February 23, 2026, 8:14 AM
26 C
Chennai

கர்நாடகா-காவிரி நதியில்தொங்குப்பாலம் அமைக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை ..

கர்நாடகா மாநிலத்தில் துபாரேயில் யானைகள் முகாமுக்கு செல்ல ஆபத்தான முறையில் காவிரி ஆற்றை சுற்றுலா பயணிகள் கடந்து செல்வதால் இதனால் ஏற்படும் விபத்தை தவிர்க்க அங்கு தொங்குப்பாலம் அமைக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  கர்நாடகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் குடகு மாவட்டம் அமைந்துள்ளது. கர்நாடகத்தில் சுவிட்சர்லாந்து என அழைக்கப்படும் குடகு மாவட்டத்தில் எப்போதும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இதனால் கர்நாடகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடகிற்கு வந்து செல்கிறார்கள். குடகில் துபாரே, ராஜாசீட் பகுதிகளில் ஏராளமான மக்கள் குவிவார்கள். துபாரேயில் யானை சவாரி, படகு சவாரி செய்து மகிழ்வார்கள். படகு சவாரி ரத்து இந்த நிலையில் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளதால் துபாரேயில் படகு சவாரி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும் துபாரேயில் யானை சவாரி செல்ல காவிரி ஆற்றை கடந்து தான் யானை முகாமிற்கு செல்ல வேண்டும். படகுகள் மூலமாக சுற்றுலா பயணிகள் யானைகள் முகாமிற்கு சென்று வந்தனர்.

ஆனால் தற்போது காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைவு காரணமாக படகு சவாரி ரத்து செய்யப்பட்டுள்ளதால், யானைகள் முகாமிற்கு செல்ல முடியாமல் சுற்றுலா பயணிகள் தவித்து வருகிறார்கள். ஆபத்தான பயணம் மேலும் சுற்றுலா பயணிகள் யானைகள் முகாமிற்கு செல்ல காவிரி ஆற்றை ஆபத்தான முறையில் கடந்து செல்கிறார்கள். அதாவது, குறைவான தண்ணீர் ஓடுவதால், கயிறு கட்டி சுற்றுலா பயணிகள் ஆற்றுக்குள் இறங்கி இக்கரையில் இருந்து அக்கரைக்கு செல்கிறார்கள். இதனால் பலர் வழுக்கி விழுந்தும், தவறி விழுந்தும் காயம் அடைந்து வருகிறார்கள். இதனால் வனத்துறையினரும், போலீசாரும் யாரும் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று கேட்டு வருகிறார்கள். ஆனாலும் சுற்றுலா பயணிகள் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில், துபாரே பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே தொங்கு பாலம் அமைக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

725433 kudagu - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

Entertainment News

Popular Categories