
இன்றைய பஞ்சாங்கம் – ஏப்ரல் 25
ஸ்ரீராமஜயம் – ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம்
||श्री:|| !!ஸ்ரீ:!!
श्री:
श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
பஞ்சாங்கம்
சித்திரை ~ 12 (25.4.2026) சனிக்கிழமை
வருடம் ~ பராபவ {பராபவ நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ வஸந்த ருது.
மாதம் ~ சித்திரை மாதம் { மேஷ மாஸம்}
பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.
திதி ~ 10.39 pm வரை நவமி பின் தசமி.
நாள் ~ {ஸ்திர வாஸரம்} சனிக்கிழமை.
நக்ஷத்திரம் ~ 11.52 pm வரை ஆயில்யம் பின் மகம்.
யோகம் ~ கண்டம்
கரணம்~ பாலவம் / கௌலவம்
அமிர்தாதியோகம் ~ அசுபயோகம்
சுபயோகம்
ராகு காலம் ~ காலை 9.00 ~ 10.30.
எமகண்டம் ~ மதியம் 1.30 ~ 3.00.
குளிகை ~ காலை 6.00 ~ 7.30.
நல்ல நேரம் ~ 7 to 8 am and 11 to 12 pm
சூரிய உதயம் ~ காலை 6.01
சந்திராஷ்டமம் ~ தனுர்.
சூலம் ~ கிழக்கு.
பரிகாரம் ~ தயிர்
ஸ்ராத்த திதி ~ நவமி.
இன்று ~ .
स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु !!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः। सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
ஓரை என்றால் என்ன?
ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.
சனிக்கிழமை ஹோரை
காலை
6-7 : சனி – அசுபம் ❌
7-8 : குரு – சுபம் ✔
8-9: செவ்வாய் – அசுபம் ❌
9-10: சூரியன் – அசுபம் ❌
10-11 : சுக்கிரன் – சுபம் ✔
11-12 : புதன் – சுபம் ✔
பிற்பகல்
12-1 : சந்திரன் – சுபம் ✔
1-2 : சனி – அசுபம் ❌
2-3 : குரு – சுபம் ✔
மாலை
3-4: செவ்வாய் – அசுபம் ❌
4-5 : சூரியன் – அசுபம் ❌
5-6 : சுக்கிரன் – சுபம் ✔
6-7 : புதன் – சுபம் ✔
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை, புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அருமருந்தாக அமையும்..

இன்றைய (25-04-2026) ராசி பலன்கள்
மேஷம்
பாகபிரிவினை விஷயங்களில் நிதானம் வேண்டும். மற்றவர்கள் கூறும் கருத்துகளுக்கு மதிப்பளித்து செயல்படுவதன் மூலம் நன்மைகள் ஏற்படும். அரசு பணிகளில் இருப்பவர்களுக்கு ஆதாயம் உண்டாகும். எந்த ஒரு செயலிலும் ஈடுபாடு இல்லாமல் இருப்பீர்கள். உறவினர்களின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அஸ்வினி : நிதானம் வேண்டும்.
பரணி : ஆதாயம் உண்டாகும்.
கிருத்திகை : ஒத்துழைப்புகள் அதிகரிக்கும்.
ரிஷபம்
மறைமுகமான எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். நிர்வாக பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை உண்டாகும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். விற்பனை சார்ந்த துறைகளில் திறமைகள் வெளிப்படும். குறுகிய தூர பயணங்கள் மூலம் மாற்றம் உண்டாகும். இடமாற்றம் தொடர்பான முயற்சிகள் கைக்கூடும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்
கிருத்திகை : சாதகமான நாள்.
ரோகிணி : சுறுசுறுப்பான நாள்.
மிருகசீரிஷம் : முயற்சிகள் கைக்கூடும்.
மிதுனம்
குடும்ப உறுப்பினர்களின் ஆதரவுகள் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். சூழ்நிலை அறிந்து பேசுவது நன்மை உண்டாகும். செய்கின்ற செயல்களில் கவனம் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் மூலம் மாற்றம் பிறக்கும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை புரிந்து கொள்வீர்கள். விலை உயர்ந்த ஆபரணங்களை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மிருகசீரிஷம் : தீர்வு கிடைக்கும்.
திருவாதிரை : மாற்றம் பிறக்கும்.
புனர்பூசம் : ஆதரவான நாள்.
கடகம்
இனம் புரியாத சில சிந்தனைகள் மூலம் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபார நிமித்தமான அலைச்சல்கள் அதிகரிக்கும். மறைமுக தடைகளை அறிவீர்கள். மனை சார்ந்த செயல்களில் சிந்தித்து முடிவு எடுக்கவும். தொழில் நுட்ப கருவிகளில் கவனம் வேண்டும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாக கிடைக்கும். பணிகளில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்
புனர்பூசம் : குழப்பங்கள் நீங்கும்.
பூசம் : சிந்தித்து செயல்படவும்.
ஆயில்யம் : முன்னேற்றம் உண்டாகும்.
