March 17, 2025, 9:17 PM
29.8 C
Chennai

வெடி எப்போன்னாலும் வெடிப்போம்… அது நம் உரிமை! இந்து முன்னணி வி.பி.ஜெயக்குமார்

செங்கோட்டை: இந்துக்களின் பண்டிகையான தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிக்க யாரும் தடை போட முடியாது. திட்டமிட்டபடி பட்டாசு வெடித்து எங்கள் மகிழ்ச்சியை வெளிப் படுத்துவோம்.என இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய போது தெரிவித்தார்.

செங்கோட்டை காவல் நிலையத்துக்கு புகார் ஒன்று அளிப்பது தொடர்பாக, வழக்கறிஞர் அணியுடன் வந்திருந்தார் வி.பி.ஜெயக்குமார். அப்போது அவர் கூறியதாவது….

செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி பிரச்னைக்குப் பின் இரு சமுதாயத்தினரும் அமைதியாக இருந்து வருகிறார்கள். இந்த நேரத்தில் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த சிலர் வாட்ஸ்அப் மூலமாக ஒரு தவறான கருத்தை பதிவு செய்து வருகிறார்கள்

அதில் இஸ்லாமிய மதத்திற்கு வராவிட்டால் சில பிரச்சனைகள் வரும் என்று கூறுகின்றார்கள். அந்த பிரச்னையை குறித்து நாங்கள் செங்கோட்டை காவல் நிலையத்தில் நமது வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த சாக்ரடீஸ் மூலமாக செங்கோட்டை நகரக் காவல் ஆய்வாளரிடம் புகார் மனு அளித்துள்ளோம். அவரும் கண்டிப்பாக வழக்கு பதிவு செய்வேன் என்று உறுதிபடக் கூறியுள்ளார்.

இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஒரு தவறான எண்ணத்தோடு சமுதாயத்திற்குள் பிரச்னையை ஏற்படுத்தும் நோக்கத்தோடு செயல்படுவதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. ஆகவே காவல்துறை துரிதமாக நடவடிக்கை எடுத்து அவர்கள் மீது முறையாக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறோம்.

வரும் தீபாவளியின் போது, குறிப்பிட்ட நேரத்தில்தான் வெடி வெடிக்க வேண்டும் என்று தமிழக அரசு, உச்ச நீதிமன்றம் ஆகியவை வலியுறுத்தியுள்ளன.

ஆனால் இந்துக்கள் உரிமையை நாங்கள் கண்டிப்பாக விட்டுக்கொடுக்க மாட்டோம்! எந்த நேரத்திலும் நாங்கள் வெடி வெடிப்போம்! நாங்கள் எங்கள் விருப்பம் போல், எல்லா நேரத்திலும் வெடிப்போம். தீபாவளியை நாங்கள் சிறப்பாக கொண்டாடுவோம் என்று இதன் மூலம் தெரிவித்துக் கொள்கின்றோம்

மேலும் குறிப்பிட்ட நேரத்தில் வெடித்தால், கண்டிப்பாக பல பிரச்சனைகள் ஏற்படும்! மாசு கட்டுப்பாடு பிரச்னைகள் ஏற்படும். உண்மையில் அரசு அதிகாரிகளும் உச்ச நீதிமன்றமும் மாசு கட்டுப்பாடு ஏற்பட வேண்டுமென்றால் முதலில் அரசு போக்குவரத்து கழக பேருந்துகளை ஆய்வு செய்து அதன் மூலம் வரும் புகையை ஆய்வு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்

எந்த நேரத்திலும் வெடிப்பது என்பது, நிச்சயமாக நீதிமன்ற அவமதிப்பு ஆகாது. இது கண்டிப்பாக நீதி மன்ற அவமதிப்புக்குள் வராது! ஏனென்றால் சாதாரண மக்களுக்கு இந்த விஷயம் தெரியாது! எல்லோரும் டிவி பார்ப்பவர்கள் கிடையாது! எல்லோரும் செய்தித்தாள் படிப்பவர்கள் கிடையாது. அவர்கள் வீட்டில் அவர்கள் வெடி வெடிப்பதை யாரும் தடுக்க முடியாது…. என்று கூறினார் வி.பி.ஜெயக்குமார்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் காட்டு தர்பார் ஆட்சியை நடத்துகிறது திமுக!

கருத்து சுதந்திரத்தை குழி தோண்டி புதைக்கும் திமுகவின் சர்வாதிகார செயலை இந்து முன்னணி சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம் -

திமுக., அரசின் சாராயக் கடை ஊழல்: போராட்டத்தை தடுத்து பாஜக., தலைவர்கள் கைது!

தேதியே அறிவிக்காமல், திடீரென்று ஓருநாள், நாங்கள் போராட்டத்தை முன்னெடுத்தால் உங்களால் என்ன செய்ய முடியும்? - என்று அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

பாரம்பரிய பூர்வீக கோவில்களின் கட்டமைப்பு, ஆன்மீக அம்சங்கள், தல வரலாறு பயிற்சி பட்டறை!

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் பாரம்பரிய பூர்வீக கோவில்களின் கட்டமைப்பு, ஆன்மீக அம்சங்கள் மற்றும் தல வரலாறு பயிற்சி பட்டறை நடைபெற்றது.

பஞ்சாங்கம் மார்ச் 17 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மார்ச்-16 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் காட்டு தர்பார் ஆட்சியை நடத்துகிறது திமுக!

கருத்து சுதந்திரத்தை குழி தோண்டி புதைக்கும் திமுகவின் சர்வாதிகார செயலை இந்து முன்னணி சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம் -

திமுக., அரசின் சாராயக் கடை ஊழல்: போராட்டத்தை தடுத்து பாஜக., தலைவர்கள் கைது!

தேதியே அறிவிக்காமல், திடீரென்று ஓருநாள், நாங்கள் போராட்டத்தை முன்னெடுத்தால் உங்களால் என்ன செய்ய முடியும்? - என்று அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

பாரம்பரிய பூர்வீக கோவில்களின் கட்டமைப்பு, ஆன்மீக அம்சங்கள், தல வரலாறு பயிற்சி பட்டறை!

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் பாரம்பரிய பூர்வீக கோவில்களின் கட்டமைப்பு, ஆன்மீக அம்சங்கள் மற்றும் தல வரலாறு பயிற்சி பட்டறை நடைபெற்றது.

பஞ்சாங்கம் மார்ச் 17 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மார்ச்-16 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஊடகவாதிகளே… திருந்துங்கள் இல்லையேல் திருத்தப்படுவீர்கள்!

ஊடகவாதிகளே ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகத்துறையில் உங்களைப்போல தரமற்ற மனிதர்களால் தான் தேசத்தை அரிக்கும் புற்றுநோய் போல மாறி வருகிறது

தொடர்ந்து ஏமாற்றம் அளிக்கும் வேளாண் நிதிநிலை அறிக்கை!

தொடர்ந்து ஏமாற்றம் அளிக்கும் நிதிநிலை அறிக்கை

பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் வெள்ளி கிழமை மாலை நடை திறக்கப்பட்டது. இன்று காலை பூஜை

Entertainment News

Popular Categories