December 20, 2025, 3:15 AM
22.6 C
Chennai

IPL 2023: இரண்டாம் நாளில் இரண்டு ஆட்டங்கள்

IMG 20230402 170412 - 2025
#image_title

ஐ.பி.எல் 2023 – இரண்டாம் நாள் – 01.04.2023

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

ஐ.பி.எல் 2023 தொடரின் இரண்டாம் நாளான நேற்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டம் மொஹாலியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையே நடந்தது. இரண்டாவது ஆட்டம் லக்னோவில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் இடையே நடந்தது.

பஞ்சாப் vs கொல்கொத்தா


பஞ்சாப் அணி (191/5, பனுகா ராஜபக்ஷா 50, ஷிகர் தவான் 40, சாம் கரன் 26, பிரப்சிம்ரன் சிங் 23, டிம் சௌதீ 2/54) கொல்கொத்தா அணியை (16 ஓவரில் 146/7, வெங்கடேஷ் ஐயர் 34, ரசல் 35, ராணா 24, ரஹமானுல்லா 22, அர்ஷதீப் சிங் 3/19) டக்வொர்த் லூயிச் முறையில் 7 ரன் வித்தியாசத்தில் வென்றது.


டாஸ் வென்ற கொல்கொத்தா அணி பஞ்சாப் அணியை மட்டையாடச் சொன்னது. பஞ்சாப் அணியின் மட்டையாளர்கள் அனைவரும் அதிரடியாக ஆடினர். 20 ஓவர் முடிவில் ஓவருக்கு 9.55 ரன் விகிதத்தில் அந்த அனி ஐந்து விக்கட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்திருந்தது.


அதன் பின்னர் ஆட வந்த கொல்கொத்தா அனி முதலில் இருந்தே தடுமாறிகொண்டிருந்தது. பத்தாவது ஓவர் முடிவில் ஐந்து விக்கட் இழப்பிற்கு அந்த அணி 80 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. தோல்வி நிச்சயம் என்ற நிலையில் ரசல் 19 பந்துகளில் 35 ரன் அடித்து கொஞ்சம் நம்பிக்கை ஏற்படுத்தினார். மழைக்கான வாய்ப்பிருந்ததால் வெற்றி வாய்ப்பைப்பெற அந்த அணி முயற்சிசெய்தது. ஆனால் 15ஆவது ஓவரில் ரசலும் 16ஆவது வெங்கடேஷ் ஐயரும் ஆட்டமிழக்க, மழையும் பெய்யத்தொடங்க, கொல்கொத்தா அணி தோல்வியைத் தழுவியது.


லக்னோ vs டெல்லி


லக்னோ அணி (193/6, மெயர்ஸ் 73, நிக்கொலஸ் பூரன் 36, கலீல் அஹமத் மற்றும் சக்காரிய தலா 2 விக்கட்டுகள்) டெல்லி அணியை (143/9, வார்னர் 56, ரோஸ்கோ 30, மார்க் வுட் 5/14) 50 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
லக்னோ அணியின் கைல் மேயர்ஸ் அதிரடியாக ஆடினார். 38 பந்துகளில் ஏழு சிக்சர், 2 ஃபோருடன் அவர் 73 ரன்கள் அடித்தார்.

அணித்தலைவர் கே.எல். ராகுலைத் தவிர அனைத்து பேட்டர்களும் சிறப்பாக ஆடினர். இதனால் அந்த அணி 20 ஓவர் முடிவில் ஆறு விக்கட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்திருந்தது.
அதன் பின்னர் ஆட வந்த டெல்லி அணி வீரர்கள் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மார்க் ஆண்ட்ரூ வுட்டின் (Mark Andrew Wood) பந்து வீச்சில் நிலைகுலைந்து போனது.

வுட் இங்கிலாந்து அணியின் பேட்டர் மற்றும் ஒரு வலது கை வேகப்பந்து வீச்சாளர். அவர் வீசிய முதல் ஓவரில் இரண்டு விக்கட்டுகள் விழுந்தன. அவரது இரண்டாவது ஓவரில் சர்பராஸ் கான் ஆட்டமிழந்தார்.

