December 5, 2025, 11:41 PM
26.6 C
Chennai

அமெரிக்கா-தலீபான்கள் சமரச பேச்சு கத்தாரில் தொடங்கியது

thaliban - 2025

கத்தார் நாட்டில் அமெரிக்காவுக்கும், தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையேயான சமரச பேச்சு தொடங்கியது.

இதில் திருப்பம் ஏற்படுமா, ஆப்கானிஸ்தான் போர் முடிவுக்கு வருமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

அமெரிக்காவில் நியூயார்க் உலக வர்த்தக மையம், வாஷிங்டன் பென்டகன் ராணுவ தலைமையகம் ஆகியவற்றின்மீது பின்லேடனின் அல்கொய்தா பயங்கரவாதிகள் விமானங்களை மோதி வரலாறு காணாத தாக்குதல்களை நடத்தி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொன்று குவித்தனர்.

2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி நடந்த அந்த தாக்குதல்களை தொடர்ந்து,

அல்கொய்தா பயங்கரவாதிகளுக்கு தஞ்சம் அளித்து வந்த ஆப்கானிஸ்தான்மீது அமெரிக்கா போர் தொடுத்து அங்கு ஆட்சியில் இருந்த தலீபான்களை அகற்றியது.

ஆனால் தலீபான் பயங்கரவாதிகளை முற்றிலும் ஒழிக்க முடியவில்லை.

18 ஆண்டுகளாக தலீபான் பயங்கரவாதிகளை ஒடுக்கும் முயற்சியில் ஆப்கானிஸ்தான் அரசு படைகளும், அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளும் ஈடுபட்டும் பலன் இல்லை.

இந்த நிலையில்தான் சமரச பேச்சு பற்றிய கேள்வி எழுந்தது. ஆப்கானிஸ்தான் அரசு நேரடி பேச்சுவார்த்தைக்கு தலீபான் பயங்கரவாதிகளை அழைத்தது.

ஆனால் அவர்களோ அமெரிக்காவுடன்தான் பேச்சுவார்த்தை நடத்துவோம் என திட்டவட்டமாக கூறினர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை முழுமையாக விலக்கிகொள்ளும் வரையில் தாக்குதல்களை நிறுத்த மாட்டோம் எனவும் அறிவித்தனர்.

அதைத்தொடர்ந்து அமெரிக்காவுக்கும், தலீபான் பயங்கரவாதிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தை தொடங்கியது.

6 சுற்று பேச்சுவார்த்தை முடிந்தும் திருப்பம் ஏதும் நிகழவில்லை.

இந்த நிலையில் 7-வது சுற்று பேச்சுவார்த்தை கத்தார் நாட்டின் தலைநகரான டோஹாவில் நேற்று முன்தினம் தொடங்கியது.

செப்டம்பர் 1-ந் தேதிக்குள் ஆப்கானிஸ்தான் போரை முடிவுக்கு கொண்டு வந்து விட வேண்டும், அதற்கான ஒப்பந்தத்தை ஏற்படுத்தி விட முடியும் என அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ நம்பிக்கை வெளியிட்டுள்ள சூழலில் பேச்சுவார்த்தை தொடங்கி இருக்கிறது.

இந்தப் பேச்சுவார்த்தை, அடுத்த வாரம் வரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையொட்டி வாஷிங்டன் அமைதி தூதர் ஜல்மே கலீல்ஜாத் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு நேற்று பேட்டி அளித்தார்.

அப்போது அவர், “அமெரிக்காவுக்கும், தலீபான்களுக்கும் இடையேயான 7-வது சுற்று சமரச பேச்சுவார்த்தை முக்கியமானது” என கூறினார்.

மேலும், “இரு தரப்பினரும் உறுதியான முடிவுகளை எதிர்பார்க்கிறார்கள்.

ஏனென்றால், ஆப்கானிஸ்தானில் இருந்து 20 ஆயிரம் அமெரிக்கா மற்றும் நேட்டோ படை வீரர்களை திரும்பப்பெறுவதையும், அமெரிக்காவின் நீண்டகால போரை முடிவுக்கு கொண்டுவரவும் உடன்பாடு ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்” என்றார்.

ஆப்கானிஸ்தானில் வரும் செப்டம்பர் மாதம் 28-ந் தேதி அதிபர் தேர்தல் நடக்க உள்ளது.

அதற்கு முன்னதாக போரை முடிவுக்கு கொண்டு வந்து விட வேண்டும் என்ற முனைப்பில் அமெரிக்கா உள்ளது.

இதற்கு இந்த 7-வது சுற்று பேச்சுவார்த்தை பலன் அளிக்குமா, திருப்பம் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு சர்வதேச அரங்கில் நிலவுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories