“ஏழைகளின் சிரிப்பில் பெரியவா”

Published:

1969132_763012707087106_4352134091554339462_n “ஏழைகளின் சிரிப்பில் பெரியவா” தொகுத்தவர்-அழகர் நம்பி. தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

 
செல்வந்தர் ஒருவர் ஸ்வாமிகளை தரிசனம் செய்ய வந்திருந்தார்.“இறைவன் அருளால் எல்லாச் செல்வங்களையும்
பெற்றிருக்கிறேன்.என்னைப் புண்ணியம் செய்தவனாக்கி விட்டார் கடவுள்” என்றபடியே,
பத்து பவுனை ஸ்வாமிகளின் காலடியில் வைத்தார்.
 
“இல்லாதவர்களுக்கு உதவி செய்து அதனால்
கிடைக்கும் புண்ணியத்தைப் பெற்றிருக்காயா?”
என்றார்கள் ஸ்வாமிகள்.
 
பெரியவாளின் கேள்விக்கு அவரிடம் பதில் இல்லை.
 
அச்சமயம் தன் பெண்ணுடன் ஸ்வாமிகளைத்
தரிசித்தார் ஓர் ஏழை பிராமணன்.“ஸ்வாமி என்னிடம் கல்யாணத்திற்கு பெண்
இருக்கிறது. ஆனால் பொன் கிடையாது.
தாங்கள் தான் கண் திறக்க வேண்டும்” என்றார்.
 
ஸ்வாமிகள்; தன்னருகே நின்ற செல்வந்தரிடம், “ஆம், நீ புண்யம் செய்தவனாகி விட்டாய். நீ கொண்டு
வந்த பவுனை இவரிடம் கொடுத்தால்,கன்னிகா தானம்
செய்து வைத்த புண்ணியம் உனக்கு கிடைக்கும்” 
என்றார்கள்.
 
காரணமும் தானே, காரியமும் தானே என்றாகி
நின்றார்கள் பெரியவா.
 
ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்
என்பதை உண்மையாக்கி விட்டு சிரித்தபடியே
நின்றது அந்த சாது.
ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

Related articles

Recent articles

spot_img