ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்., விவகாரம்! ‘பொறுப்பற்ற’ ஜெயக்குமார்!

Jayakumar1 - 2026

விசாரிக்க வேண்டிய முறையில் போலீஸ் விசாரித்தால் ராதாகிருஷ்ணன் ஐ ஏ எஸ் உண்மையைச் சொல்வார் என்று ஜெயக்குமார் அளித்த பேட்டி ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளிடம் கடும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐஏஎஸ் சங்கத்தின் செயற்குழு, அதன் தலைவர் டிவி சோமநாதன் தலைமையில் எடப்பாடி பழனிசாமியை அவரது அறையில் சந்தித்து அமைச்சர்களுக்கு கடிவாளம் போடுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. சுகாதாரச் செயலர் ராதாகிருஷ்ணன் சர்ச்சையில் இது மேலும் ஒரு முக்கிய திருப்பம் என்று கருதப் படுகிறது.

அண்மைக் காலமாக, தினந்தோறும் ஊடகத்தைச் சந்தித்து தனது முகம் டிவி பெட்டிகளில் வரவேண்டும் என்று விரும்பிக் கொண்டிருக்கும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் பொறுப்பற்ற பேட்டிகள் தமிழ்நாடு அரசுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே பெரிய பிளவை ஏற்படுத்தி உள்ளது என்கிறார்கள்..

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை குறித்தும், சிகிச்சைக்கான தரம் குறித்தும் இப்போது அமைச்சர்கள் வெளிப்படையாக பேசி வருகிறார்கள். இரு வருடங்களுக்கு முன்னர், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த போது வாய் திறவாமல் சசிகலாவுக்கு சேவகம் செய்து கொண்டிருந்த அதிமுக.,வினர் இப்போது அரசியலுக்காக வாய் திறந்திருப்பது, முதல்வர் எடப்பாடிக்கும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

கூட்டுக் களவாணிகள் என்று மக்களிடையே பெயர் பெற்றுவிட்ட தமிழக அமைச்சர்கள், இப்போது தாங்கள் அப்பாவிகள், குற்றமற்றவர்கள் என்று காட்டிக் கொள்வதற்காக வாய் திறப்பது, இந்த விவகாரத்தில் தாங்களும் குற்றவாளிகளே என்று ஒப்புக் கொள்ளும் விதத்தில் அமைந்துள்ளதையே காட்டுகிறது!

இந்நிலையில், தாங்கள் செய்த தவறுகளுக்கு அதிகாரிகளை பலிகடா ஆக்கும் முயற்சியை அமைச்சர்கள் மேற்கொண்டிருப்பது நிர்வாகச் சிக்கலை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் உணரவேண்டியது அவசியம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

Topics

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Entertainment News

Popular Categories