சபரிமலை கோயில் நடை அடைப்பு!

sabarimala nada adaippu - 2026

உலகப் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று காலை பந்தள மன்னர் ராஜ ராஜ வர்மா சுவாமி தரிசனம் செய்ததும் சபரிமலை கோவில் நடை அடைக்கப்பட்டது.

சபரிமலையில் மண்டல-மகரவிளக்கு விழா நிறைவடைந்த நிலையில் சபரிமலை கோயில் மூடப்பட்டது. திருவபிராண அணியினர் ஐய்யனை வணங்கி திருவாபரன் கலசங்கள் அடங்கிய பெட்டிகளுடன் அனுமதி பெற்று மீண்டும் பந்தளம் அரண்மனைக்கு நடை பயண ஊர்வலமாக சென்றனர்.

பின்னர் ராஜபிரதிநிதி சோபானம் வந்து ஐயப்பனை தரிசனம் செய்தார். பின்னர் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி ஐயப்பன் சிலைக்கு விபூதியாபிஷேகம் செய்து கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிவித்து, கையில் யோக குச்சியும் அணிவித்தார். ஹரிவராசனம் படித்து முடித்த மேல்சாந்தி சன்னதியை விட்டு வெளியேறி சாவியை அரச பிரதிநிதியிடம் ஒப்படைத்தார்.

18வது படியில் இறங்கிய பந்தள அரச பிரதிநிதி, தேவசம்பிரதிநிதிகள் மற்றும் மேலசாந்தி முன்னிலையில் சபரிமலை நிர்வாக அதிகாரி பிஜூ வி நாத்திடம் சாவியை ஒப்படைத்தார். மாதாந்திர பூஜைச் செலவுக்கு பண உதவித்தொகையும் வழங்கப்பட்டது. பின்னர் அரச பிரதிநிதியும் அவரது குழுவினரும் பந்தளம் அரண்மனைக்கு புறப்பட்டனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30-ம் தேதி நடை திறக்கப்பட்டது. அன்று முதல் தொடர்ந்து வழிபாடுகள் நடைபெற்றன. விழாவின் உச்ச நிகழ்வாக கடந்த 14-ம் தேதி ஐயப்பனுக்கு திருவாபரணம் அணிவித்து, மகரவிளக்கு பூஜை நடைபெற்றது. மாலையில் பொன்னம்பலமேட்டில் தெரிந்த ஜோதியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து மகர சங்கராந்தி வழிபாடுகள் நடைபெற்றன.

மகரவிளக்கு பூஜைகள் முடிந்த நிலையில் நாளை இரவு 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால், பம்பையில் இருந்து மாலை 6 மணிக்குள் பக்தர்கள் மலையேறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கு முன்னோட்டமாக, சத்திரம், எருமேலி உள்ளிட்ட பாதயாத்திரை பக்தர்களுக்கான வனப்பாதைகள் மூடப்பட்டன. சபரிமலையில் இன்று (சனி) காலை 10.30 மணியுடன் நெய் அபிஷேகம் நிறைவடைகிறது.

இதற்கிடையே, சபரிமலை சந்நிதானத்துக்கு நேற்று முன்தினம் பந்தள மன்னரின் பிரதிநிதி ராஜராஜவர்மா உள்ளிட்டோருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. கடந்த கார்த்திகை ஒன்று முதல் 41 நாட்கள் நடந்த மண்டல பூஜை வழிபாடும் அதன் பின் ஜனவரி 30 துவங்கிய மகரஜோதி வழிபாடும் முடிவடைந்த நிலையில் தற்போது சபரிமலை கோவில் பக்தர்கள் இல்லாமல் அமைதியின் மொத்த உருவமாக காட்சியளிக்கிறது

இனி சபரிமலை ஐயப்பன் கோவில் மாசி மாத பூஜைக்காக நடை திறக்கப்படும் சபரிமலையில் இந்த ஆண்டு மகரஜோதி மகர விளக்கு காலங்களில் வருகை தந்த பக்தர்கள் எண்ணிக்கை மொத்த வருவாய் போன்ற விவரங்களை விரைவில் தேவசம்போர்டு வெளியிடும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 19 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 18 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஹரிஜன ஆலயப்பிரவேச போராட்டம் நடத்தி வெற்றி பெற்ற தியாகி வைத்தியநாத ஐயர் பிறந்த தினத்தில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய தருணம்!

தமிழர்கள் ஒவ்வொருவரும் மார்தட்டிப் பெருமைப்பட வேண்டிய வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் இது!

பஞ்சாங்கம் மே 17 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் மே 19 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 18 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஹரிஜன ஆலயப்பிரவேச போராட்டம் நடத்தி வெற்றி பெற்ற தியாகி வைத்தியநாத ஐயர் பிறந்த தினத்தில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய தருணம்!

தமிழர்கள் ஒவ்வொருவரும் மார்தட்டிப் பெருமைப்பட வேண்டிய வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் இது!

பஞ்சாங்கம் மே 17 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 16 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

Entertainment News

Popular Categories