இந்திய அணி முதல் இன்னிங்சில் கேப்டன் விராத் கோஹ்லிக்கு எதிராக எல்பிடபுள்யு முறையீடு செய்த இங்கிலாந்து வேகம் ஜேம்ஸ் ஆண்டர்சன், நடுவர் குமார் தர்மசேனா அவுட் கொடுக்காததால் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது குறித்து கள நடுவர்கள் புகார் செய்ததை அடுத்து, ஐசிசி போட்டி நடுவர் பைகிராப்ட் விசாரணை நடத்தினார். அதில் ஆஜரான ஆண்டர்சன் தனது தவறை ஒப்புக் கொண்டார். அவருக்கு போட்டிக்கான ஊதியத்தில் 15 சதவீத அபராதம் விதிக்கப்பட்டதுடன், ஒரு தரக்குறைவு புள்ளியும் வழங்கப்பட்டது.
Popular Categories




