நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி , சூரசம்ஹாரம் ,திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
இந்த ஆண்டுக்கான விழா வருகிற 2010.17 வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு காலை 5 மணிக்கு கணபதி ஹோம், 6 மணிக்கு கொடியேற்றம் தீபாராதனை நடைபெறுகிறது. மதியம் 12 மணிக்கு அபிஷேகம் உச்சிகால பூஜை தீபாராதனை நடைபெறுகிறது. காலை 6 மணிக்கு தீபாராதனை 7 மணிக்கு அர்ச்சனை நடைபெறுகிறது.
தொடர்ந்து 25ம்தேதி வரைதினமும் மதியம் 12மணிக்கு அபிஷேகம் உச்சிகால பூஜை, தீபாராதனை நடைபெறுகிறது. தினமும் மாலையில் தீபாராதனை நடைபெறுகிறது.
சூரசம்ஹாரம்
25ம் தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு சஷ்டி ஹோமம் நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு அபிஷேகம் தீபாராதனை நடைபெறுகிறது. 26ம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு அம்மன் தபசு மண்டபம் செல்லுதல். மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை தீபாராதனை. மாலை 6 மணி க்கு காட்சி அருளல் இரவு 7 மணிக்கு அபிஷேகம் தீபாராதனை இரவு 8 மணிக்கு சுவாமி திருக்கல்யாணம் நடைபெறுகிறது
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்


