கொழும்பு: இலங்கையின் இறுதிக் கட்டப்போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பான போர்க் குற்ற விசாரணைகளுக்கு வெளிநபர்கள் யாரும் தேவையில்லை என்று இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். மேலும், இலங்கையின் உள்நாட்டு விசாரணை நடைமுறை மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்று அதிபர் சிறிசேன கோரிக்கை விடுத்தார். ஆனால் அதே நேரம், உள்நாட்டு விசாரணையை உறுதியாக மேற்கொள்வதற்கு வசதியாக ஐநாவின் ஆலோசனைகள் ஏற்கப்படும் என்றும் அவர் செய்தி நிறுவனம் ஒன்றிடம் கூறியுள்ளார். இறுதிக் கட்டப்போரில் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டும் போர்க்கால குற்றங்களுக்கு சர்வதேச அலவிலான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மனித உரிமை அமைப்புகளும் தமிழர் அமைப்புகளும் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்துவருகின்றனர். இந் நிலையில், ஐநாவின் மனித உரிமைகள் அமைப்பின் மூலம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அறிக்கை இம்மாதம் வெளியிடப்படாமல், வரும் செப்டம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இலங்கை போர்க் குற்ற விசாரணைக்கு வெளி நபர்கள் தேவையில்லை: சிறிசேன
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

