December 6, 2025, 10:52 AM
26.8 C
Chennai

மனமொத்த பாலியல் உறவுக்கு வயது 15 ஆக நிர்ணயம்: பிரான்ஸ் பாராளுமன்றம்!

France
France

பிரான்சின் பாராளுமன்றம் நேற்று இருவரின் மனம் ஒத்து உடலுறவு மேற்கொள்வதற்கான குறைந்தபட்ச வயதை 15 ஆக நிர்ணயிக்கும் சட்டத்தை ஏற்றுக்கொண்டது.

இது பாலியல் தொடர்பான விவகாரத்தில் பாரம்பரியமாக அனுமதிக்கும் மனப்பான்மை கொண்ட ஒரு நாட்டில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கை என அந்நாட்டின் நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பிரான்சின் இரண்டாவது மீ டு இயக்கம் என வர்ணிக்கப்பட்ட பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் தூண்டுதலின் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து தேசிய சட்டமன்றம் இந்த சட்டத்திற்கு ஒருமனதாக இறுதி ஒப்புதல் அளித்தது.

15 வயதிற்குட்பட்ட குழந்தைகளுடன் உடலுறவு கொள்வது கற்பழிப்பு என்று கருதப்பட வேண்டும்.

15 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்தாலும் ஆண்-பெண் இடையே சிறிதளவு வயது வித்தியாசம் இல்லாவிட்டால் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலியல் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டவர்களின் பல ஆண்டுகால பிரச்சாரங்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை பிரான்சின் பிற மேற்கத்திய நாடுகளுடன் இணைகிறது.

ரத்த சம்பந்தம் கொண்டவர்கள் தங்களுக்கிடையே உடலுறவு மேற்கொள்ள குறைந்தபட்ச வயது 18 ஆக இருக்கும் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாங்கள் குழந்தைகளைத் தொடவில்லை என்று நீதி அமைச்சர் எரிக் டுபோண்ட்-மோரெட்டி கூறினார்.
15 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் சம்மதத்துடன் கூட எந்தவொரு வயதுவந்த நபரும் உடலுறவு கொள்வது சட்ட விரோதம்” என்று நீதித்துறை அமைச்சர் மேலும் கூறினார்.

முந்தைய பிரெஞ்சு சட்டத்தின் கீழ், பாலியல் பலாத்காரம் அல்லது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்களைக் கொண்டுவருவதற்காக, ஒரு வயது வந்தவருடன் பாலியல் உறவு கொள்ள குழந்தைகள் கட்டாயப்படுத்தப்பட்டனர் அல்லது அச்சுறுத்தப்பட்டனர் அல்லது ஏமாற்றப்பட்டனர் என்பதை வழக்குரைஞர்கள் நிரூபிக்க வேண்டியிருந்தது.

மீ டு விவகாரத்தால் இது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், புதிய சட்டம் செனட்டின் உறுப்பினர்களால் தொடங்கப்பட்டது. அவர்கள் ஒப்புதல் வயதை 13 ஆக நிர்ணயிக்க பரிந்துரைத்தனர். ஏற்கப்பட்டிருந்தால் இது ஐரோப்பாவில் மிகக் குறைவான ஒன்றாக இருந்திருக்கும்.

ஆனால் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் அரசாங்கம் அதை உயர்த்த வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தது.

இதையடுத்து, இந்த மசோதா கீழ் சபை தேசிய சட்டமன்றத்தில் சுமார் 300 திருத்தங்களுக்கு உட்பட்டு இறுதியாக தற்போது தேசிய சட்டமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories