டாஸ்மாக் அவலம்: போதையில் ஓட்டிய இருசக்கர வாகனம்! தந்தையால் மகனுக்கு நேர்ந்த விபரீதம்!

tasmak - 2026

ஜெயங்கொண்டம் அருகே தேவாமங்கலம் என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் செல்வம். இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு அமுதன், அகிலேஸ்வரன் என்ற இரு மகன்கள் உள்ளனர். செல்வம் திருப்பூரில் பனியன் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் கொரோனாவால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் அவர் குடும்பத்துடன் அரியலூர் கண்டியங்கொல்லை கிராமத்தில் உள்ள தனது மாமனார் வீட்டில் வந்து தங்கியிருந்தார்.

இந்நிலையில் மதுப்பழக்கத்திற்கு அடிமையான அவர் மீண்டும் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் திறக்கப்பட்ட நிலையில் தினமும் குடித்து வந்துள்ளார். மேலும் சமீபத்திலும் அவர் அளவுக்கு மீறி மது குடித்துள்ளார்.

tasmak 1 - 2026

பின்னர் தனது தனது செல்போனை பழுது பார்ப்பதற்காக மூத்த மகனை அழைத்துக்கொண்டு கடைக்கு சென்றுள்ளார். அதனை தொடர்ந்து தனது உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்ற அவர் அங்கும் குடித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து அவர் தனது மகனை பைக்கின் டேங்க் மீது அமர வைத்து மீண்டும் வீட்டிற்கு திரும்பியுள்ளார். மேலும் போதை தலைக்கேறிய நிலையில் அவர் வண்டியை தாறுமாறாக ஓட்டிச் சென்றுள்ளார். அப்பொழுது குழந்தை அமுதன் மோட்டார் சைக்கிளில் இருந்து வழுக்கி கீழே விழுந்துள்ளார்.

ஆனால் அதனை கூட கவனிக்காமல் செல்வம் வண்டியை ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் அவ்வழியாக வந்த இளைஞர்கள் 4 பேர் குழந்தை சாலையில் படுகாயங்களுடன் கிடப்பதை கண்டு, உடனடியாக குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இதுகுறித்து தெரியவந்த நிலையில் சிறுவனின் தாய் மகாலட்சுமி மற்றும் அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.

அதனை தொடர்ந்து போலீசார் குழந்தையின் தந்தை செல்வத்தை தேடியபோது, குழந்தை விழுந்து கிடந்த இடத்தில் அரை கிமீ தொலைவில் சாலையின் அருகே உள்ள முட்புதரில் மோட்டார் சைக்கிளுடன் செல்வம் சுயநினைவின்றி விழுந்து கிடந்துள்ளார். பின்னர் அவரும் சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories