நாட்டுக்குத் தேவை… மோடி என்ற அதிரடி மனிதன்!

அன்று லண்டனில் ஒரு தேர்வை நடத்திவிட்டு இந்தியா திரும்ப ஏர் இந்தியாவில் பயணம்! எனக்கு முதல் வகுப்பு டிக்கெட் ! நான் மட்டுமே அமர்ந்திருந்தேன்.

சற்று நேரத்தில் ஒரு மனிதர் வந்தார்.  எங்கேயோ பார்த்தது போல இருக்கிறதே! ஆம் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி.

எங்கள் இருவரையும் தவிர வேறு யாரும் முதல் வகுப்பில் இல்லை. அழைப்பு மணியை அழுத்தினால் பணிப்பெண் தண்ணீரை கொண்டு வருவார்!

ஆனால் அவரோ தானே எழுந்து வழங்குமிடம் சென்று தண்ணீர் குடித்து விட்டு அமர்ந்தார். பார்ப்பதற்கு நல்ல மனிதராக இருக்கிறாரே என நினைத்தேன்!

#சற்று நேரத்தில் அவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். நான் அவரிடம் அரசியல்வாதிகளிடம் அவ்வளவாக பேசுவதில்லை என்றேன். என்னை பற்றி கேட்டுவிட்டு ஒரு வேண்டுகோள் வைத்தார்.

#டாக்டர் குழந்தை நலம் பற்றி தெரியவேண்டும் சொல்லுங்களேன். பிறந்த குழந்தைகளை போஷிப்பதை விட கருவுற்ற தாய்மார்களின் உணவில் கவனம் செலுத்தினால் பின்னர் குழந்தைகள் ஆரோக்கியத்தை பற்றி கவலையில்லை என நான் சொல்ல… ஒரு பேப்பர் பேனாவை எடுத்துக் கொண்டு குறித்து கொள்ள ஆரம்பித்தார்!

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

லண்டனில் இருந்து மும்பைக்கு 9 மணி நேரம். முழுவதும் நான் சொல்வதை எழுதிக்கொண்டார்.  மும்பை வந்தது. நான் பெங்களுக்கும் அவர் ஆமதாபாத்துக்கும் என விடைபெற்றோம்.

இரு மாதங்கள் கழித்து, அவருடைய சுகாதார அமைச்சர் ஜெய்நாராயண் வியாஸ் என்னை அழைத்தார்.  நீங்கள் பவன்ஸ் ஜர்னல் பத்திரிகையில் தாய்மார்கள் ஏழைகளாக இருந்தால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் நலமில்லாதவர்களாகவே இருப்பார்கள் என்று எழுதியதை முதல்வர் படித்துவிட்டு மிகவும் இம்ப்ரஸ் ஆகிவிட்டார். உங்களை காந்தி நகரில் ஒரு கருத்தரங்குக்கு அழைக்கிறார் என அழைப்பு விடுத்தார்.

இந்த நேரத்தில் வேறு ஒரு நிகழ்வை நினைவு கூற விரும்புகிறேன்… மணிப்பால் பல்கலை துணை வேந்தராக இருக்கும் போது கர்நாடக முதல்வர் என்னை பார்க்க விரும்புவதாக தகவல்!

காலை 9 மணிக்கு சந்திக்க நேரம். நானும் போய் அமர்ந்திருந்தேன். மதியம் 2 மணி ஆயிற்று. ஜப்பான் குழு வந்தது. அவர்களுக்காக நேரம் ஒதுக்கப்பட, நான் காத்திருந்தேன். மாலை 5 மணி வரை அழைக்கவில்லை. சரி புறப்படுகிறேன் என சொன்னவுடன் உள்ளே அழைத்தார் முதல்வர்.  யார் நீங்க என்ன வேண்டும் என கேட்டார் அந்த மாண்புமிகு முதல்வர்!

ALSO READ:  ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

sddefault 39 - 2026

எனக்கு ஒன்றும் வேண்டாம் நீங்கள் அழைத்ததால் வந்தேன் என்று சொல்லிவிட்டு வந்தேன்!

இப்போது நாம் மீண்டும் குஜராத்தில் என்ன நடந்தது என சொல்கிறேன்! குஜராத் போனேன் சரியாக காலை மணி 9.45… வாயிலில் மோடியும் அவரது அமைச்சரவை சகாக்களும் வரிசையாக நின்று வரவேற்றனர்!  பத்து மணிக்கு கருத்தரங்கம் ஆரம்பித்தது!

என் அறிமுகம் ஆனவுடன் கருவுற்ற தாய்மார்களின் நலன் பற்றி பேச ஆரம்பித்தேன்! #பேசி முடித்தவுடன் பங்கு பெற்றவர்களை கேள்வி கேட்க சொன்னார் மோடி

தானும் பல சந்தேகங்களை கேட்டார். பிறகு இதோ எனது உத்தரவுகள் நாளை காலையில் இருந்து ஏழை தாய்மார்களுக்கு சத்துணவு திட்டம் அமுலுக்கு வருகிறது என்றார்.

அதன் விளைவு தான் இன்றளவும் நாட்டிலேயே குழந்தைகள் இறப்பு ( infant mortality rate ) விகிதம் மிக குறைந்த மாநிலமாக குஜராத் திகழ்கிறது!

மாதிரி முதல்வர் மோடி தான் A Model CM. இதைச் சொல்வதால் நான் மோடிக்கு ஒட்டு போடுங்கள் என கேட்கவில்லை! அது உங்கள் விருப்பம்! அவர் மாதிரி நல்ல தலைவர்களை உருவாக்குங்கள்.

ALSO READ:  சமூகத்தை அச்சுறுத்தும் ‘டேட்டிங்’ செயலிகளை தடை செய்ய வேண்டும்!

(டாக்டர் ஹெக்டே எனும் பெரிய கல்வி மேதை இவர்..)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories