கண்ணூரில் கம்யூ., பாஜக., பதிலுக்கு பதில்…! இம்முறை கையெறி குண்டு!

Published:

kannur communist - 2026

கண்ணூர்: கேரள மாநிலம் கண்ணூரில், பாஜக., எம்.பி., மார்க்சிஸ்ட் எம்எல்ஏ ஆகியோர் வீடுகளில் கையெறி குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

கேரள மாநிலம் கண்ணூர், மார்க்சிஸ்ட்களின் கோட்டை என்று வர்ணிக்கப் படுகிறது. இங்கே மார்க்சிஸ்ட்கள் தங்கள் வன்முறை வெறியாட்டத்தை எப்போதும் வெளிப்படுத்தி வருவர். கேரளத்திலேயே அதிக அளவிலான, பாஜக., ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் மார்க்சிஸ்ட் குண்டர்களால் படுகொலை செய்யப் பட்டுள்ளதும் இந்தக் கண்ணூரில்தான்!

சபரிமலையில் பெண்கள் நுழைய அனுமதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கேரளா முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கண்ணூர்- பையனூரில் மார்க்சிஸ்ட் கட்சியினர் பேரணி நடத்தினர். அவர்கள் பிணரயி விஜயனுக்கு ஆதரவாகவும், இந்து இயக்கங்களை எதிர்த்தும் பேரணி நடத்தினர்.

இந்நிலையில், கண்ணூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நேற்று இரவு பாஜக., மாநிலங்களவை எம்.பி., முரளீதரன் வீட்டில் கையெறி குண்டு வீசப்பட்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

சிறிது நேரத்தில், கண்ணூர் மாவட்டத்தில் வசிக்கும் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ ஷம்ஷீர் வீட்டில் 10 மணியளவில் கையெறி குண்டு வீசப்பட்டது. இதிலும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

ALSO READ:  தமிழின் மாண்பை இழிவுபடுத்திய நிதி அமைச்சர் மரியவில்சனுக்கு இந்து முன்னணி கண்டனம்!

இந்நிலையில், தன் வீட்டில் குண்டுவீச்சுக்கு பாஜக.,வினரே காரணம் என்று கம்யூனிஸ்ட் எம்எல்ஏ குற்றம்சாட்டினார். இது தொடர்பாக, 20 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img