இலங்கை வந்தார் நரேந்திர மோடி: அரசு மரியாதையுடன் சிவப்புக் கம்பள வரவேற்பு

Published:

modi-lankaகொழும்பு : மொரீஷியஸ் நாட்டில் தனது சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு இரண்டு நாள் பயணமாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வந்தார். அவருக்கு இன்று அரசு மரியாதையுடன் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திரமோடிக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. சிவப்பு கம்பள வரவேற்புடன் குண்டுகள் முழங்க, அளிக்கப்பட்ட வரவேற்பு விழாவில் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். அதிகாலை கொழும்பு விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டோர் வரவேற்றனர். 28 ஆண்டுகளுக்குப் பிறகு அரசுமுறையில் இந்தியக் பிரதமர் ஒருவர் இலங்கைக்கு செல்வது இதுவே முதல்முறை. இன்று, இலங்கை அதிபர் சிறிசேனாவை சந்தித்து பேசும் பிரதமர் மோடி இருதரப்பு உறவு 13-வது சட்டத் திருத்தத்தின் படி தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு, இந்தியாவின் உதவியுடன் இலங்கையில் நிறைவேற்றப்படும் திட்டங்கள், மீள் குடியேற்றம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கிறார். அப்போது பிரதமர் மோடிக்கு சிறிசேனா விருந்தளித்து கெளரவிக்கிறார். இதனை தொடர்ந்து இலங்கை நாடாளுமன்றத்தில் சிறப்பு அமர்வு கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்ற இருக்கிறார். தமது பயணத்தின் ஒரு பகுதியாக தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்பாணம், அனுராதபுரம், கண்டி ஆகிய இடங்களுக்கும் செல்லவுள்ளார். modi-srilanka

ALSO READ:  சோகமான நாள்; திபெத், நேபாளத்தை உருக்குலைத்த திடீர் வெள்ளம், நிலச்சரிவு! அதிகரிக்கும் உயிரிழப்புகள்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img