வார்னரும் போவெல்லும் ஆடிக் கொண்டிருந்தபோது வுட் ஒரு ஓவர் வீசினார்; அதில் 7 ரன்கள் கொடுத்தார். இறுதியாக 20ஆவது ஓவரை வீச வந்தார்; அப்போது இரண்டு விக்கட்டுகளை வீழ்த்தினார்.

அவரைத்தவிர ஆவேஷ்கானும் ரவி பிஷ்னோய் இருவரும் தலா2 விக்கட்டுகள் எடுத்தனர். இதனால் டெல்லி அணி 20 ஓவர்களி ஒன்பது விக்கட் இழப்பிற்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்விகண்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பரமன் அளித்த பகவத் கீதை!

ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று, ஒரு பூசை முற்றவும் நக்குபு புக்கென, ஆசை பற்றி அறையலுற்றேன்

வாழ்க்கை என்பது எதைப் போன்றது தெரியுமா?

"வாழ்க்கை ஒரு கண்ணாடி போன்றது, நாம் அதை நோக்கிப் புன்னகைக்கும்போது சிறந்த பலன்களைப் பெறுகிறோம்."

தீபம் ஏற்ற வழியில்லை; விரக்தியில் உயிர்த் தியாகம் செய்த பூர்ணசந்திரன் இழப்புக்கு நீதி வேண்டும்!

பூரணசந்திரன் மரணத்திற்கு நீதிகேட்போம். முருகபக்தர்களே அணி திரண்டு வாரீர்: நெல்லை மாநகர் இந்து முன்னணி அழைப்பு!

ஹனுமத் ஜயந்தி; ஒரு லட்சம் வடை மாலையுடன் நாமக்கல் ஆஞ்சநேயர் தரிசனம்!

அனுமனின் அவதாரத் திருநாளான இன்று ஆஞ்சநேயரை தரிசிக்கவும் பிரசாதமாக வடையைப் பெற்றுக்கொள்ளவும் பக்தர்கள் பலர்  ஆலயத்தில் அதிகாலை முதலே குவிந்தனர்.

Topics

பஞ்சாங்கம் டிச.20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பரமன் அளித்த பகவத் கீதை!

ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று, ஒரு பூசை முற்றவும் நக்குபு புக்கென, ஆசை பற்றி அறையலுற்றேன்

வாழ்க்கை என்பது எதைப் போன்றது தெரியுமா?

"வாழ்க்கை ஒரு கண்ணாடி போன்றது, நாம் அதை நோக்கிப் புன்னகைக்கும்போது சிறந்த பலன்களைப் பெறுகிறோம்."

தீபம் ஏற்ற வழியில்லை; விரக்தியில் உயிர்த் தியாகம் செய்த பூர்ணசந்திரன் இழப்புக்கு நீதி வேண்டும்!

பூரணசந்திரன் மரணத்திற்கு நீதிகேட்போம். முருகபக்தர்களே அணி திரண்டு வாரீர்: நெல்லை மாநகர் இந்து முன்னணி அழைப்பு!

ஹனுமத் ஜயந்தி; ஒரு லட்சம் வடை மாலையுடன் நாமக்கல் ஆஞ்சநேயர் தரிசனம்!

அனுமனின் அவதாரத் திருநாளான இன்று ஆஞ்சநேயரை தரிசிக்கவும் பிரசாதமாக வடையைப் பெற்றுக்கொள்ளவும் பக்தர்கள் பலர்  ஆலயத்தில் அதிகாலை முதலே குவிந்தனர்.

The Silent Sanctum: Celestial Tears for a Silent Season

" Together, they watch the dark December clouds, wondering if their immortality is being preserved in a digital tomb—vast, accessible, and heartbreakingly cold.

பஞ்சாங்கம் டிச.19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

திருப்பரங்குன்றம் மலை மீது செல்ல யாரையும் அனுமதிக்கூடாது: புகார் மனு!

மதுரை, திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில், இருப்பதால் மலைமீது செல்லவோ எந்த நிகழ்வும் நடத்தவோ அனுமதிக்க கூடாது என இந்து அமைப்புகள் சார்பாக புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories