February 20, 2026, 2:03 PM
31.2 C
Chennai

அப்ளிகேஷன் பாஸாகணுமா.. அப்ப ரூ.3000: லஞ்சம் கேட்ட அலுவலர் கைது!

geetha - 2026

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள கிராமம் சிறுவாச்சூர். இங்கு வசித்து வரும் விவசாயி வெங்கடேசன். இவருடைய மகள் பிரியா.. 10-ம் வகுப்பு வரை படித்த பெண்ணுக்கு போன 1-ம் தேதி வெங்கடேசன் கல்யாணம் செய்து வைத்தார்.

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் ரூ.25 ஆயிரம் ரொக்கமும், அரை பவுன் தங்கமும் அரசு தந்து வருகிறது. அதனால் பிரியாவின் கல்யாணத்துக்கு முன்பு, ஆன்-லைனில் வெங்கடேசன் விண்ணப்பித்தார்.

இது தொடர்பாக தலைவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு நேரிலும் சென்று விசாரிக்க முடிவு செய்து, தனது அக்கா மகன் கார்த்திக்கை அனுப்பி வைத்தார்.

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு கார்த்திக் சென்றுள்ளார்.. அப்போது, சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் கீதா அங்கிருந்தார்.. இந்த பெண் அதிகாரிக்கு 56 வயதாகிறது.. திருமண உதவித்தொகை விண்ணப்பம் குறித்து கார்த்திக் கீதாவிடம் கேட்டார்.

அதற்கு கீதா, “அப்ளிகேஷன் ஆன்லைனில் வந்துள்ளது.. இதை நேரில் வந்து விசாரிக்க வேண்டும்.. இதற்கு மாவட்டசமூக நல ஆபீசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.. அப்படி பரிந்துரை செய்ய, 3 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வேண்டும் என்று கீதா கேட்டுள்ளார்.

அதற்கு கார்த்திக் மறுத்துள்ளார்.. அரசு தரும் பணத்தை தருவதற்கு லஞ்சம் எதற்கு, பணம் தர முடியாது என்று சொன்னதாகவும், உடனே கோபமடைந்த கீதா, அந்த விண்ணப்பத்தை தூக்கி வீசியதாகவும் சொல்லப்படுகிறது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கார்த்திக், “சரி… நீங்கள் கேட்ட 3 ஆயிரம் ரூபாய் தரேன்” என்று சொல்லிவிட்டு வெளியே வந்தார்.. உடனடியாக சேலம் லஞ்ச ஒழிப்பு காவல்துறைக்கு தகவல் சொன்னார்.

உடனே லஞ்ச ஒழிப்பு காவல்துறை, பெண் அதிகாரி கீதாவை கையும், களவுமாக பிடிக்க முடிவு செய்து, கார்த்திக்கிடம் ரசாயனம் தடவிய பணத்தை தந்து அனுப்ப முடிவு செய்தனர்.

கீதாவுக்கு போன் செய்த கார்த்திக், “பணத்துடன் வந்திருக்கிறேன்.. ஆபீஸ் வளாக மரத்தடியில் காத்திருக்கிறேன்” என்றார்… உடனே கீதாவும் கார்த்திக்கை தேடி மரத்தடிக்கு வந்தார்.. கார்த்திக்கிடம் லஞ்ச பணத்தையும் வாங்கி உள்ளார். அப்போது மறைந்திருந்த காவலர்கள், கீதாவை அதிரடியாக கைது செய்தனர். இப்போது கீதாவிடம் விசாரணை நடந்து வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

Topics

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

உணவே மருந்து! சர்க்கரை, இதய நோய்களில் இருந்து காத்துக் கொள்க!

இவ்வாறு உணவை சரிவிகிதமாக எடுத்து உடன் உடற்பயிற்சியையும் சேர்த்தால், நோயின்றி வாழ்வீர்கள் என்பது திண்ணம்.

ரம்ஜான்-க்காக கூடுதல் செலவு எனினும் தாராள நிதி ஒதுக்கீடு! கோவில்கள் என்றால் பாரபட்சம்!

இல்லை என்றால் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இந்து சமுதாயம் தனது இந்து ஓட்டு வங்கியின் மூலம் திமுக அரசுக்கு தக்க பதிலடி தந்தே தீரும்

Entertainment News

Popular Categories