December 5, 2025, 11:23 AM
26.3 C
Chennai

வாஞ்சிநாதனுக்கு துப்பாக்கிச் சுடும் பயிற்சி அளித்த வ.வே.சு.அய்யர்..

images 86 - 2025

வாஞ்சிநாதன் உட்பட விடுதலை போராட்ட வீரர்களுக்கு துப்பாக்கிச் சுடும் பயிற்சியும் அளித்தார் வ.வே.சு.அய்யர்.

திருச்சி வரகனேரியைச் சேர்ந்த வெங்டேச அய்யர்- காமாட்சியம்மாள் தம்பதியருக்கு, 1881-ம் ஆண்டு பிறந்தவர் வ.வே.சு.அய்யர். இவரது முழு பெயர் வரகனேரி வெங்கடேச சுப்ரமணிய அய்யர் என்பதாகும். தனது 16 வயதில் பி.ஏ. பட்டம் பெற்ற இவர், 1901-ம் ஆண்டு சட்டம் பயின்று 19 வயதில் வழக்கறிஞர் ஆனார். இவர் திருச்சியில் தர்மாலயம் என்ற இல்லம் அமைத்து, சுதந்திரப் போராட்டத்திற்கு வீரர்களைத் தயார்படுத்தும் விதமாக அவர்களுக்கு குத்துச்சண்டை, குஸ்தி, சிலம்பம் போன்ற பயிற்சிகளை கற்பித்தார். விடுதலை போராட்ட வீரர்களுக்கு துப்பாக்கிச் சுடும் பயிற்சியும் அளித்தார். அந்த வகையில் வாஞ்சிநாதனுக்கும், துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்தது இவர்தான். புதுச்சேரியில் கரடிக்குப்பம் என்று அழைக்கப்படும் கருவடிக்குப்பத்தில் இந்தப் பயிற்சி நடந்தது.

images 87 - 2025

கலெக்டர் ஆஷ்துரையை கொல்ல வாஞ்சிநாதன் பயன்படுத்திய துப்பாக்கி, பிரெஞ்சு நாட்டுத் தயாரிப்பு ஆகும். ஆஷ்துரை கொல்லப்பட்ட பிறகு, புதுச்சேரியில் ஆயுதம் தாங்கிய குழுக்கள் இயங்க முடியாத நிலை உருவானது. எனவே மகாகவி பாரதியார், மண்டயம் ஸ்ரீநிவாசாச்சாரியார், அரவிந்த கோஷ், நீலகண்ட பிரம்மச்சாரி போன்ற சுதந்திர போராட்ட வீரர்களோடு இணைந்து இந்திய விடுதலைக்கு போராடினார், வ.வே.சு.அய்யர்.

காந்தி புதுச்சேரிக்கு வருகை தந்தபோது, அவரது கொள்கையால் ஈர்க்கப்பட்டு, தான் பயன்படுத்திய கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அகிம்சாவாதியாக மாறினார். 14 ஆண்டுகள், தான் பிறந்து வளர்ந்த வீட்டிற்கு வரமுடியாமல் சுதந்திரப் போராட்டத்திற்கு வாழ்வை அர்ப்பணித்த வ.வே.சு.அய்யர், 1920-ம் ஆண்டு பொது மன்னிப்பு பெற்று திருச்சியில் உள்ள வரகனேரி இல்லம் வந்தார். 1923-ம் ஆண்டு நெல்லை அருகே சேரன்மாதேவியில் குருகுலம் தொடங்கி மாணவர்களுக்கு கல்வியை புகட்டினார். 1925-ம் ஆண்டு ஜூன் மாதம் 3-ந்தேதி குருகுல மாணவர்களை உல்லாச பயணமாக பாபநாசத்திற்கு அழைத்துச்சென்றபோது அவரது மகள் சுபத்திரை கல்யாண தீர்த்தத்தில் தவறி விழுந்தார்.

அவரை காப்பாற்ற சென்ற வ.வே.சு. அய்யரும் சுழலில் சிக்கி மரணித்தார். திருச்சி வரகனேரியில் உள்ள இவர் வாழ்ந்த இல்லம் அரசுடைமையாக்கப்பட்டு, தற்போது கிளை நூலகமாக செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்தில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories