கோலாலம்பூர்: ஊழல் புகாரில் மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கை போலீசார் கைது செய்தனர்.
மலேசியா முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இதை அடுத்து அவரை நாட்டை விட்டு வெளியேற அனுமதி மறுக்கப்பட்டது. மேலும், அவருக்குச் சொந்தமான வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனைகளில் ஆவணங்கள் பல சிக்கின.
இந்நிலையில் மலேசிய வளர்ச்சித் திட்டத்தில் நடந்த ஊழல் குற்றச்சாட்டில் நஜீப் ரசாக்கை ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்தத் தகவலை மலேசிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.




