தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட குழந்தைகள் நலக்குழுவில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது.
எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே தங்களின் பதிவுகளை 17-07-2021 க்குள் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
காலிப்பணியிட விவரம் :
ஒப்பந்த அடிப்படையில் உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் பதவிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பபட உள்ளன.
Assistant cum Data Entry Operator கல்வித் தகுதி:
12-ம் வகுப்பு, இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இளநிலை பட்டப்படிப்பு பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் கணினி கல்வியில் பட்டயப்பயிற்சி பெற்றிருத்தல் வேண்டும்.
தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சில் முதுநிலை தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
கணிணி இயக்குவதில் இரண்டு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு:
அதிகபட்சம் 40 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருக்க கூடாது..
மேற்கண்ட பதவிக்கு தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் புகைப்படத்துடன் 17.07.2021 அன்று மாலை 5.30 ற்குள் கீழ்கண்ட முகவரியில் வந்து சேரும் வகையில் அனுப்பப்பட வேண்டும்.
முகவரி :
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
இணைப்பு கட்டிடடம், 3-வது தளம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 11.
நாகர்கோவில் – 629 001.