உஷார்! ஏடிஎம்-ல் உதவி செய்வதாகக் கூறி பணத்தை சுருட்டும் பெண்!

sitalakshmi - 2026

போடி சுப்புராஜ் நகர் புதுக்காலனியை சேர்ந்தவர் சந்திரசேகரன். முன்னாள் ராணுவ வீரரான இவர் கடந்த 7 வருடத்துக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி சந்திரா (51) கணவரின் ராணுவ ஓய்வூதிய பணத்தை பெற்று வருகிறார். இவர் ஒய்வூதிய பணத்தை எடுப்பதற்காக கடந்த 16-ந்தேதி போடியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியின் ஏ.டி.எம். மையத்திற்கு சென்றார்.

அங்கு ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்க தெரியாமல் நின்றிருந்தபோது, ஒரு பெண் தான் பணம் எடுத்து தருவதாக சந்திராவிடம் கூறியுள்ளார். உடனே சந்திரா ஏ.டி.எம். கார்டை அந்த பெண்ணிடம் கொடுத்து விட்டு, ரகசிய குறியீட்டு எண்ணையும் தெரிவித்துள்ளார்.

ஏ.டி.எம். எந்திரத்தில் சந்திரா கொடுத்த கார்டை பயன்படுத்திய அந்த பெண் இந்த கார்டுக்கு பணம் வரவில்லை என்றும், வேறு ஏ.டி.எம். மையத்திற்கு சென்று பாருங்கள் என்றும் கூறியுள்ளார்.

எனவே சந்திரா வேறு ஏ.டி.எம். மையத்திற்கு சென்று பார்த்தபோது அவரது வங்கி கணக்கில் பணம் இல்லை என காண்பித்தது. மேலும் சந்திராவின் செல்போன் எண்ணுக்கு, அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.20 ஆயிரம் பணம் எடுத்துள்ளதாக குறுந்தகவலும் வந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த சந்திரா முதலில் சென்ற ஏ.டி.எம். மையத்துக்கு சென்று பார்த்தார். அப்போது அந்த பெண் மாயமாகியிருந்தது தெரிந்தது. எனவே அவர் இதுகுறித்து போடி நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்

இந்நிலையில் நேற்று முன்தினம் போடி பஸ் நிலையத்தில் சுற்றித்திரிந்த ஒரு பெண்ணை சந்திரா தனது உறவினர் உதவியுடன் பிடித்து போடி நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

காவலரின் விசாரணையில் அந்த பெண் புதுக்கோட்டை ஈ.வெ.ரா.நகரை சேர்ந்த ராமர் மனைவி சீதாலட்சுமி (40) என்பதும், சந்திராவிடம் ஏ.டி.எம்.கார்டு மூலம் ரூ.20 ஆயிரம் மோசடி செய்ததும், இதேபோல் அவர் பல ஊர்களில் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுத்து தருவதாக கூறி மோசடி செய்து சிறைக்கு சென்று வந்தவர் என்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து காவல்துறையினர் சீதாலட்சுமியை கைது செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 29 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

ஒரு தேசத்தின் ஆன்மா, அதன் மக்கள் தாம்.  மேலும் அந்த தேசத்தின் மக்கள் உறுதி பூண்டார்கள் என்று சொன்னால், எந்த ஒரு சக்தியாலும் அவர்களை அவர்களின் கனவிலிருந்து அகற்றிவிட முடியாது.   தேச நிர்மாணத்திலே மக்களின் பங்களிப்பின் இந்தச் சக்தி

கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

ஆண் பெண் உறவை நெறிப்படுத்த தர்மமும் மரபும் சில விதிமுறைகளை வகுத்தன. அவை குடும்ப அமைப்பை வலுப்படுத்தவும், சமுதாயத்தில் ஒழுக்கம்,  பண்பாடு, பாதுகாப்பு போன்றவற்றைப் பேணவும் உதவுகின்றன. 

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 29 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

ஒரு தேசத்தின் ஆன்மா, அதன் மக்கள் தாம்.  மேலும் அந்த தேசத்தின் மக்கள் உறுதி பூண்டார்கள் என்று சொன்னால், எந்த ஒரு சக்தியாலும் அவர்களை அவர்களின் கனவிலிருந்து அகற்றிவிட முடியாது.   தேச நிர்மாணத்திலே மக்களின் பங்களிப்பின் இந்தச் சக்தி

கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

ஆண் பெண் உறவை நெறிப்படுத்த தர்மமும் மரபும் சில விதிமுறைகளை வகுத்தன. அவை குடும்ப அமைப்பை வலுப்படுத்தவும், சமுதாயத்தில் ஒழுக்கம்,  பண்பாடு, பாதுகாப்பு போன்றவற்றைப் பேணவும் உதவுகின்றன. 

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

Entertainment News

Popular Categories