பகவத் கீதையின் பெருமை

krishna arjuna rath - 2026

ஸ்வாமி விவேகானந்தர் அமெரிக்கா சென்ற போது, பல இடங்களில் அருமையான உபன்யாஸங்கள் மூலம், நம்முடைய ஸனாதன மதத்தின் பெருமையை நிலைநாட்டினார்.

ஒருமுறை ஒரு க்ரிஸ்டியன் மிஷனரியைச் சேர்ந்த சிலர், ஸ்வாமியை தங்களுடைய லைப்ரரிக்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தனர். ஸ்வாமியும் சென்றார்.

அங்கு எக்கச்சக்கமான புஸ்தகங்கள் இருந்தன.

ஆனால் ஒரு இடத்தில் அவர்கள் வேண்டுமென்றே புஸ்தகங்களை அடுக்கியிருந்த விதம், ஸ்வாமிகள் பார்வையில் பட்டது.

எப்படி அடுக்கியிருந்தார்கள்?

உலகில் உள்ள ஏதேதோ மதங்களின் புஸ்தகங்களை எல்லாம் ஒன்றுக்கு மேல் ஒன்றாக அடுக்கி, எல்லாவற்றுக்கும் மேலாக பைபிளை வைத்திருந்தார்கள்.

ஆனால், நம்முடைய பகவத்கீதையை மட்டும் எல்லா புஸ்தகங்களுக்கும் அடியில் கடைஸியாக வைத்திருந்தார்கள்.

ஸ்வாமிகளை அழைத்ததே, இந்த ஏற்பாட்டை காட்டத்தான்! அவரையும் நம்ஹிந்து தர்மத்தையும் மட்டப்படுத்தி காட்டத்தான்!

ஆனால் நம் ஸ்வாமிகள் கம்பீர புருஷர் இல்லையா!

நேராக அந்த புஸ்தகங்கள் அருகில் போய், அடியிலிருந்த பகவத் கீதையை தன் திருக்கரத்தால் ஒரு ஆட்டு ஆட்டி, வெளியே எடுத்தார்.

அடுத்த க்ஷணம், மேலே இருந்த பைபிள் உள்பட அத்தனை மதங்களின் புஸ்தகங்களும் “தபதப” வென்று கீழே சரிந்தன!

“பாருங்கள்! பகவத் கீதை எல்லாவற்றுக்கும் ஆதாரமாக, அஸ்திவாரமாக இருப்பதால்தான், மற்ற மதங்கள் பிழைக்க முடிகிறது. ஆனால், பகவத் கீதை இல்லாவிட்டால், எல்லாம் விழுந்துவிடும். இதுதான் எங்கள் கீதையின் சிறப்பு”

ஸ்வாமிகள் அழகாக சிரித்துக் கொண்டே படுஜோராக சொல்லிவிட்டு கீதையை தூக்கிக் கொண்டு வெளியே நடந்தார்.

மற்றவர்கள் அந்த கம்பீரமான ஞானஸிம்ஹத்தின் முன் என்ன செய்ய முடியும்?

ஶ்ரீ ஆசார்யாள் பாதங்களில் ஸமர்ப்பணம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories