வாஷிங்டன்:
அமெரிக்கா அதிபர் டிரம்ப் குடும்பத்துடன் இந்தியாவுக்கு வருகை தர வேண்டும் என பிரதமர் மோடி, அவருக்கு அழைப்பு விடுத்துள்ளார். தானும் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டும் என வெகு ஆர்வமாக இருப்பதாக டிரம்ப்பின் மகள் இவான்க்கா தெரிவித்துள்ளார்.
அமெரிக்க சென்ற பிரதமர் மோடிக்கு வெள்ளை மாளிகையில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப் பட்டது. பின்னர் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்துப் பேசினர். அப்போது, இந்தியாவுக்கு டிரம்ப் குடும்பத்துடன் வருகை தர வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இதை ஏற்ற டிரம்ப், தன் மகள் இவான்கா, இந்தியா வருவதற்கு மிகவும் ஆர்வமுடன் இருப்பதாகக் கூறினார். இதையடுத்து இவான்காவை இந்தியாவில் வரவேற்பதற்கு தாமும் ஆவலுடன் காத்திருப்பதாக மோடி பதிலளித்தார்.