ஜப்பானில் முதல்முறையாக ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு அங்கீகாரம்

Published:

டோக்கியோ: ஜப்பானில் முதன் முறையாக டோக்கியோ மாவட்டத்தில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான சமூக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள ஷிபுயா வார்ட் உள்ளூர் சபையில் ஓரின சேர்க்கையாளர்களுக்கான சமூக அங்கீகாரம் வழங்கப்படுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏப்.1 முதல் இது நடைமுறைக்கு வருகிறது. இந்த அங்கீகாரத்தின் காரணமாக இனி ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு திருமண சான்றிதழ்கள் வழங்கப்படும். இதனால் சமூகத்தில் அவர்களும் சாதாரண மனிதர்களைப் போல் வாழ முடியும். வரிச் சலுகைகள், சமூக பாதுகாப்பு மற்றும் சொத்துரிமை என்று சராசரி மனிதனுக்குக் கிடைக்கக் கூடிய அனைத்தும் அவர்களுக்கும் கிடைக்கும். சிவில் சட்டப்படி, ஒரே பாலினத்தை சேர்ந்தவர்களின் திருமணத்தை அங்கீகரிக்காத ஒரு நாட்டில், இது மிகவும் முக்கியமான ஒரு நடவடிக்கை என்று உள்ளூர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related articles

Recent articles

spot_img