புது தில்லி: பாஜக தேசிய செயற்குழுவை அக்கட்சியின் தலைவர் அமித் ஷா மாற்றியமைத்தார். புதிய தேசிய செயற்குழுவில் இடம்பெற்றுள்ளவர்களின் விவரங்களை தில்லியில் அவர் அறிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ்,வெங்கய்ய நாயுடு, நிதின் கட்கரி, வருண் காந்தி உள்ளிட்ட 111 பேர் செயற்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் இடம்பெற்றுள்ளனர். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன், சுப்பிரமணியன் சுவாமி, வி.சண்முகநாதன் ஆகியோர் தேசிய செயற்குழுவில் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் பலரும் செயற்குழுவில் இடம் பெற்றுள்ளனர். எனினும், மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி, நஜ்மா ஹெப்துல்லா, நாடாளுமன்ற உறுப்பினரும் நடிகையுமான ஹேமமாலினி ஆகியோர் புதிய தேசிய செயற்குழுவில் இடம்பெறவில்லை. பாஜக ஆளும் 8 மாநிலங்களின் முதல்வர்கள், 2 துணை முதல்வர்கள் உள்ளிட்ட 27 பேர் நிரந்தர அழைப்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் உள்ள 40 மூத்த தலைவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், எம்.பி. சாத்வி நிரஞ்சன் ஜோதி, மத்திய இணை அமைச்சரும், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரபல திரைப்படப் பாடகருமான பாபுல் சுப்ரியோ, திரைப்பட நடிகையும் எம்.பி.யுமான கிரண் கெர் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். கட்சியின் புதிய தேசிய செயற்குழு, அடுத்த மாதம் முதல் வாரத்தில் பெங்களூரில் கூடுகிறது என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
ஆன்மிகச் செய்திகள்
குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!
குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!
மதுரை
தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!
வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!
சற்றுமுன்
இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!
உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு
ஆன்மிகச் செய்திகள்
சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!
ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
ஆன்மிகச் செய்திகள்
குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!
குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!
மதுரை
தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!
வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!
சற்றுமுன்
இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!
உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு
ஆன்மிகச் செய்திகள்
சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!
ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
ஆன்மிகச் செய்திகள்
பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!
மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

