December 5, 2025, 1:44 PM
26.9 C
Chennai

வெடி எப்போன்னாலும் வெடிப்போம்… அது நம் உரிமை! இந்து முன்னணி வி.பி.ஜெயக்குமார்

செங்கோட்டை: இந்துக்களின் பண்டிகையான தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிக்க யாரும் தடை போட முடியாது. திட்டமிட்டபடி பட்டாசு வெடித்து எங்கள் மகிழ்ச்சியை வெளிப் படுத்துவோம்.என இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய போது தெரிவித்தார்.

செங்கோட்டை காவல் நிலையத்துக்கு புகார் ஒன்று அளிப்பது தொடர்பாக, வழக்கறிஞர் அணியுடன் வந்திருந்தார் வி.பி.ஜெயக்குமார். அப்போது அவர் கூறியதாவது….

செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி பிரச்னைக்குப் பின் இரு சமுதாயத்தினரும் அமைதியாக இருந்து வருகிறார்கள். இந்த நேரத்தில் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த சிலர் வாட்ஸ்அப் மூலமாக ஒரு தவறான கருத்தை பதிவு செய்து வருகிறார்கள்

அதில் இஸ்லாமிய மதத்திற்கு வராவிட்டால் சில பிரச்சனைகள் வரும் என்று கூறுகின்றார்கள். அந்த பிரச்னையை குறித்து நாங்கள் செங்கோட்டை காவல் நிலையத்தில் நமது வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த சாக்ரடீஸ் மூலமாக செங்கோட்டை நகரக் காவல் ஆய்வாளரிடம் புகார் மனு அளித்துள்ளோம். அவரும் கண்டிப்பாக வழக்கு பதிவு செய்வேன் என்று உறுதிபடக் கூறியுள்ளார்.

இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஒரு தவறான எண்ணத்தோடு சமுதாயத்திற்குள் பிரச்னையை ஏற்படுத்தும் நோக்கத்தோடு செயல்படுவதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. ஆகவே காவல்துறை துரிதமாக நடவடிக்கை எடுத்து அவர்கள் மீது முறையாக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறோம்.

வரும் தீபாவளியின் போது, குறிப்பிட்ட நேரத்தில்தான் வெடி வெடிக்க வேண்டும் என்று தமிழக அரசு, உச்ச நீதிமன்றம் ஆகியவை வலியுறுத்தியுள்ளன.

ஆனால் இந்துக்கள் உரிமையை நாங்கள் கண்டிப்பாக விட்டுக்கொடுக்க மாட்டோம்! எந்த நேரத்திலும் நாங்கள் வெடி வெடிப்போம்! நாங்கள் எங்கள் விருப்பம் போல், எல்லா நேரத்திலும் வெடிப்போம். தீபாவளியை நாங்கள் சிறப்பாக கொண்டாடுவோம் என்று இதன் மூலம் தெரிவித்துக் கொள்கின்றோம்

மேலும் குறிப்பிட்ட நேரத்தில் வெடித்தால், கண்டிப்பாக பல பிரச்சனைகள் ஏற்படும்! மாசு கட்டுப்பாடு பிரச்னைகள் ஏற்படும். உண்மையில் அரசு அதிகாரிகளும் உச்ச நீதிமன்றமும் மாசு கட்டுப்பாடு ஏற்பட வேண்டுமென்றால் முதலில் அரசு போக்குவரத்து கழக பேருந்துகளை ஆய்வு செய்து அதன் மூலம் வரும் புகையை ஆய்வு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்

எந்த நேரத்திலும் வெடிப்பது என்பது, நிச்சயமாக நீதிமன்ற அவமதிப்பு ஆகாது. இது கண்டிப்பாக நீதி மன்ற அவமதிப்புக்குள் வராது! ஏனென்றால் சாதாரண மக்களுக்கு இந்த விஷயம் தெரியாது! எல்லோரும் டிவி பார்ப்பவர்கள் கிடையாது! எல்லோரும் செய்தித்தாள் படிப்பவர்கள் கிடையாது. அவர்கள் வீட்டில் அவர்கள் வெடி வெடிப்பதை யாரும் தடுக்க முடியாது…. என்று கூறினார் வி.பி.ஜெயக்குமார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories