IND Vs NZ T20: முதல் போட்டியில் நியூஸி., வெற்றி!

ind vs nz t20 - 2026

இந்தியா நியூசிலாந்து முதல் டி20 போட்டி (ராஞ்சி, 27.01.2023)

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

நியூசிலாந்து அணி (176/6, மிட்சல் 59, கான்வே 52, ஆலன் 35, சுந்தர் 2/22) இந்திய அணியை ( 155/9, சுந்தர் 50, சூர்யகுமார் 47, ஹார்திக் 21, பிரேஸ்வெல் 2/31, சாண்ட்னர் 2/11, ஃபெர்கூசன் 2/33) 21 ரன் கள் வித்தியாசத்தில் வென்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது.

நியூசிலாந்தின் தொடக்க வீரர்கள் ஆலன் (35), கான்வே (52) இருவரும் நல்ல தொடக்கத்தைத் தந்தனர். ஆனால் ஐந்தாவது ஓவரில் வாஷிங்டன் சுந்தர் வீசிய பந்தில் ஆலன், சாப்மென் இருவரும் ஆட்டமிழந்தனர். இந்திய பந்துவீச்சாளர்களில் சுழல் பந்து வீச்சாளர்கள் நன்றாக பந்து வீசினார்கள்; ஆனால் வேகப்பந்து வீச்சாளர்கள் மிக மோசமாகப் பந்து வீசினார்கள்.

20 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 6 விக்கட் இழப்பிற்கு 176 ரன் எடுத்திருந்தது. அதுவும் அந்த அர்ஷதீப் வீசிய கடைசி ஓவர் மறக்க முடியாத மோசமான ஓவர்; அதில் அவர் 27 ரன்கள் கொடுத்தார்.

பின்னர் ஆடவந்த இந்திய அணிக்கு மோசமான தொடக்கம் அமைந்தது. இஷான் கிஷன் (4 ரன்), ராகுல் திரிபாதி (ரன் எடுக்கவில்லை), ஷுப்மன் கில் (7 ரன்) ஆகியோர் நாலாவது ஓவருக்குள் ஆட்டமிழந்தனர். சூர்யகுமார் யாதவ் (47 ரன்), ஹார்திக் பாண்ட்யா (21 ரன்) இருவரும் ஓரளவிற்கு இந்திய அணியின் ஸ்கோரை மேம்படுத்தினர். ஆனால் சூர்யா 12ஆவது ஓவரிலும் பாண்ட்யா 13ஆவது ஓவரில் ஆட்டமிழந்தனர்.

அதன் பின்னர் வாஷிங்டன் சுந்தர் (50 ரன்) ஒரு பக்கம் வெற்றிக்காக ஆடிக்கொண்டிருக்க மறு பக்கம் ஒவ்வொருவராக ஆட்டமிழந்துகொண்டிருந்தனர். இறுதியாக 20 ஓவர் முடிவில் இந்திய அணியால் 155 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. அர்ஷதீப் அவருடைய கடைசி ஓவரில் 27 ரன் தராவிட்டால் ஒருவேளை இந்திய அணி வென்றிருக்கலாமோ என்னவோ.

மொத்தத்தில் பேட்டிங், பௌலிங் இரண்டிலும் இந்திய அணியை விட நியூசிலாந்து அணி சிறப்பாகச் செயல்பட்டது. இந்த வெற்றியுடன் நியூசிலாந்து இந்த டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது. டேரியல் மிட்சல் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

பெரிய படங்கள் இணையத்தில் கசிவது புதிய விஷயம் அல்ல. ஆனால், “ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக லீக் ஆனதாக கூறப்படும் இந்தச் சம்பவம், வழக்கமான Piracy நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

பெரிய படங்கள் இணையத்தில் கசிவது புதிய விஷயம் அல்ல. ஆனால், “ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக லீக் ஆனதாக கூறப்படும் இந்தச் சம்பவம், வழக்கமான Piracy நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.

சமூகத்தை அச்சுறுத்தும் ‘டேட்டிங்’ செயலிகளை தடை செய்ய வேண்டும்!

தனிநபர் வாழ்க்கையும் சமூக அமைப்பும் பாதிக்கப்படும் பிரச்சினையாக இது மாறும் அபாயம் மறுக்க முடியாத ஒன்று; தனிநபர் விருப்பம் என்ற பெயரில் பரவும் சீரழிவுகள், சமூக அமைப்பையே சீர்குலைக்கும்

‘அருந்தமிழ் 50’ நூல் வெளியீடு

சாரல் ஆங்கில துணை இதழ் ஆசிரியர் ஜெயஸ்ரீ எம். சாரி எழுதிய கவிதை தொகுப்பான அருந்தமிழ் 50 என்ற நூலை திருவான்மியூரில் உள்ள இலக்கியச் சாரல்

இலக்கியச் சாரலின் மனங்களை வென்ற காவியக் கன்றுகள்!

இலக்கியச் சாரல் ஆசிரியர் ரெ.முரளி மற்றும் ஆங்கில இதழ் ஆசிரியர் ஜெயஶ்ரீ சாரி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். ஜானகி குமரேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, ரேவதி ஸ்ரீநிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார்.

Entertainment News

Popular Categories