ஏழுமலையான் அருளால் சுபிட்சம்! திருப்பதியில் தமிழக அமைச்சர்கள் சுவாமி தரிசனம்!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தமிழக தமிழக சுற்றுச்சூழல் துறை மற்றும் செய்தித்துறை அமைச்சர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்!

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளதால் அது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்க முடியாது சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கருப்பண்ணன் செய்தியாளர்களிடம் பேசும் போது கூறினார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தமிழக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் ஆகியோர் தங்கள் குடும்பத்துடன் இன்று காலை ஏழுமலையானை தரிசிக்க  வந்திருந்தனர்.

அமைச்சர்களை வரவேற்று, வேதபண்டிதர்கள் மூலம் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்தப் பிரசாதம் வழங்கச் செய்து, ஆசிர்வாதம் செய்து வைத்தனர்.

பின்னர் கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு நவராத்திரி உற்சவம் நாடு முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது.

maxresdefault 12 - 2026நேற்று சுவாமி வீதி உலா வந்ததை குடும்பத்தினருடன் தரிசனம் செய்து இன்று ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தது மகிழ்ச்சியளிக்கிறது. பிரம்மோத்ஸவ விழாவிற்காக தேவஸ்தான அதிகாரிகள் அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்துள்ளனர்.  பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது.

அமைச்சர் செல்லூர் ராஜு அதிமுகவின் பெண்கள் தலைமை ஏற்பார் என்று கூறியது அவருடைய சொந்தக் கருத்து! அவர் அதற்கு விளக்கமும் அளித்துள்ளார். பெண்களுக்கான தேர்தல் கூட்டத்தில் அவர் பேசிய போது அவ்வாறு பேசியதாக தெரிவித்துள்ளார்… என்றார்.

தொடர்ந்து பேசிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் நாடு முழுவதும் நல்ல மழை பெய்து சகல சந்தோஷத்துடன் அனைவரும் இருக்க வேண்டும் என சுவாமியை வேண்டிக் கொண்டேன்!

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் குறித்து கேட்கிறீர்கள்.  ஸ்டெர்லைட் விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளதால் அது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்க இயலாது என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories