மகான்களை மன சுத்தியுடன் வழிபட வேண்டும்: கீழாம்பூர் பேச்சு

kizhambur speech at madurai anusham - 2026
#image_title

மதுரை: அவதார புருஷர்களை வழிபட செல்கிற போது மனம் சுத்தமாக இருக்க வேண்டும். அப்போது இறையருள் பெறலாம் என்று அனுஷம் உத்ஸவ விழாவில் கலைமகள் இதழின் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் பேசினார்

மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில் காஞ்சி ஸ்ரீ மகா பெரியவரின் அனுஷ உத்ஸவத்தை முன்னிட்டு மதுரை எஸ் எஸ் காலனி எஸ் எம் கே திருமண மண்டபத்தில் கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் குரு அருளும் திரு அருளும் என்ற தலைப்பில் பக்தி சொற்பொழிவு ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது…

மகான்களிடம் போகும்போது நமது மனம் சுத்தமாக இருக்க வேண்டும். அப்போதுதான் நமக்கு பலன் கிடைக்கும். எப்பொழுதும் தினமும் குருவை வணங்கி விட்டு தான் நமது காரியத்தை தொடங்க வேண்டும். அப்போது சௌக்கியம் கிடைக்கும்.

நாம் தினமும் பசுவை இரட்சிக்க வேண்டும். கங்கையில் குளிப்பதை விட பசுவை பராமரித்தால் அது புண்ணியம் என்று தாமிரபரணி புராணம் கூறுகிறது. இதையே மகா பெரியவர் பசுவை காப்பாற்றுவது மிகப்பெரிய புண்ணியம் என்கிறார்.

மகா பெரியவர் 1922 ஆம் ஆண்டு மதுரைக்கு வந்துவிட்டு தொடர்ந்து நெல்லை சென்றார். இதயம் பேசுகிறது மணியன் மகா பெரியவரை சந்தித்த பொழுது நெல்லை பாபநாசத்திற்கும் தஞ்சாவூர் பாபநாசத்திற்கும் ஏதாவது கனெக்சன் உண்டா என்று கேட்டார்.

ALSO READ:  டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

எப்போதுமே பெரியவரிடம் நாம் ஏதாவது கேட்டால் அவர் எதிர் கேள்வி கேட்பார். நம்முடைய கோவில் கதைகள் தல புராணங்களை நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவர் கேட்டார்.

இன்றும் பாபநாசம் கோவிலில் உச்சி காலை பூஜை முடிந்த உடன் மீன்களுக்கு அந்த உணவை போடுவது வழக்கம். உலகில் மற்ற ஜீவராசிகளையும் நாம் இரட்சிக்க வேண்டும் என்பதற்காக மீனுக்கு சாப்பாடு போடுகிறார்கள்

ராமனின் வாழ்க்கையில் நடந்த விஷயங்களை நாம் பின்பற்றி நடக்க வேண்டும்.

மகா பெரியவர் தமிழ் இலக்கியம், தொல்லியல், இசை, ஆங்கில நுண்ணறிவு, மற்றும் அனைத்து புலமைகளும் உடையவர். குருவிற்கு எப்பொழுதும் சிஷ்யர்கள் மீது அன்பும் பரிவும் இருக்கும் .

தமிழ் பாட்டி ஔவை. தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர். இன்று நாம் ஒழுங்காக தமிழ் படிப்பதற்கு மூல காரணம் உ. வே. சாமிநாத ஐயர் அவர்களின் முயற்சிதான்.

அனுஷ பூஜை நடத்துவதின் நோக்கம் எப்படிப்பட்ட தவ வாழ்க்கை வாழ்ந்த மகா பெரியவர் சொன்ன நல்ல விஷயங்களை நாம் கடைபிடிக்க வேண்டும். திருமணத்தை எளிதாக நடத்துவது, பட்டுப் புடவையை பயன்படுத்தக் கூடாது, லஞ்சம் வாங்க கூடாது, போதைப் பொருட்களை பயன்படுத்தக் கூடாது போன்று அவர் சொன்ன நல்ல விஷயங்களை நாம் வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும்.

ALSO READ:  நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

இறைவனை வழிபடுவதோடு இறைவனின் அருளை பெற்ற அவதார புருஷர்களை வழிபட்டால் நமக்கு வாழ்க்கையில் சித்திகள் உண்டாகும். அவதார புருஷர்களின் அருளால் வீடும் நாடும் செழிக்கும்.

இவ்வாறு கீராம்பூர் சங்கர சுப்பிரமணியன் பேசினர். முன்னதாக கீழம்பூர் சங்கர சுப்பிரமணியனுக்கு மதுரை அனுஷத்தின் அனுகிரகம் அமைப்பு சார்பில் ஸ்ரீ மகா பெரியவர் விருதினை எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் வழங்கி பாராட்டி பேசினார்.

அதனை தொடர்ந்து மஹா பெரியவர் விக்ரகம் மற்றும் வெள்ளிப் பாதுகைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீப ஆராதனை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

Entertainment News

Popular Categories