“கொலைகாரனை நோக்கி நடந்து சென்ற பெரியவா”

“கொலைகாரனை நோக்கி நடந்து சென்ற பெரியவா”

(‘பகவான் நடந்து வருவார் – என்பது வழக்காறு.
பெரியவாள் நடந்து சென்றார் – என்பது வரலாறு!’)

சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

அன்பர்களோடு உரையாடிக் கொண்டிருந்தார்கள் பெரியவாள். சகஜமாகப்
பேசிக்கொண்டிருந்த பெரியவா ஒரு சந்தர்ப்பத்தில், சட்டென்று பேச்சை நிறுத்திக்
கொண்டார்கள்; உடனே, எழுந்து நின்றார்கள்.

“நான் மட்டும் வெளியே போய்விட்டு வருகிறேன்,யாரும் என்னுடன் வரவேண்டாம்”
என்று, சொல்லிவிட்டு, வாயிலை நோக்கி நடந்து வெளியே போய்விட்டார்கள்.

எல்லோருக்கும் திகைப்பு,உள்ளுக்குள், அச்சம், ‘பெரியவா தனியாகப் போகிறார்களே’
என்று கவலை.

கொஞ்ச நேரம் கழித்து பெரியவர்கள் திரும்பி வந்ததும்தான், எல்லோரும் நிம்மதியாக
மூச்சு விட்டார்கள்,என்றாலும்,’எங்கே போய்விட்டு வந்தார்கள்?’ என்று
தெரிந்துகொள்ளும் ஆவல் அடங்கவில்லை.

பெரியவா அவர்களை வெகுநேரம் தவிக்கவிடவில்லை.

“எங்கே போனேன்னு எல்லோரும் கவலைப்பட்டேள், இல்லையா….ஒரு கொலைகாரன் என்னைப்
பார்க்க வந்து கொண்டிருந்தான். அவன் மடத்துக்குள்ளே வந்தால், அவனுடன் கூடவே
மகாபாவமும் உள்ளே ஒட்டிக்கொள்ளும்.

“ஆனா, என்னிடம் நல்ல எண்ணத்தோடதான் வந்தான். நான் அவன் வருத்தத்தைப்
போக்குவேன்னு நம்பிண்டு வந்தான். அப்படிப்பட்டவனுக்கு ஆறுதல் சொல்வது என் கடமை.

“அவனை மடத்துக்குள்ளே விடவும் கூடாது; ஆறுதலும் சொல்லணும்! அதனாலே நானே
வெளியே போய்
பேசிவிட்டு வந்தேன். அவனைத் தனியே அழைத்துக்கொண்டு போய்,அவனுக்கும் சங்கடம்
கொடுக்காமல்,தனியே பேசி ஆறுதல் கூறிவிட்டு வந்தேன்.”

பக்தன் பகவானை நோக்கி ஓர் அடி எடுத்து வைத்தால், பகவான்,பக்தர்களை நோக்கிப்
பத்து அடிகள் எடுத்து வைப்பார் என்பார்கள். ஆனால் பெரியவாளோ ஒரு பாவி,மனம்
திருந்தி, தன்னை நோக்கி ஓர் அடி எடுத்துவைத்தாலும், தான், நூறு அடிகள் எடுத்து
வைத்து, தன் கடாட்சத்தினாலேயே அவனைக் கழுவி விட்டு வருவார்கள் – அடியார்களை
ஆட்கொள்வதற்கு’

‘பகவான் நடந்து வருவார் – என்பது வழக்காறு.

பெரியவாள் நடந்து சென்றார் – என்பது வரலாறு!’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Topics

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Entertainment News

Popular Categories