பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் பதுங்கியிருந்த ஒரு வீட்டை இலக்குவைத்து பாரீஸின் வடக்கே பொலிஸாரும் இராணுவத்தினரும் சேர்ந்து நேற்று அதிரடி தேடுதல் வேட்டை நடத்தினர். தீவிரவாதிகள் 6 இடங்களில் நடத்திய தாக்குதல்களில் 129 பேர் கொல்லப்பட்டதுடன் பலர் காயங்களுக்கு இலக்காகியிருந்தனர். பயங்கரவாதக் குழுவிடம் பயிற்சி பெற்று பெல்ஜியம் நாட்டு போலீஸாரால் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள அப்துல் ஹமீது அபாவுத்(28) என்று அண்மையில் தெரியவந்தது. மொராக்கோ வம்சாவளியைச் சேர்ந்த அபவுட், பெல்ஜியம் நாட்டு குடிமகனாவான்.
பாரிஸில் கடந்த வெள்ளிக்கிழமை (13) ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதப் பாசறையில் பயிற்சி பெற்ற இவன், பாரிஸ் தாக்குதலின்போது மனித வெடிகுண்டாக வெடித்துச் சிதறிய பிராஹிம் அப்டெசலாம் என்பவனுடனும், இந்த தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மற்றும் தேடப்பட்டு வரும் பலருடனும் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாக பிரான்ஸ் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, கடந்த ஜனவரி மாதம் சிரியாவுக்கு தப்பிச்சென்ற அப்துல் ஹமீது அபாவுத், அங்கிருந்தபடியே பாரீசில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த கொடூரத் தாக்குதலுக்கு திட்டம்தீட்டி தந்துள்ளான்.
பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் இடம்பெற்ற தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி, நேற்று செயின்ட் டெனிஸில் பிரெஞ்சுப் பொலிஸாருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


