நாட்டுக்குத் தேவை… மோடி என்ற அதிரடி மனிதன்!

அன்று லண்டனில் ஒரு தேர்வை நடத்திவிட்டு இந்தியா திரும்ப ஏர் இந்தியாவில் பயணம்! எனக்கு முதல் வகுப்பு டிக்கெட் ! நான் மட்டுமே அமர்ந்திருந்தேன்.

சற்று நேரத்தில் ஒரு மனிதர் வந்தார்.  எங்கேயோ பார்த்தது போல இருக்கிறதே! ஆம் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி.

எங்கள் இருவரையும் தவிர வேறு யாரும் முதல் வகுப்பில் இல்லை. அழைப்பு மணியை அழுத்தினால் பணிப்பெண் தண்ணீரை கொண்டு வருவார்!

ஆனால் அவரோ தானே எழுந்து வழங்குமிடம் சென்று தண்ணீர் குடித்து விட்டு அமர்ந்தார். பார்ப்பதற்கு நல்ல மனிதராக இருக்கிறாரே என நினைத்தேன்!

#சற்று நேரத்தில் அவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். நான் அவரிடம் அரசியல்வாதிகளிடம் அவ்வளவாக பேசுவதில்லை என்றேன். என்னை பற்றி கேட்டுவிட்டு ஒரு வேண்டுகோள் வைத்தார்.

#டாக்டர் குழந்தை நலம் பற்றி தெரியவேண்டும் சொல்லுங்களேன். பிறந்த குழந்தைகளை போஷிப்பதை விட கருவுற்ற தாய்மார்களின் உணவில் கவனம் செலுத்தினால் பின்னர் குழந்தைகள் ஆரோக்கியத்தை பற்றி கவலையில்லை என நான் சொல்ல… ஒரு பேப்பர் பேனாவை எடுத்துக் கொண்டு குறித்து கொள்ள ஆரம்பித்தார்!

ALSO READ:  பராபவ - பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

லண்டனில் இருந்து மும்பைக்கு 9 மணி நேரம். முழுவதும் நான் சொல்வதை எழுதிக்கொண்டார்.  மும்பை வந்தது. நான் பெங்களுக்கும் அவர் ஆமதாபாத்துக்கும் என விடைபெற்றோம்.

இரு மாதங்கள் கழித்து, அவருடைய சுகாதார அமைச்சர் ஜெய்நாராயண் வியாஸ் என்னை அழைத்தார்.  நீங்கள் பவன்ஸ் ஜர்னல் பத்திரிகையில் தாய்மார்கள் ஏழைகளாக இருந்தால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் நலமில்லாதவர்களாகவே இருப்பார்கள் என்று எழுதியதை முதல்வர் படித்துவிட்டு மிகவும் இம்ப்ரஸ் ஆகிவிட்டார். உங்களை காந்தி நகரில் ஒரு கருத்தரங்குக்கு அழைக்கிறார் என அழைப்பு விடுத்தார்.

இந்த நேரத்தில் வேறு ஒரு நிகழ்வை நினைவு கூற விரும்புகிறேன்… மணிப்பால் பல்கலை துணை வேந்தராக இருக்கும் போது கர்நாடக முதல்வர் என்னை பார்க்க விரும்புவதாக தகவல்!

காலை 9 மணிக்கு சந்திக்க நேரம். நானும் போய் அமர்ந்திருந்தேன். மதியம் 2 மணி ஆயிற்று. ஜப்பான் குழு வந்தது. அவர்களுக்காக நேரம் ஒதுக்கப்பட, நான் காத்திருந்தேன். மாலை 5 மணி வரை அழைக்கவில்லை. சரி புறப்படுகிறேன் என சொன்னவுடன் உள்ளே அழைத்தார் முதல்வர்.  யார் நீங்க என்ன வேண்டும் என கேட்டார் அந்த மாண்புமிகு முதல்வர்!

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

sddefault 39 - 2026

எனக்கு ஒன்றும் வேண்டாம் நீங்கள் அழைத்ததால் வந்தேன் என்று சொல்லிவிட்டு வந்தேன்!

இப்போது நாம் மீண்டும் குஜராத்தில் என்ன நடந்தது என சொல்கிறேன்! குஜராத் போனேன் சரியாக காலை மணி 9.45… வாயிலில் மோடியும் அவரது அமைச்சரவை சகாக்களும் வரிசையாக நின்று வரவேற்றனர்!  பத்து மணிக்கு கருத்தரங்கம் ஆரம்பித்தது!

என் அறிமுகம் ஆனவுடன் கருவுற்ற தாய்மார்களின் நலன் பற்றி பேச ஆரம்பித்தேன்! #பேசி முடித்தவுடன் பங்கு பெற்றவர்களை கேள்வி கேட்க சொன்னார் மோடி

தானும் பல சந்தேகங்களை கேட்டார். பிறகு இதோ எனது உத்தரவுகள் நாளை காலையில் இருந்து ஏழை தாய்மார்களுக்கு சத்துணவு திட்டம் அமுலுக்கு வருகிறது என்றார்.

அதன் விளைவு தான் இன்றளவும் நாட்டிலேயே குழந்தைகள் இறப்பு ( infant mortality rate ) விகிதம் மிக குறைந்த மாநிலமாக குஜராத் திகழ்கிறது!

மாதிரி முதல்வர் மோடி தான் A Model CM. இதைச் சொல்வதால் நான் மோடிக்கு ஒட்டு போடுங்கள் என கேட்கவில்லை! அது உங்கள் விருப்பம்! அவர் மாதிரி நல்ல தலைவர்களை உருவாக்குங்கள்.

ALSO READ:  நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

(டாக்டர் ஹெக்டே எனும் பெரிய கல்வி மேதை இவர்..)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories