February 21, 2026, 3:33 PM
30.4 C
Chennai

அமெரிக்கா-தலீபான்கள் சமரச பேச்சு கத்தாரில் தொடங்கியது

thaliban - 2026

கத்தார் நாட்டில் அமெரிக்காவுக்கும், தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையேயான சமரச பேச்சு தொடங்கியது.

இதில் திருப்பம் ஏற்படுமா, ஆப்கானிஸ்தான் போர் முடிவுக்கு வருமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

அமெரிக்காவில் நியூயார்க் உலக வர்த்தக மையம், வாஷிங்டன் பென்டகன் ராணுவ தலைமையகம் ஆகியவற்றின்மீது பின்லேடனின் அல்கொய்தா பயங்கரவாதிகள் விமானங்களை மோதி வரலாறு காணாத தாக்குதல்களை நடத்தி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொன்று குவித்தனர்.

2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி நடந்த அந்த தாக்குதல்களை தொடர்ந்து,

அல்கொய்தா பயங்கரவாதிகளுக்கு தஞ்சம் அளித்து வந்த ஆப்கானிஸ்தான்மீது அமெரிக்கா போர் தொடுத்து அங்கு ஆட்சியில் இருந்த தலீபான்களை அகற்றியது.

ஆனால் தலீபான் பயங்கரவாதிகளை முற்றிலும் ஒழிக்க முடியவில்லை.

18 ஆண்டுகளாக தலீபான் பயங்கரவாதிகளை ஒடுக்கும் முயற்சியில் ஆப்கானிஸ்தான் அரசு படைகளும், அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளும் ஈடுபட்டும் பலன் இல்லை.

இந்த நிலையில்தான் சமரச பேச்சு பற்றிய கேள்வி எழுந்தது. ஆப்கானிஸ்தான் அரசு நேரடி பேச்சுவார்த்தைக்கு தலீபான் பயங்கரவாதிகளை அழைத்தது.

ஆனால் அவர்களோ அமெரிக்காவுடன்தான் பேச்சுவார்த்தை நடத்துவோம் என திட்டவட்டமாக கூறினர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை முழுமையாக விலக்கிகொள்ளும் வரையில் தாக்குதல்களை நிறுத்த மாட்டோம் எனவும் அறிவித்தனர்.

அதைத்தொடர்ந்து அமெரிக்காவுக்கும், தலீபான் பயங்கரவாதிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தை தொடங்கியது.

6 சுற்று பேச்சுவார்த்தை முடிந்தும் திருப்பம் ஏதும் நிகழவில்லை.

இந்த நிலையில் 7-வது சுற்று பேச்சுவார்த்தை கத்தார் நாட்டின் தலைநகரான டோஹாவில் நேற்று முன்தினம் தொடங்கியது.

செப்டம்பர் 1-ந் தேதிக்குள் ஆப்கானிஸ்தான் போரை முடிவுக்கு கொண்டு வந்து விட வேண்டும், அதற்கான ஒப்பந்தத்தை ஏற்படுத்தி விட முடியும் என அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ நம்பிக்கை வெளியிட்டுள்ள சூழலில் பேச்சுவார்த்தை தொடங்கி இருக்கிறது.

இந்தப் பேச்சுவார்த்தை, அடுத்த வாரம் வரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையொட்டி வாஷிங்டன் அமைதி தூதர் ஜல்மே கலீல்ஜாத் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு நேற்று பேட்டி அளித்தார்.

அப்போது அவர், “அமெரிக்காவுக்கும், தலீபான்களுக்கும் இடையேயான 7-வது சுற்று சமரச பேச்சுவார்த்தை முக்கியமானது” என கூறினார்.

மேலும், “இரு தரப்பினரும் உறுதியான முடிவுகளை எதிர்பார்க்கிறார்கள்.

ஏனென்றால், ஆப்கானிஸ்தானில் இருந்து 20 ஆயிரம் அமெரிக்கா மற்றும் நேட்டோ படை வீரர்களை திரும்பப்பெறுவதையும், அமெரிக்காவின் நீண்டகால போரை முடிவுக்கு கொண்டுவரவும் உடன்பாடு ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்” என்றார்.

ஆப்கானிஸ்தானில் வரும் செப்டம்பர் மாதம் 28-ந் தேதி அதிபர் தேர்தல் நடக்க உள்ளது.

அதற்கு முன்னதாக போரை முடிவுக்கு கொண்டு வந்து விட வேண்டும் என்ற முனைப்பில் அமெரிக்கா உள்ளது.

இதற்கு இந்த 7-வது சுற்று பேச்சுவார்த்தை பலன் அளிக்குமா, திருப்பம் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு சர்வதேச அரங்கில் நிலவுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories