தான்சானியாவில் நிலநடுக்கம்: 13 பேர் பலி; 200 பேர் காயம்

Published:

தான்சானியா நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 13 பேர் உயிரிழந்தனர். 200 க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

உகாண்டா மற்றும் ருவாண்டா ஆகிய நாடுகளின் எல்லைகளுக்கு அருகே நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தில் புகோபா நகர் பெரிதும் சேதமடைந்தது. அந்நகரில் பல இடங்களில் கட்டடங்கள், வீடுகள் இடிந்து பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. இதில் 13 பேர் உயிரிழந்தனர். 200க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related articles

Recent articles

spot_img