்பின்னை, திருமாலின் மனைவியான நீளாதேவியின் அவதாரமாவாள். நப்பின்னை, வடஇந்திய நூல்களில் நீளாதேவி,சத்யா போன்ற பெயர்களால் அறியப்படுகிறாள்.

krishna jallikattu - 2026

மதுரைப்பெண் என்பதனால்தான், கண்ணனுக்கு பல மனைவிகள் இருந்தும் திருப்பாவையில் ஆண்டாள் நப்பின்னையை குறிப்பிடுகிறாள். ஏனென்றால், ஆண்டாள்நாச்சியாரும் மதுரையை(பாண்டியநாடு) சேர்ந்த பெண் ஆவாள்.

ஏழு காளைகளை அடக்கும் மாவீரனுக்கு தனது மகளை மணம் முடித்து தருவதாக அறிவித்தார்
அரசர் கும்பக்கோன். ஆயர்கள் பலர் சுயம்பரத்தில் கலந்து கொண்டனர். சுயம்பரத்துக்கு கண்ணன் தனது வளர்ப்பு தந்தை நந்தகோபர் மற்றும் அண்ணன் பலராமருடன் சென்றார்.

ஆயர்குல நாயகன் கிருஷ்ணன், ஏழு காளைகளை அடக்கித் தன் மாமன் மகளான நப்பின்னையை திருமணம் செய்து கொண்டார். கிருஷ்ணனுக்கு பல்வேறு சீதனங்களுடன் ஆயிரம் பசுக்களையும்,எருமைகளையும் வழங்கினார் மாமன் கும்பக்கோன்.

nappinnai krishna - 2026

அன்று முதல் காளையை அடக்கும் ஆயர்குல மாவீரனுக்கே, அந்த பெண்ணிற்கு பிடிக்கும் பட்சத்தில் ஆயர்குலத்தினர் தங்கள் பெண்ணைத் திருமணம் செய்து வைத்தனர்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏறுதழுவுதல், தற்பொழுது தமிழகத்திலும், ஆந்திராவிலும் வெகுவிமர்சியாக நடந்து வருகிறது. அதோடு, வேறு சில மாநிலங்களிலும் நடைபெற்று வருகிறது.

அரசர் கும்பக்கோன் வடஇந்தியாவில் சில பகுதிகளையும், தென்னிந்தியாவின் பல பகுதிகளையும் ஆட்சி செய்தார் எனபது குறிப்பிடத்தக்கது.

ஏறுதழுவுதலுக்கு, பெண் கொடுக்கும் வழக்கத்தை முதன் முதலில் தோற்றுவித்தவர் அரசர் கும்பக்கோன்

  • மதுரை கா.ராஜேஷ்கண்ணா

Related articles

Recent articles

spot_img