December 7, 2025, 12:07 AM
25.6 C
Chennai

IPL 2023: போன மேட்ச் மேஜிக் மாதிரி இப்பவும் நடக்குமா ரிங்கூ?

ipl 2023 matches - 2025
#image_title

ஐ.பி.எல் 2023 – 15ஆம் நாள் – 14.04.2023
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் —

எப்போது இந்த நிலை. ரிங்கூ சிங் பரிதாபம்

ஐ.பி.எல் 2023 தொடரின் 15ஆம் நாளான நேற்று சன்ரைசர்ஸ் ஹதராபாத் மற்றும் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே கொல்கொத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ஹைதராபாத் அணி வென்றது. ஹைதராபாத் அணி (228/4, ஹாரி ப்ரூக் 10), எய்டன் மர்க்ரம் 50, அபிஷேக் ஷர்மா 32, ரசல் 3/22) கொல்கொத்தா அணியை (205/7, ஜெகதீசன் 36, நிதீஷ் ராணா 75, ரிங்கூ சிங் 58) 23 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணிக்கு அந்த அணியின் தொடக்க வீரரான ஹாரி ப்ரூக் 100* ரன்களும், கேப்டன் மார்கரம் 50 ரன்களும் எடுத்துக் கொடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த ஹைதராபாத் அணி 228 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை அடைய களமிறங்கிய கொல்கொத்தா அணிக்கு குர்பாஸ் ரன் எடுக்காமலும், வெங்கடேஷ் ஐயர் 10 ரன்னிலும் சுனில் நரைன் ரன் எடுக்காமலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் கொடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 20 ரன்களுக்கே மூன்று விக்கெட்டுகளை இழந்தது. ஜெகதீசன் 36 ரன்கள் எடுத்து கொடுத்தார். இதன்பின் களமிறங்கிய ரசல் 3 ரன்னில் வெளியேறினார். இதன்பின் கூட்டணி சேர்ந்த நிதிஷ் ராணா – ரிங்கு சிங் ஜோடி, அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி தேவைக்கு ஏற்ப ரன்னும் சேர்த்தது.

மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிதிஷ் ராணா 41 பந்துகளில் 75 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார். கடந்த போட்டியில் கொல்கத்தா அணிக்கு மிரட்டல் வெற்றியை பெற்று கொடுத்த ரிங்கு சிங் இறுதி வரை ஆட்டமிழக்காமல் ஆடினார். ஆனால் கடைசி ஓவரில் 32 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை. “கிரிக்கெட்டின் சராசரி விதி” என்ற ஒரு விதி இருப்பதாகச் சொல்வார்கள். அதுபோல ரிங்குசிங் அல்லது வேறு ஏதேனு ஒரு பேட்டர் ஒவ்வொரு முறையும் கடைசி ஓவரில் ஐந்து அல்லது ஆறு சிக்சர் அடிக்க முடியுமா? அவர் அதிரடியாக விளையாடினாலும், இலக்கு மிகப்பெரியது என்பதால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் மட்டுமே எடுத்த கொல்கத்தா அணி, 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஹைதராபாத் அணி சார்பில் அதிகபட்சமாக மாயன்க் மார்கண்டே மற்றும் மார்கோ ஜென்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

ஹைதராபாத் அணியைச் சேர்ந்த, 55 பந்துகளில் 12 ஃபோர், 3 சிக்சர்களுடன் ஆட்டமிழக்காமல் 100 ரன் அடித்த ஹாரி ப்ரூக் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார். அதிரடியாக பேட்டிங் செய்யக்கூடிய ரசலும் நரேனும் இதுவரை சரியாக ஆடாதது கொல்கொத்தா அணிக்கு சிக்கலை ஏற்படுத்துகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories