December 5, 2025, 7:03 PM
26.7 C
Chennai

உஷார்! ஏடிஎம்-ல் உதவி செய்வதாகக் கூறி பணத்தை சுருட்டும் பெண்!

sitalakshmi - 2025

போடி சுப்புராஜ் நகர் புதுக்காலனியை சேர்ந்தவர் சந்திரசேகரன். முன்னாள் ராணுவ வீரரான இவர் கடந்த 7 வருடத்துக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி சந்திரா (51) கணவரின் ராணுவ ஓய்வூதிய பணத்தை பெற்று வருகிறார். இவர் ஒய்வூதிய பணத்தை எடுப்பதற்காக கடந்த 16-ந்தேதி போடியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியின் ஏ.டி.எம். மையத்திற்கு சென்றார்.

அங்கு ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்க தெரியாமல் நின்றிருந்தபோது, ஒரு பெண் தான் பணம் எடுத்து தருவதாக சந்திராவிடம் கூறியுள்ளார். உடனே சந்திரா ஏ.டி.எம். கார்டை அந்த பெண்ணிடம் கொடுத்து விட்டு, ரகசிய குறியீட்டு எண்ணையும் தெரிவித்துள்ளார்.

ஏ.டி.எம். எந்திரத்தில் சந்திரா கொடுத்த கார்டை பயன்படுத்திய அந்த பெண் இந்த கார்டுக்கு பணம் வரவில்லை என்றும், வேறு ஏ.டி.எம். மையத்திற்கு சென்று பாருங்கள் என்றும் கூறியுள்ளார்.

எனவே சந்திரா வேறு ஏ.டி.எம். மையத்திற்கு சென்று பார்த்தபோது அவரது வங்கி கணக்கில் பணம் இல்லை என காண்பித்தது. மேலும் சந்திராவின் செல்போன் எண்ணுக்கு, அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.20 ஆயிரம் பணம் எடுத்துள்ளதாக குறுந்தகவலும் வந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த சந்திரா முதலில் சென்ற ஏ.டி.எம். மையத்துக்கு சென்று பார்த்தார். அப்போது அந்த பெண் மாயமாகியிருந்தது தெரிந்தது. எனவே அவர் இதுகுறித்து போடி நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் போடி பஸ் நிலையத்தில் சுற்றித்திரிந்த ஒரு பெண்ணை சந்திரா தனது உறவினர் உதவியுடன் பிடித்து போடி நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

காவலரின் விசாரணையில் அந்த பெண் புதுக்கோட்டை ஈ.வெ.ரா.நகரை சேர்ந்த ராமர் மனைவி சீதாலட்சுமி (40) என்பதும், சந்திராவிடம் ஏ.டி.எம்.கார்டு மூலம் ரூ.20 ஆயிரம் மோசடி செய்ததும், இதேபோல் அவர் பல ஊர்களில் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுத்து தருவதாக கூறி மோசடி செய்து சிறைக்கு சென்று வந்தவர் என்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து காவல்துறையினர் சீதாலட்சுமியை கைது செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories