திருமணமான ஒரு மாதத்தில் கணவன் தற்கொலை ! மனைவி கண்முன்னே நடந்த பரிதாபம் !

makeshkumar - 2026வேலூர் அடுத்த கணியம்பாடி என்எஸ்கே நகர், மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மகேஷ்குமார்  வயது 30, ராணுவ வீரரான இவர் நாகாலாந்து பகுதியில் பணியாற்றி வந்தார்.

கடந்த மாதம் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த மகேஷ்குமாருக்கும், கணியம்பாடி பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரி  வயது 23,  என்பவருக்கும் கடந்த மாதம் 11-ம் தேதி திருமணம் நடைபெற்றது. புவனேஸ்வரி கணியம்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார்.

திருமணத்துக்கு பிறகு தம்பதி இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.  மகேஷ்குமார் நேற்று காலை தனது மனைவி புவனேஸ்வரியுடன் இரு சக்கர வாகனத்தில் வேலூர் வழியாக ரங்காபுரம் நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தார்.makeshkumar 1 - 2026அப்போது, தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது. ஆட்சியர் அலுவலகம் எதிரேயுள்ள மேம்பாலம் வழியாக சென்றுக்கொண்டிருந்தபோது இருவருக்கும் இடையேயான சண்டை அதிகரித்தது. அப்போது, மேம்பாலத்தில் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு இருவரும் கீழே இறங்கினர்.

அதன்பிறகும் 2 பேருக்கும் இடையே தகராறு அதிகமானது. இருவரும் ஒருவருகொருவர் கடும் வார்த்தைகளை கூறி சண்டையிட்டனர். இவர்களது சண்டையை அவ்வழியே போவாரும் வருவாரும் வேடிக்கை பார்த்தபடியே சென்றனர்.

இதனால், மனமுடைந்த மகேஷ் குமார் சட்டென்று  மேம்பாலம் மீது ஏறி அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத புவனேஸ்வரி மேம்பாலம் மேலே இருந்து கணவரின் உடலை பார்த்து கதறி அழுதார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் சத்துவாச்சாரி காவல் உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் அங்கு விரைந்து சென்று, மகேஷ்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம் பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த சத்துவாச்சாரி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் ராணுவ வீரர் தற்கொலை செய்து கொண்ட இந்த சம்பவம் நேற்று அப்பகுதியில் அதிர்ச்சியையும்,சலசலப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

Topics

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

Entertainment News

Popular Categories