இந்தியா ஆஸ்திரேலியா முதல் டி20 ; மொஹாலி சொதப்பல்

aus ind t20 - 2026

இந்தியா ஆஸ்திரேலியா முதல் டி20 போட்டி – மொஹாலி, 20.09.2022
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

இந்திய அணியை (20 ஓவர் முடிவில் ஆறு விக்கட் இழப்பிற்கு 208 ரன், ஹார்திக் பாண்ட்யா 71, கே.எல், ராகுல் 55, சூரியகுமார் யாதவ் 46, நாதன் எல்லிஸ் 3/30) ஆஸ்திரேலியா அணி (19.2 ஓவரில் 211 ரன், க்ரீன் 61, ஸ்மித் 35, வேட் ஆட்டமிழக்காமல் 45, அக்சர் படேல் 3/17, உமேஷ் யாதவ் 2/27) 4 விக்கட் வித்தியாசத்தில் வென்றது.

இந்திய அணியில் இன்று ரிஷப் பந்த், பும்ரா விளையாடவில்லை. அவர்களுக்குப் பதிலாக தினேஷ் கார்த்திக், உமேஷ் யாதவ் ஆகியோர் ஆடினர். டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை மட்டையாடச் சொன்னது.

இந்திய அணியின் தொடக்க வீரரும் அணித்தலைவருமான ரோஹித் ஷர்மா மூன்றாவது ஓவரில் ஆட்டமிழந்தார். விராட் கோலி ஐந்தாவது ஓவரில் அவுட்டானார். பவர் ப்ளே ஓவர்களில் 2 விக்கட் இழப்பிற்கு 46 ரன் எடுக்கப்பட்டது. ராகுல், சூர்யகுமார் யாதவ், பாண்ட்யா மூவரும் சிறப்பாக ஆடினர். நாலு ஓவர் ஆட வாய்ப்பிருந்தும் தினேஷ் கார்த்திக் துரதிர்ஷ்டவசமாக எல்பிடபில்யு முறையில் ஆட்டமிழந்தார். 20 ஓவர் முடிவில் இந்திய அணி ஆறு விக்கட் இழப்பிற்கு 208 ரன் எடுத்திருந்தது. இது ஒரு நல்ல ஸ்கோர்தான்.

ஆனால் ஆஸ்திரேலிய அணி அதிரடியாக தனது ஆட்டத்தைத் தொடங்கியது. பவர்ப்ளே ஓவர்களில் அந்த அணி 61 ரன்களை எடுத்தது. ஆரோன் ஃபின்ச் (22 ரன்), கிரீன் (61 ரன்), ஸ்மித் (35), வேட் (45*) இங்க்லிஸ் (17), என அவர்களது ஆட்டக்காரர்கள் நன்றாகவே விளையாடினார்கள். புவனேஷ்குமார் நாலு ஓவரில் 52 ரன் கொடுத்தார். அக்சர்படேல் மட்டும் ஓவருக்கு 4.25 ரன் கொடுத்திருந்தார். மற்ற பந்துவீச்சாளர்கள் அனவரும் ஓவருக்கு 11 ரன்னுக்கு அதிகமாக ரன் கொடுத்திருந்தனர். எனவே ஆஸ்திரேலிய அணி 19.2 ஓவரில் ஆறு விக்கட் இழப்பிற்கு 211 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

Entertainment News

Popular Categories