பரமன் அளித்த பகவத் கீதை(6): ஆன்மிகத்தில் மகாபாரதம் பெறும் இடம்!

bhagavat githa series - 2026

பகவத்கீதை பகுதி 6 :
மகாபாரதக் கதை
ஆன்மிகத்தில் மகாபாரதம் பெறும் இடம்

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

         பகவத்கீதை மகாபாரதத்தில் இடம் பெறுகிறது. அதனை பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அர்ச்சுனனுக்குச் சொல்கிறார். எனவே பகவத்கீதை தோன்ற, அதன் பின்னணியை அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். அதாவது மகாபாரதம் பற்றி அறிய வேண்டியது அவசியம். எனவே நான் மகாபாரதக்கதையைச் சொல்ல முதலில் முயற்சிக்கிறேன்.

         மகாபாரதமும் இராமயணமும் நமக்கு இறைவனை அடையும் வழிகளைச் சொல்கின்றன. இறைவனை அடையும் வழிகள் என்ன என்பதை ஒரு ஸ்லோகம் சொல்கிறது.  

“ஸ்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ: ஸ்மரணம் பாத சேவனம். அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம் ஸக்ய ஆத்மநிவேதனம்” 

என ஒன்பது வித பக்தியை பாகவதம் குறிப்பிடுகிறது.

  • ஸ்ரவணம் – ஆண்டவனுடைய புகழைக் காதுகளால் கேட்டு இன்புறுவது.
  • கீர்த்தனம் – பகவானுடைய புகழை எப்போதும் பாடிக் கொண்டிருத்தல்.
  • ஸ்மரணம் – ஆண்டவன் நினைவாகவே இருத்தல்.
  • பாதஸேவனம் – ஆண்டவனுடைய திருவடிகளை சேவித்தல்.
  • அர்ச்சனம் – பூஜித்து வழிபடுதல்.
  • வந்தனம் – ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்தல்.
  • தாஸ்யம் – இறைவனின் கட்டளைப்படி நடத்தல்.
  • ஸக்யம் – கடவுளையே நண்பராக பாவித்து அன்பு கொள்ளுதல்.
  • ஆத்மநிவேதனம் – ஆண்டவரிடம் முழுமையாக ஒப்படைத்தல்.
ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

         இப்படி ஒன்பது விதமான பக்தி நிலைகள் இருந்தாலும் இதில் ஸ்ரவணம் எனும் கடவுளின் புகழினை கேட்கும் நிலையே பெரிதும் போற்றப்படுகிறது. எளிதான வழியும் இதுதான். எப்போதெல்லாம் ஆண்டவனின் திருநாமங்களை, பாடல்களை, கதைகளை கேட்க முடியுமோ அப்போதெல்லாம் கேட்டு விடவேண்டும். இதுவே நமக்கான முக்தியை அளிக்கக்கூடியது.

         ஸ்ரீராமரோடு வைகுந்தம் செல்ல விருப்பமின்றி ஹனுமான் ஸ்ரவண பக்திக்காக சிரஞ்சீவியாக பூலோகத்திலே தங்கி விட்டார். எங்கெல்லாம் ராமநாமம் ஒலிக்கிறதோ அங்கெல்லாம் ராமநாமம் சொல்பவரை ஆசிர்வதிக்க வந்து விடுகிறார். எனவே எளிதான ஸ்ரவண பக்தியை மேற்கொண்டு எல்லோருமே முக்தியை அடையலாம் என ஆன்றோர்கள் கூறியுள்ளார்கள். அதை நாமும் பின்பற்றலாமே.

         ஸ்ரவணம் என்றால் கேட்டல். எதைக் கேட்க வேண்டும்?

ரிக், யஜுர், சாம, அதர்வணம் எனும் நான்கு வேதங்களைப் பற்றிக் கேட்கலாம். வேத விளக்கங்களான -ஸம்ஹிதை. பிராமாணம், ஆரண்யகம், உபநிடதம் ஆகியவை பற்றிக் கேட்கலாம். வேதாங்கங்களான சிக்ஷா, வியாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜோதிடம், கல்பம் ஆகியவைகளைப் பற்றிக் கேட்கலாம். இதிஹாசங்களான இராமாயணம், மகாபாரதத்தைப் பற்றிக் கேட்கலாம். இதிஹாசம் – இதி+ஹ+அஸ – இது இப்படி நடந்தது. இதிலே இராமாயணம்  வான்மீகி முனிவரால் எழுதப்பட்டது. அவர் இராமயணகாலத்தில் வாழ்ந்தவர். பாரதம் வியாச பகவானால் எழுதப்பட்டது. அவர் மகாபாரதகாலத்தில் வாழ்ந்தவர்.

ALSO READ:  வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

மகாபாரதம் பல சிறப்பு அம்சங்களைக் கொண்டது. அவையாவன:

  • சிற்றின்ப நுகர்வை தியாகம் செய்யும் – பீஷ்மன்
  • தன் மனைவியை இன்னொருவர் மூலம் கருத்தரிக்கச் செய்யும் – பாண்டு
  • கணவனுக்காக வாழ்நாள் முழுவதும் கண்ணைக் கட்டிக்கொண்டு வாழும் மனைவி – காந்தாரி
  • ஐந்து கணவர்களோடு எந்தவிதச் சிக்கலும் இன்றி வாழும் பெண் – திரௌபதி.
  • ஓராண்டிற்கு பேடியாக வாழும் ஒருவன் – அர்ச்சுனன்
  • மிகப்பெரிய காடு அழிக்கப்பட்டது – காண்டவப் பிரஸ்தம்
  • சூதாட்டத்தில் நாட்டைப் பணயம் வைத்த அரசன் – தருமன்
  • போர்க்களத்தில் பிறக்கும் கீதை
  • தாயே பிள்ளைகளைக் கொல்லும் அதிசயம் – கங்கை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

Entertainment News

Popular Categories