December 6, 2025, 4:35 AM
24.9 C
Chennai

ராங் மிக்ஸிங்.. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பெண்!

gilari
gilari

உலகம் முழுவதும் பல்வேறு வகை மதுப்பிரியர்கள் இருக்கிறார்கள். தாங்கள் குடிப்பதே வெளியுலகுக்கு காட்டிக்கொள்ளாமல் இருப்பவர்கள் முதல் அட்ராசிட்டி செய்பவர்கள் வரை பல ரகங்களில் இருக்கின்றனர்.

அவர்கள் யாராக இருந்தாலும் மதுவை மட்டும் அப்படியே குடிக்காமல் அவற்றுடன் ஏதாவது ஒன்றை மிக்சிஸிங் செய்து கொள்வார்கள். சோடா, தண்ணீர் கலந்து குடிப்பவர்களும் இருக்கிறார்கள், பழரசம் மற்றும் பச்சை காய்கறிகள், வெங்காயம் கடித்துக் கொண்டு குடிப்பவர்களும் இருக்கிறார்கள்.

ஆனால், சரியான மிக்சிங் இல்லாமல், ஒத்துவராத மிக்சிங்கை கலந்து குடித்தால் உயிருக்கும் கூட ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அப்படியான ஒரு அசாதாரண அனுபவத்தை இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அண்மையில் எதிர்கொண்டுள்ளார்.

இங்கிலாந்தின் எசெக்ஸ் பகுதியைச் சேர்ந்த மில்லி, அண்மையில் நைட் கிளப் ஒன்றுக்கு சென்றுள்ளார். அங்கு வோட்காவுடன், லெமனேட்டை கலந்து குடித்துள்ளார்.

சிறிது நேரத்தில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அவருக்கு, தாடைகள் கோணலாகி, கை, கால்களை இழுத்துக்கொண்டது.

நொடிப்பொழுதில் என்ன ஆனது என்றே தெரியவில்லை. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மில்லிக்கு மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்து, இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார்.

மில்லிக்கு ஏற்பட்ட உடல்நல பாதிப்பு குறித்து பேசிய அவரது தாயார் கிளாரி டாப்லின், தனது மகளுக்கு திடீரென ஏற்பட்ட பக்கவாத பாதிப்பால் மிகவும் அச்சமடைந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற நிலையில் அவளை முன்பின் பார்த்ததில்லை எனக் கூறிய அவர், மருத்துவர்களின் சிகிச்சையால் மல்லி இயல்பு நிலைக்கு திரும்பியது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.

எதனால் மில்லிக்கு பக்கவாதம் போன்ற பாதிப்பு ஏற்பட்டது என்பதற்கு விளக்கம் அளித்துள்ள மில்லியின் தாயார் கிளாரி, நைட் கிளப்பில் அவளுக்கு 2 விதமான போதை மாத்திரைகள் கொடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

அதில் ஒன்று பக்கவாத பாதிப்புக்கு வழிவகுத்திருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகம் தெரிவித்ததாகவும் அவர் கூறினார். இயல்பு நிலைக்கு திரும்பிய மில்லி பேசும்போது, “சௌத்தென்ட் பகுதியில் இருக்கும் Moo Moo நைட் கிளப்புக்கும் நண்பர்களுடன் சென்றேன்.

இரண்டு, மூன்று முறை மட்டுமே வோட்காவை உறிஞ்சுவிட்டு புகைப்பிடிக்கும் பகுதிக்கு சென்றேன். அப்போது, மிகவும் அதிகமாக குடித்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. திடீரென நிலைகுலைந்துவிட்டேன். என்னுடன் நைட் கிளப்புக்கு வந்த யாரோ ஒருவர் இதனை செய்திருக்கக்கூடும்” என்றார்.

கிளாரி பேசும்போது, என் மகள் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்துவிட்டாள் என மகிழ்ச்சி தெரிவித்தார். மேலும், இந்த மாதிரியான செயல்கள் மூலம் அவள் நைட் கிளப்புக்கு செல்வதை நிறுத்தமாட்டாள் என்றும் கிளாரி தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories