“நானும் ஒரு பிச்சைக்காரன் தானே!”-பெரியவா ( பிச்சைக்காரக் குடும்பத்துக்கு கருணை)

1234201 315112848661397 4724600860700186658 n - 2026

“நானும் ஒரு பிச்சைக்காரன் தானே!”-பெரியவா
( பிச்சைக்காரக் குடும்பத்துக்கு கருணை)

(“ஆமாம்..பெரியவா பிக்ஷைக்காரர்தான்!: என்றார், துடுக்கான ஒரு தொண்டர்)

உள்ளம் கவர் கள்வன் என்ற தலைப்பில்
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்

கடுமையான கோடை நாள். கிராமத்தில் தண்ணீர்ப் பஞ்சம். குடிப்பதற்குத் தேவையான
தூய்மையான தண்ணீரை சேமித்து வைப்பதே பெரும் பாடாக இருந்தது.

பெரியவா ஸ்நானம் – அனுஷ்டானம் செய்வதற்காக இரண்டு மைல் தூரம் சென்று நல்ல
தண்ணீர் கொண்டுவர வேண்டியிருந்தது. தொண்டர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வாளி
தண்ணீர்தான் நீராடுவதற்காகக் கொடுக்கப்பட்டது.

ஸ்ரீமடம் முகாம் செய்திருந்த கட்டடத்துக்கு வெளிப்புறத்தில் ஒரு மரத்தடியில்
உட்கார்ந்து பெரியவா அனுஷ்டானம் செய்து கொண்டிருந்தார்கள்.

குழந்தை குட்டிகளுடன் ஒரு பிச்சைக்காரக் குடும்பம் ஒவ்வொரு வீடாகச் சென்று
கெஞ்சிக்கேட்பதும் அவர்கள் மறுப்பதும், இவர்கள் ஏமாற்றத்துடன் அடுத்த
வீட்டுக்குப் போவதும்…,தொண்டர்கள் எல்லோருக்குமே தெரிந்தது.

“ஒரு பிடி அரிசி கூட பிச்சைக்காரர்களுக்குப் போட முடியாத தரித்திரர்களாகி
விட்டார்களா,அந்தக் கிராமத்தினர்?

“இல்லை.அரிசி என்ன, அரை வெள்ளி கேட்டால் கூடக் கொடுக்கக் கூடியவர்கள் தான்
அவர்கள்.

“இவர்கள் தண்ணீர் அல்லவா – குடி தண்ணீர் அல்லவா – கேட்கிறார்கள்.

“அப்படியானால் யார் வீட்டிலும் ஒரு சொம்பு தண்ணீர் கூட இல்லையா?

இருந்தது. தமக்கே கஷ்டம் என்னும் போது சேமித்து வைத்திருக்கும் கொஞ்சம்
தண்ணீரில் ஒரு சொம்பு அளவு தானம் செய்து விட்டால் சேமிப்பில் குறைந்து விடாதா?

அத்துடன், தண்ணீர் கேட்பது யார்? ஒரு பரதேசப் பிச்சைக்காரக் குடும்பம்!
‘இவர்களுக்குத் தண்ணீர் கொடுக்காவிட்டால் ஒரு நஷ்டமும் வந்து விடாது’ என்ற
மனோபாவம்.

பெரியவாள் அந்தப் பிச்சைக்காரக் குடும்பத்தை அழைத்து வரச் சொன்னார்கள். தன்
அனுஷ்டானத்துக்காக கடத்தில் வைத்திருந்த தண்ணீர் முழுவதையும் அவர்களுக்குக்
கொடுக்கச் சொன்னார்கள். இரண்டு கைகளையும் குழித்து வைத்து பரபரவென்று
வாயால்உறிஞ்சி அவர்கள் தண்ணீர் குடித்ததை,கருணை ததும்பும் கண்களுடன்
பார்த்துக் கொண்டேயிருந்தார்கள்.

வயிறு நிறையத் தண்ணீர் குடித்து நெஞ்சு நிறைய நன்றியை நிரப்பிக் கொண்டு
அவர்கள் போய் விட்டார்கள்.

தொண்டர்கள் செவிகளில் விழும்படியாக சற்றே உரத்த குரலில்;,

“நானும் ஒரு பிச்சைக்காரன் தானே!” என்றார்கள்.பெரியவா

“ஆமாம்..பெரியவா பிக்ஷைக்காரர்தான்!: என்றார், துடுக்கான ஒரு தொண்டர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories