IND Vs BAN முதல் டெஸ்ட்: நான்காம் நாளில் தாக்குப் பிடித்து ஆடிய வங்கதேசம்

ind ban test 1 - 2026

இந்திய வங்கதேச முதல் டெஸ்ட் – நான் காம் நாள் – 17.12.2022

-முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

இந்திய அணி முதல் இன்னிங்க்ஸ் 404; இரண்டாவது இன்னிங்க்ஸ் 258/2 டிக்ளேர்டு (கில் 110, புஜாரா 102*, கலீத் 1-51). வங்கதேசம் முதல் இன்னிங்க்ஸ்-150 (முஷ்பிகுர் 28, மெஹிதி 25, குல்தீப் 5-40, சிராஜ் 3-20); இரண்டாவது இன்னிங்க்ஸ் 272/6 (சாண்டோ 67, ஜாகிர் 100, ஷாகிப் அல் ஹசன் 40, அக்சர் படேல் 3/50, குல்தீப், அஷ்வின், உமேஷ் தலா ஒரு விக்கட்).

நாலாம் நாள் ஆட்டம் முடிவில் இந்திய அணி வெற்றிக்கு இன்னும் 4 விக்கட்டுகள் மட்டுமே தேவை. தற்போது வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் 40 ரன்களுடனும், மெஹதி ஹசன் 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நாளை நடைபெறும் கடைசி நாள் ஆட்டத்தில் 4 விக்கெட்டுகளை இந்திய அணி கைப்பற்ற அதிக வாய்ப்புகள் உள்ளதால் இந்தியாவின் வெற்றி ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் வங்கதேச அணி விக்கெட் இழப்பின்றி 42 ரன்களை எடுத்திருந்தது.

இதையடுத்து இன்று நாலாம் நாள் ஆட்டத்தின்போது வங்கதேச அணியின் தொடக்க வீரர்கள் ‘நஜ்முல் உசைன்’, ‘ஜாகிர் ஹசன்’ ஆகியோர் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். 124 ரன்கள் வரையில் வங்கதேசம் விக்கெட் இழக்கவில்லை. இந்த இணையை உமேஷ் யாதவ் பிரித்தார். அவரது பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டிடம் நஜ்முல் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 156 பந்துகளை எதிர்கொண்ட அவர் 67 ரன்கள் எடுத்திருந்தார்.

மற்றொரு தொடக்க வீரர் ஜாகிர் ஹசன் 224 பந்துகளில் சதம் அடித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த யாசிர் அலி 5, லிட்டன் தாஸ் 19, முஷ்பிகுர் ரகிம் 23, நூருல் ஹசன் 3 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர். இந்தியா தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல் 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

உமேஷ் யாதவ், அஷ்வின் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர். வங்கதேசம் வெற்றி பெற இன்னும் 241 ரன்களை எடுக்க வேண்டியுள்ளது. டிரா செய்ய வேண்டும் என்றால் நாளை நாள் முழுவதும் அந்த அணி தாக்குப்பிடிக்க வேண்டும்.

அதே நேரம் இந்திய அணியின் வெற்றிக்கு 4 விக்கெட் மட்டுமே தேவைப்படுவதால் இந்தியா முதல் போட்டியில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories