நீச்சல் குளத்தில் மூழ்கியவனை … கைகொடுத்து காத்த 3 வயது சிறுவன்!

Published:

boy-save-his-friend-in-pool
boy-save-his-friend-in-pool

சிறுவனை காப்பாற்றிய மூன்று வயது சிறுவன்.

3 வயதிலேயே நீச்சல் குளத்தில் மூழ்க இருந்த தன் நண்பனை காப்பாற்றிய ஒரு சிறுவன் ஹீரோவாக நின்றுள்ளான்.

இந்த சம்பவம் பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோவில் நடந்தது. இதுதொடர்பான வீடியோவை அந்த மூன்று வயது சிறுவனின் தாய் தன் சோஷல் மீடியா அக்கவுண்டில் போஸ்ட் செய்துள்ளார்.

தன் மகன் ஆர்தர் அவனுடைய நண்பனோடு விளையாடிக் கொண்டிருக்கும்போது எதிர்பாராமல் அந்த நண்பன் தண்ணீரில் விழுந்து விட்டான். அருகிலேயே ஸ்விம்மிங் பூல், நீர் குட்டைகள் இருக்கும் போது குழந்தைகளின் பெற்றோர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். இந்த வீடியோ தற்போது வைரலாக மாறியுள்ளது.

இந்த வீடியோவில் நீச்சல் குளத்தில் உள்ள வளையங்களைப் பிடிப்பதற்காக ஆர்தரும் அவனுடைய நண்பனும் குனிந்து முயற்சித்து வருகிறார்கள். அப்போது ஆர்தரின் நண்பன் எதிர்பாராமல் தண்ணீர் குளத்தில் விழுந்து விட்டான். உடனே ஆர்தர் பெரியவர்களை சத்தம் போட்டு கூப்பிட்டு எச்சரித்ததோடு அல்லாமல் அந்த சிறுவனையும் கூட கையை நீட்டி காப்பாற்றிவிட்டான்.

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

இந்த சம்பவங்கள் எல்லாம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தன. அதைப் பார்த்த நெட்டிசன்கள் ஆர்தரை ரியல் ஹீரோ என்று பாராட்டி வருகிறார்கள்.

அதோடு கூட இதைப் பார்த்த போலீஸார் ஆர்தருக்கு நல்ல பரிசு கூட அளித்தார்கள். கூடை நிறைய சாக்லேட்டுகள் அளித்ததோடு கூட ஒரு மெடலும் சர்டிபிகேட்டும் பரிசாக அளித்தார்கள்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img