யூரோ 2021: இறுதிக்குத் தகுதி பெற்ற அணி!

euro cup 2021
euro cup 2021

யூரோ 2020 அரையிறுதிப் போட்டிகள்
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –


இன்று, 8 ஜூலை 2021 அதிகாலை யூரோ 2020இன் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இங்கிலாந்து – டென்மார்க் நாடுகளுக்கிடையே லண்டனின் வெம்ப்லி மைதானத்தில் இந்திய நேரப்படி 0030 மணிக்கு நடந்தது. யூரோ 2020 இறுதிப் போட்டியை எட்ட இங்கிலாந்து 2-1 என்ற கோல் கணக்கில் டென்மார்க்கை வென்றது.

புதன்கிழமை டென்மார்க்கை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதால் 2020 ஐரோப்பிய சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் இத்தாலிக்கு எதிரான இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து தகுதி பெற்றது. ஹாரி கேன் கூடுதல் நேர ஆட்டத்தின்போது ஒரு கோல் அடித்தார். கூடுதல் நேரத்தின் முதல் பதினைந்து நிமிடத்தில், டென்மார்க்கின் காஸ்பர் ஷ்மிச்செல் கோலுக்குச் செல்லவிருந்த பந்தினைத் தடுத்தார். ஆனால் கேன் காஸ்பர் தடுத்து அனுப்பிய பந்தினை கோலுக்கு அனுப்பி இங்கிலாந்திற்கு கேன் வெற்றியைப் பெற்றுத் தந்தார்.

காலிறுதியில் உக்ரைனுக்கு எதிராக இங்கிலாந்து 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டிருந்தது. அதே நேரத்தில் டென்மார்க் செக் குடியரசிற்கு எதிராக வெற்றிபெற்ற அணியில் எந்த மாற்றமும் செய்யவில்லை.

கோப்பைக்கான ஆட்டங்கள் தொடங்குவதற்கு முன்னரே இங்கிலாங்கு கோப்பையை வெல்லக்கூடிய அணியாகக் கருதப்பட்டது. ஆனால் இன்றைய ஆட்டத்தில் டென்மார்க் அணி 30ஆவது நிமிடத்தில் ஆச்சரியமான முன்னிலை பெற்றது.

இளைஞர் மைக்கேல் டாம்ஸ்கார்ட் ஒரு அருமையான ஃப்ரீ கிக் அடித்தார். இங்கிலாந்து அணியின் கோல்கீப்பர் ஜோர்டான் பிக்போர்டால் அதனைத் தடுக்க முடியவில்லை. இந்த யூரோ போட்டிகளில் ஒரு நேரடி ஃப்ரீ கிக் மூலம் முதல் முறையாக ஒரு கோல் அடிக்கப்பட்டது இந்த ஆட்டத்தில்தான்.

euro 2021
euro 2021

இங்கிலாந்து அணியின் கோல்கீப்பர் கடந்த 725 நிமிடங்கள் நீடித்த கடந்த போட்டிகளில் இதுவரை ஒரு முறைகூட கோலடிக்கவிடவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. டென்மார்க்கின் முன்னணி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. ரஹீம் ஸ்டெர்லிங் நோக்கிச் செல்லும் ஒரு கிராஸாக அடிக்கப்பட்ட ஒரு பந்தைத் தடுக்க சறுக்கியபோது, டென்மார்க் அணியின் சைமன் கஜேர் ஒரு சொந்த கோலடித்து இங்கிலாந்து கோல் கணக்கைச் சமன் செய்ய வாய்ப்பளித்தார்.

இறுதி இரண்டாம் பாதியில் ஏராளமான கோலடிக்கும் முயற்சிகள் இருந்தன, ஆனால் இரு அணிகளும் கோலடிக்காததால் விளையாட்டு கூடுதல் நேரத்திற்கு சென்றது. இது ஐரோப்பிய சாம்பியன்ஷிப் வரலாற்றில் ஏழாவது நிகழ்வாகும்.

இந்தப் போட்டிகளில் இது கேனின் நான்காவது கோல் ஆகும். இங்கிலாந்து இத்தாலி இடையேயான இறுதிப் போட்டி லண்டன் விம்ப்லி மைதானத்தில் 12 ஜூலை அதிகாலை இந்திய நேரப்படி 003 மணிக்கு நடைபெறும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories