ஸ்வாமி கூரத்தாழ்வான் வைபவம்

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

ஸ்வாமி கூரத்தாழ்வான் வைபவம்

இன்று முதல் மூன்று நாள்கள், ஸ்வாமி கூரத்தாழ்வான் திருநக்ஷத்ரம் (5-2-2018 அன்று) வரவிருப்பதை முன்னிட்டு, அவருடைய வைபவத்தை சிந்தை செய்வோம்.

*தனியன்
ஸ்ரீவத்ஸசிஹ்நமிச்ரேப்யோ நம உக்திமதீமஹே|
யதுக்தயஸ் த்ரயீகண்டே யாந்தி மங்களஸூத்ரதாம்||

“பெருமாள் கோயில்” என்று அழைக்கப்படும் காஞ்சீபுரத்துக்கு வடமேற்கே சுமார் பத்து மைல் தொலைவில் உள்ள கூரம் என்னும் திவ்யக்ஷேத்ரத்தில், அனந்தர் என்கிற கூரத்தாழ்வார்க்கும், பெருந்தேவி நாயகியார்க்கும் திருக்குமாரராய், ஒரு ஸௌம்ய வருஷம், தை மாதம் ஹஸ்த நக்ஷத்ரத்தில் திருவவதரித்தார் ஸ்வாமி கூரத்தாழ்வான்.

இவர்க்கு ஸ்ரீவத்ஸாங்கர் என்று திருநாமம் இட்டனர் பெரியோர். ஸ்வாமி ராமாநுஜர் திருவவதரிப்பதற்கு எட்டு ஆண்டுகள் முன்னமே திருவவதரித்தார் ஸ்வாமி கூரத்தாழ்வான். ஆதிசேஷன் ராமாநுஜராக அவதரித்தபோது, அவ்வெம்பெருமானே கூரத்தாழ்வானாக அவதரித்தார் என்பர் பெரியோர்.

ஸ்ரீவத்ஸாங்கர், சகல சாஸ்த்ரங்களையும் கற்றுத் தேர்ந்து, கூரமாநகர்க்கு அதிபதியாய் விளங்கினார். உரிய காலத்தில் ஆண்டாள் என்பவரைத் திருக்கல்யாணம் செய்துகொண்ட இவர், நாள்தோறும் தம் திருமாளிகையில் நிறைய பேருக்கு “அன்னதானம்” செய்துவந்தார்.

மிகுந்த செல்வச் செழிப்போடே கூடியிருந்தாலும், கொஞ்சம் கூட செருக்கு இல்லாதவராக விளங்கினார்.  இவர் திருமாளிகையின் கதவுகளில் பெருத்த ஓசையை எழுப்பக்கூடிய மணிகள் பொருத்தப்பட்டிருக்கும்.

தினந்தோறும், காஞ்சியில் தேவப்பெருமாள் திருக்கோயில் திருக்காப்பு சாத்தப்பட்ட பின் தான் இவர் திருமாளிகைக் கதவுகள் சாத்தப்படும். ஒருநாள் வரதன் சன்னிதிக் கதவுகள் சாத்தப்படும் முன்பே இவர் திருமாளிகைக் கதவுகள் சாத்தப்பட்டன. அப்போது அதிலே உள்ள மணிகளின் ஒலி, வரதன் திருச்செவிகளில் கேட்டது!

கூரத்தில் ஒலித்த மணியோசை வரதன் திருச்செவிகளில் கேட்டது என்றால் ஸ்ரீவத்ஸாங்கருடைய செல்வச்செழிப்பு எப்பேர்பட்டது? இந்த செல்வச்செழிப்பை வரதான் தானே கொண்டாடி மகிழ்ந்தான். மறுநாள் திருக்கச்சி நம்பிகள் ஸ்ரீவத்ஸாங்கரிடம் வந்து, வரதன் முன்னாள் இரவில் தம் செல்வச்செழிப்பைக் கொண்டாடினான் என்றார்.

அது கேட்டு திடுக்கிட்ட ஸ்ரீவத்ஸாங்கர், இது நம் ஸ்வரூபத்துக்கு சேராது என்று முடிவுசெய்து, அப்போதே தம் செல்வத்தைப் பலருக்கும் தானம் செய்து, தம் தேவிகளோடு காஞ்சியை வந்தடைந்து, ராமாநுஜரை ஆச்ரயித்தனர்.

ராமாநுஜர் இருவருக்கும் பஞ்சஸம்ஸ்காரங்களைப் பண்ணியருளினார்.
இவ்வாறு ஸ்ரீவத்ஸாங்கர் ராமாநுஜருக்குப் பண்ணிய கைங்கர்யங்களைத் தொடர்ந்து அனுபவிப்போம்.

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

அடியேன்

திருக்கோவலூர் ஸுதர்சந ராமாநுஜதாஸன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Entertainment News

Popular Categories