December 8, 2025, 3:36 PM
28.2 C
Chennai

கர்நாடகா-காவிரி நதியில்தொங்குப்பாலம் அமைக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை ..

கர்நாடகா மாநிலத்தில் துபாரேயில் யானைகள் முகாமுக்கு செல்ல ஆபத்தான முறையில் காவிரி ஆற்றை சுற்றுலா பயணிகள் கடந்து செல்வதால் இதனால் ஏற்படும் விபத்தை தவிர்க்க அங்கு தொங்குப்பாலம் அமைக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  கர்நாடகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் குடகு மாவட்டம் அமைந்துள்ளது. கர்நாடகத்தில் சுவிட்சர்லாந்து என அழைக்கப்படும் குடகு மாவட்டத்தில் எப்போதும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இதனால் கர்நாடகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடகிற்கு வந்து செல்கிறார்கள். குடகில் துபாரே, ராஜாசீட் பகுதிகளில் ஏராளமான மக்கள் குவிவார்கள். துபாரேயில் யானை சவாரி, படகு சவாரி செய்து மகிழ்வார்கள். படகு சவாரி ரத்து இந்த நிலையில் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளதால் துபாரேயில் படகு சவாரி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும் துபாரேயில் யானை சவாரி செல்ல காவிரி ஆற்றை கடந்து தான் யானை முகாமிற்கு செல்ல வேண்டும். படகுகள் மூலமாக சுற்றுலா பயணிகள் யானைகள் முகாமிற்கு சென்று வந்தனர்.

ஆனால் தற்போது காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைவு காரணமாக படகு சவாரி ரத்து செய்யப்பட்டுள்ளதால், யானைகள் முகாமிற்கு செல்ல முடியாமல் சுற்றுலா பயணிகள் தவித்து வருகிறார்கள். ஆபத்தான பயணம் மேலும் சுற்றுலா பயணிகள் யானைகள் முகாமிற்கு செல்ல காவிரி ஆற்றை ஆபத்தான முறையில் கடந்து செல்கிறார்கள். அதாவது, குறைவான தண்ணீர் ஓடுவதால், கயிறு கட்டி சுற்றுலா பயணிகள் ஆற்றுக்குள் இறங்கி இக்கரையில் இருந்து அக்கரைக்கு செல்கிறார்கள். இதனால் பலர் வழுக்கி விழுந்தும், தவறி விழுந்தும் காயம் அடைந்து வருகிறார்கள். இதனால் வனத்துறையினரும், போலீசாரும் யாரும் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று கேட்டு வருகிறார்கள். ஆனாலும் சுற்றுலா பயணிகள் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில், துபாரே பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே தொங்கு பாலம் அமைக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

725433 kudagu - 2025

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அசுர சக்திகளின் திமிர் அடங்க வேண்டும்!

டில்லி செங்கோட்டை அருகில் நடந்த குண்டுவெடிப்பில் சிலர் மரணமடைந்தனர். கோரமான சம்பவங்கள் நடந்தேறின. ஆனால் அப்படிப்பட்டவையும்,   அதைவிட ஆபத்தான பலவும் நடப்பதற்குத் தயாராக

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

Topics

அசுர சக்திகளின் திமிர் அடங்க வேண்டும்!

டில்லி செங்கோட்டை அருகில் நடந்த குண்டுவெடிப்பில் சிலர் மரணமடைந்தனர். கோரமான சம்பவங்கள் நடந்தேறின. ஆனால் அப்படிப்பட்டவையும்,   அதைவிட ஆபத்தான பலவும் நடப்பதற்குத் தயாராக

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

Entertainment News

Popular Categories