ரூ.20 கோடிக்கு ஏலம் போன திப்பு சுல்தான் வாள்

Published:

tippusultan-swordலண்டன்: மைசூர் திவான் திப்பு சுல்தான் பயன்படுத்திய ஆயுதங்களை லண்டன் போன்ஹாம்ஸ் என்ற தனியார் ஏல நிறுவனம் வைத்திருந்தது. அது, இரு தினங்களுக்கு முன்னர், திப்பு சுல்தானின் வாள் உள்ளிட்ட 30 பொருள்களை ஏலம் விட்டது. இதில் திப்பு சுல்தானின் 30 ஆயுதங்களும் 6 மில்லியன் பவுண்டுகளுக்கும் மேலாக ஏலம் போனது. திப்பு சுல்தான் தனது ஆட்சியில் பயன்படுத்திய அனைத்து ஆயுதங்களிலும் புலிச் சின்னத்தை வைத்திருந்தார். அவர் பயன்படுத்திய விலை உயர்ந்த மணிகள் பதித்த புலித் தலையோடு கூடிய வாள் ரூ.20 கோடிக்கு ஏலம் போனது. முன்னதாக இந்த வாள் ரூ.37 லட்சம் முதல் ரூ. 56 லட்சம் வரை விலை போகும் என எதிர்பார்க்கப்பட்டது. திப்புவின் படைப் பிரிவினர் பயன்படுத்திய மூன்று பவுண்டு எடையுள்ள குண்டுகளை வீசும் பீரங்கி ரூ. 13 கோடிக்கு ஏலம் போனது. அவர் தனிப்பட்ட முறையில் பயன்படுத்திய துப்பாக்கி ரூ.7 கோடிக்கு ஏலம் போனது. திப்புவின் ஆயுதக்குவியலில், வளைவான கத்திகள், மணிகள் பதித்த வாள், அம்புகள், வேலைப்பாடுடன் கூடிய தலைக் கவசங்கள், பிஸ்டல்கள் ஆகியவையும் இந்த ஏலத்தில் விடப்பட்டன.

ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

Related articles

Recent articles

spot_img