நட்பு கால்பந்து போட்டி: சுனில் செட்ரி விலகல்

05 Nov14 Dhin Sunil chhetri - 2026

ஜோர்டான் அணியுடன் நடைபெற உள்ள நட்பு கால்பந்து போட்டியில் இருந்து இந்திய அணி கேப்டன் சுனில் செட்ரி காயம் காரணமாக விலகியுள்ளார்.

இந்திய கால்பந்து அணி சர்வதேச போட்டியில் விளையாட உள்ளதால் ஐஎஸ்எல் 5வது சீசன் தொடரில் 2வது முறையாக மீண்டும் இடைவெளி விடப்பட்டுள்ளது. இந்தியாவின் முக்கிய கால்பந்து தொடராக மாறியுள்ளது ஐஎஸ்எல் எனப்படும் இந்தியன் சூப்பர் லீக். முந்தைய சீசன்கள் பெரிய இடைவெளி இன்றி 5, 6 மாதங்கள் தொடர்ந்து நடத்தப்பட்ட நிலையில், நடப்பு 5வது சீசனுக்கு முழுமையாக போட்டி அட்டவணை வெளியிடப்படவில்லை. அதுமட்டுமின்றி அறிவிக்கப்பட்ட அட்டவணையிலும் 2 பெரிய இடைவெளி உள்ளது. காரணம் ஐஎஸ்எல் அணிகளில் இடம் பிடித்துள்ள பல வீரர்கள் இந்திய அணியிலும் இடம் பெற்றிருப்பதுதான். இந்திய அணி சர்வதேச போட்டிகளில் விளையாட வசதியாக இந்த இடைவெளிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த சீசனின் முதல் போட்டி செப். 29ம் தேதி கொல்கத்தாவில் நடந்தது. தொடர்ந்து 9 லீக் ஆட்டங்கள் நடந்த நிலையில் அக். 8-16 வரை 9 நாட்களுக்கு இடைவெளி விடப்பட்டது. இந்திய அணி சீனாவுடன் நட்பு ரீதியிலானபோட்டியில் விளையாடியதே இதற்கு காரணம்.

இந்நிலையில் 2வது முறையாக 34வது லீக் போட்டி முடிந்ததும் மீண்டும் 9 நாட்களுக்கு (நவ. 12-20) போட்டி கிடையாது. இந்தியா – ஜோர்டான் அணிகள் நவ.17ல் நட்பு ரீதியிலான போட்டியில் மோதுவதால் இந்த இடைவெளி.
அடுத்து ஆசிய கோப்பை தொடரில் (ஜன 5- பிப்.1, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்), இந்திய அணி ஜன. 6ம் தேதி தாய்லாந்துடனும், ஜன. 10ம் தேதி ஐக்கிய அரசு எமிரேட்சுடனும், ஜன. 14ம் தேதி பக்ரைனுடனும் மோத உள்ளது. இதையொட்டி டிச. 16 வரை மட்டுமே போட்டிகள் நடைபெற உள்ளன. ஆசிய தொடரில் லீக் சுற்றுடன் இந்திய அணி விடை பெற நேர்ந்தால் ஐஎஸ்எல் போட்டி உடனே தொடங்கலாம். ஜன.20-22 வரை நடைபெறும் கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றால் ஐஎஸ்எல் போட்டி தள்ளிப்போகும். இந்த முடிவுகளைப் பொறுத்தே ஐஎஸ்எல் அடுத்த கட்ட போட்டி அட்டவணை தயாராகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories