சிங்கபூர்: அரசுக்கு ஆலோசனை வழங்கும் வாய்ப்பு எதிர்க்கட்சிக்கு வரட்டும்!

singapore-parliament-oppsn
singapore-parliament-oppsn

சிங்கப்பூர் நாடாளுமன்றம்: எதிர்க் கட்சித் தலைவர் பிரிதாம்சிங்!

தேவையோ, தேவை இல்லையோ சிங்கப்பூருக்கு இப்போது ஒரு எதிர்க் கட்சித் தலைவர் உருவாகிவிட்டார். பத்து உறுப்பினர்கள் வென்ற பாட்டாளிக் கட்சியின் தலைவருக்கு அப் பதவி அளிக்கப்பட்டிருகிறது. இதனை அதிகார பூர்வமாக அறிவித்தவர் நம் பிரதமர் லீ அவர்கள்.

இதற்கு முன் பொத்தோங் பாசிர் தொகுதி உறுப்பினர் தியாம் சீ டோங் இப் பதவியை ஏற்றிருந்தார். ஆனால் அது அதிகார பூர்வமானதாகக் கருதப்படவில்லை. ஒரு எதிர்க் கட்சித் தலைவருக்கான ஊதியம், அலுவலக இடம், மற்ற வசதிகள் தரப்படாததால், அடுத்து 6 உறுப்பினர்களைப் பெற்றிருந்த பாட்டாளி கட்சியும் , நாடாளுமன்றத்தில் அதிகார பூரவமற்ற எதிர்க் கட்சித் தலைவராகவே இருந்தது.. அப்போது அக் கட்சியின் தலைவர் லோ தியா கியாங். ஆவார்.

இவர்களைத் தவிர எதிர்க் கட்சித் தலைவர் பதவியை முன்பே அனுபவித்த ஒருவர் நம்மிடையே வாழ்ந்து சென்றிருக்கிறார். அவர் சிங்கப்பூரின் நவீன சிற்பி மறைந்த லீ குவான் யூ ஆவார். 1955ல் சிங்கையின் அரசியலில் அடி எடுத்து வைத்த ஆரம்ப காலத்தில், அன்றைய சட்ட மன்றத்தில் முதல் எதிர்க் கட்சித் தலைவராகவும் வழி காட்டியவர் அமரர் லீ.

இன்று பாட்டாளிக் கட்சியின் தலைவர் பிரீத்தம் சிங், எதிர்க் கட்சித் தலைவரின் அந்தஸ்தை ஏற்கிறார். வரவேற்கிறோம். அவருக்கு ஆளும் கட்சிக்கு அறிவுரை கூறும் நிழல் அமைச்சரவை அமைக்கும் அளவுக்கு அதிகாரம் உண்டு எனச் சொல்லப்படுகிறது.. ஒவ்வோரு அமைச்சுக்கும் ஒரு நிழல் அமைச்சை மறைமுகமாக நடத்தி ஆலோசனைகள் கூறுவது எதிர்க் கட்சிகளின் மரபாக அமையும்.

16 அமைச்சர்களைக் கொண்ட இன்றைய மசெக அரசுக்குப் போதுமான நிழல் அமைச்சு அமைக்க 10 உறுப்பினர் எண்ணிக்கை கொண்ட பாட்டாளிக் கட்சிக்குப் போதாது என்பது உண்மை. ஆனாலும் அதற்குத் தேவையான வசதிகள் செய்து தரப்படுவது அவசியம் தான்.

கடுமையான எதிர்காலத்தை எதிர்கொள்ளவிருக்கும் அரசுக்கு வெறும் எதிர்ப்பை மட்டும் வாயளவில் தெரிவிக்காமல், அரிய ஆலோசனைகளைத் தரும் வாய்ப்பினை எதிர்க் கட்சிகளுக்குத் தர வேண்டும்.

  • ஏபிஆர். (சிங்கபூர்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

Entertainment News

Popular Categories