December 24, 2025, 7:19 PM
26 C
Chennai

அவன் செத்துப் போகல்லே…சிவலோகம் போயிருக்கான்!

“அவன் செத்துப் போகல்லே…சிவலோகம் போயிருக்கான்” -பெரியவா.
 
(அவ்வூர்க்காரர் வந்து;”அவர் ( கிருஷ்ணமூர்த்தி) செத்துப் போய்விட்டார்” சொன்னதுக்கு-பெரியவாளின் பதில் மேலே.)
18342371 194072067780111 6881321337149165462 n - 2025
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்
 
ஆசாரசீலரான முதிய பக்தர் கிருஷ்ணமூர்த்தி. பையன்கள் வெளிநாடுகளில் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.
 
அவருடைய மனைவி சமீபத்தில் தான் காலமாகி விட்டிருந்தாள்.
 
இவர் மட்டும் இங்கே எப்படித் தனியே இருப்பது?
 
பையன்கள் தங்களிடம் வந்து தங்கும்படி அன்போடு அழைக்கிறார்கள்.
 
“என்ன செய்வது என்றே புரியல்லே. பெரியவா உத்தரவுப்படி நடக்கிறேன்.”
 
பெரியவாளின் பார்வை எங்கெல்லாமோ சுழன்று விட்டு கிருஷ்ணமூர்த்தியின் மேல் வந்து நின்றது.
 
“வெளிதேசம் எங்கேயும் போகவேண்டாம். வீட்டிலேயே ஸ்வயம் பாகம் பண்ணிச் சாப்பிடு.”
 
“சரி…”
 
“காவேரி ஸ்நானம்,சிவபூஜை,ஜபம்,கோயில் தரிசனம் செய்து கொண்டு – உன் அப்பா ,தாத்தா,கொள்ளுத் தாத்தா மாதிரி – கிராமத்திலேயே ஒரு ரிஷியைப் போல இரு…”
 
கிருஷ்ணமூர்த்திக்கு அளவற்ற திருப்தி!
 
“அப்பனே, குருநாதா! கொஞ்சநஞ்சமிருந்த சஞ்சலத்தையும் போக்கிவிட்ட மகாபிரபுவே!…இந்த உபதேசத்தைக் கேட்பதற்காகத் தான் வந்தேன்.
 
பிரசாதம் கொடுத்து அவரை அனுப்பி வைத்தார்கள் பெரியவாள்
 
அதன் பின்னர் அந்தக் கிராமத்திலிருந்து யாராவது தரிசனத்துக்கு வந்தால், “கிருஷ்ணமூர்த்தி எப்படி இருக்கான்?” என்று நினைவாகக் கேட்பார்கள்.
 
வெகு நாள் கழித்து, அவ்வூர்க்காரர் வந்து; “அவர் செத்துப் போய்விட்டார்” என்றார்,இரக்கம் தோன்ற.
 
பெரியவா பட்டென்று, “அவன் செத்துப் போகல்லே… சிவலோகம் போயிருக்கான்” என்றார்கள்.
 
கேட்டுக் கொண்டிருந்த தொண்டர்களுக்கெல்லாம் உடம்பு சிலிர்த்தது.
 
பெரியவாளுடைய கருணை இன்னும் ஒருபடி மேலே போயிற்று. சிஷ்யர்களில் ஒருவரைக் கூப்பிட்டு,
 
“நீ போய் கிருஷ்ணமூர்த்தியை மனசிலே நினைச்சுண்டு குளத்திலே ஸ்நானம் பண்ணிட்டு வா” என்றார்கள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க திருத்த… சிறப்பு முகாம்!

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் அரசு செயலாளர் அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது...

இலக்கியச்சாரல் புத்தாண்டு பொங்கல் இதழ் வெளியீடு

இலக்கியச் சாரலின் புத்தாண்டு - பொங்கல் இதழ், இலக்கியச் சாரலின் துணை இதழான 'சாரல்' - ஆங்கில ஏடு மற்றும் இலக்கியச் சாரல் செய்திமடல் தொகுப்பினை (2000 - 2001)

‘கனமான’ அமெரிக்க செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இஸ்ரோ சாதனை!

அமெரிக்க செயற்கைக்கோள் ' புளூபேர்ட்' இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இதனை அடுத்து இஸ்ரோவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. 

பொதிகை, கொல்லம், மயிலாடுதுறை ரயில்கள் நேரம் மாற்றம்!

கொல்லம் மயிலாடுதுறை பொதிகை ரயில்களின் நேரம் மாறுகிறது. ரயில்கள் இனி முன்னதாகவே சென்று சேரும் வகையில் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Empty Rāgas, Full Canteens: The Great Sabha Vanishing Act of 2025–26

Free afternoon concerts were once crowded proving grounds for artistes on the cusp, with halls that quietly drained at dusk as ticketed celebrity evenings began—a ritual that signified abundance.

Topics

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க திருத்த… சிறப்பு முகாம்!

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் அரசு செயலாளர் அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது...

இலக்கியச்சாரல் புத்தாண்டு பொங்கல் இதழ் வெளியீடு

இலக்கியச் சாரலின் புத்தாண்டு - பொங்கல் இதழ், இலக்கியச் சாரலின் துணை இதழான 'சாரல்' - ஆங்கில ஏடு மற்றும் இலக்கியச் சாரல் செய்திமடல் தொகுப்பினை (2000 - 2001)

‘கனமான’ அமெரிக்க செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இஸ்ரோ சாதனை!

அமெரிக்க செயற்கைக்கோள் ' புளூபேர்ட்' இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இதனை அடுத்து இஸ்ரோவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. 

பொதிகை, கொல்லம், மயிலாடுதுறை ரயில்கள் நேரம் மாற்றம்!

கொல்லம் மயிலாடுதுறை பொதிகை ரயில்களின் நேரம் மாறுகிறது. ரயில்கள் இனி முன்னதாகவே சென்று சேரும் வகையில் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Empty Rāgas, Full Canteens: The Great Sabha Vanishing Act of 2025–26

Free afternoon concerts were once crowded proving grounds for artistes on the cusp, with halls that quietly drained at dusk as ticketed celebrity evenings began—a ritual that signified abundance.

பஞ்சாங்கம் – டிச.24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ஆரன்முழாவில் இருந்து சபரிமலை ஐயப்பன் தங்க அங்கி புறப்பாடு!

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் வரும் டிசம்பர் 27ஆம் தேதி 41வது நாள் மண்டல பூஜை நிறைவு வழிபாடு நடைபெற உள்ள நிலையில்

பரமன் அளித்த பகவத் கீதை(4): கைவர்தக: கேசவ:

அப்படிப்பட்ட இந்த யுத்தம் என்கிற ரத்த ஆறானது பாண்டவர்களால் கேசவன் என்ற ஓடக்காரனின் உதவியால் கடக்கப்பட்டது.

Entertainment News

Popular Categories