சிம்மம்
உத்தியோக பணிகளில் சூழ்நிலை அறிந்து செயல்பட வேண்டும். வியாபாரம் பணிகளில் செய்யும் சிறு மாற்றங்கள் மூலம் லாபங்கள் மேம்படும். செயல்பாடுகளில் ஒரு விதமான மந்தத் தன்மை உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சினைகளுக்கு மாற்றமான தீர்வுகள் கிடைக்கும். உலக அனுபவங்கள் மூலம் மனதில் மாற்றங்கள் பிறக்கும். வெளியூர் பயணங்களில் புதிய அறிமுகங்கள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மகம் : லாபங்கள் மேம்படும்.
பூரம் : தீர்வுகள் கிடைக்கும்.
உத்திரம் : அறிமுகங்கள் கிடைக்கும்.
கன்னி
மனதில் இருந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் அபிவிருத்தி காண முயற்சிகள் கைகூடும். இழுபறியாக இருந்து வந்த தனவரவுகள் கிடைக்கும். வாகனப் பயணங்கள் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். உறுப்பினர்கள் மூலம் கலகலப்பான சூழ்நிலை காணப்படும். சூழ்நிலை அறிந்து பேசுவது உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
உத்திரம் : புத்துணர்ச்சியான நாள்.
அஸ்தம் : வரவுகள் கிடைக்கும்.
சித்திரை : நம்பிக்கை மேம்படும்.
துலாம்
மருத்துவத் துறைகளில் இருப்பவர்களுக்கு மதிப்புகள் மேம்படும். மனதிற்குப் பிடித்த புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாழ்க்கை துணை வழியில் ஒத்துழைப்பான சூழல் அமையும். உயர்கல்வியில் ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புது விதமான கண்ணோட்டம் பிறக்கும். தன வருவாய் மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல் நிறம்
சித்திரை : மதிப்புகள் மேம்படும்.
சுவாதி : ஒத்துழைப்பான நாள்.
விசாகம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
விருச்சிகம்
சமூகப் பணிகளில் மதிப்புகள் அதிகரிக்கும். தர்ம சிந்தனை தொடர்பான முயற்சிகள் உண்டாகும். திட்டமிட்ட பணிகள் இனிதே நிறைவு பெறும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் ஏற்படும். தெய்வீக காரியங்களில் ஈடுபடுவது மன அமைதியை கொடுக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்லவும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
விசாகம் : மதிப்புகள் அதிகரிக்கும்.
அனுஷம் : வாய்ப்புகள் ஏற்படும்.
கேட்டை : அனுசரித்து செல்லவும்.
தனுசு
உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வரவுகளில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும். தேவையற்ற அலைச்சல்களால் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். செய்தொழிலில் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். மற்றவர்கள் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. வழக்கு செயல்களில் விவேகத்துடன் செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
மூலம் : கவனம் வேண்டும்.
பூராடம் : சோர்வுகள் உண்டாகும்.
உத்திராடம் : விவேகத்துடன் செயல்படவும்.
மகரம்
நண்பர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை உருவாக்கும். சோர்வுகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். சாதுரியமான பேச்சுக்கள் மூலம் பலரின் நம்பிக்கைகளை பெறுவீர்கள். கலை சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். தன வருவாய் மேம்படுத்துவதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திராடம் : மாற்றம் பிறக்கும்.
திருவோணம் : நம்பிக்கை மேம்படும்.
அவிட்டம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
கும்பம்
உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுகள் கிடைக்கும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை குறைத்து கொள்ளவும். மனதை வருத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவுகள் பிறக்கும். தாய் மாமன் வழியில் ஆதரவான சூழல் உண்டாகும். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். மனதில் உத்தியோக தொடர்பான சிந்தனைகள் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்
அவிட்டம் : ஆதரவுகள் கிடைக்கும்.
சதயம் : தெளிவுகள் பிறக்கும்.
பூரட்டாதி : சிந்தனைகள் மேம்படும்.
மீனம்
எண்ணங்களில் புதிய தெளிவு பிறக்கும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். செலவுகளை குறைப்பதற்கான சிந்தனைகள் மேம்படும். வியாபார பணிகளில் மாற்றமான சூழல்கள் ஏற்படும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
பூரட்டாதி : தெளிவு பிறக்கும்.
உத்திரட்டாதி : நெருக்கம் அதிகரிக்கும்.
ரேவதி : மகிழ்ச்சியான நாள்.
தினம் ஒரு திருக்குறள்

அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல் – குறள் எண்: 101
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.
மு.வ உரை: தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.
தினம் ஒரு திருமுறை
மறை – 1. பதிகம் – 44 பாடல் – 10
நாணொடுகூடிய சாயினரேனு நகுவ ரவரிருபோதும்
ஊணொடுகூடிய வுட்குநகையா லுரைக ளவைகொளவேண்டா
ஆணொடுபெண்வடி வாயினர்பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
பூணெடுமார்பரோ பூங்கொடிவாடப் புனைசெய்வதோ விவர்பொற்பே.
விளக்கவுரை :நாணத்தொடு கூடிய செயல்களை இழந்து ஆடையின்றித் திரிதலால் எல்லோராலும் பரிகசிக்கத் தக்கவராகிய சமணரும், இருபொழுதும் உண்டு அஞ்சத்தக்க நகையோடு திரியும் புத்தரும், ஆகிய புறச்சமயத்தவர் உரைகளை மெய்யெனக் கொள்ளவேண்டா. அன்பர்கள் வழிபடும் திருப்பாச்சிலாச்சிராமத்தில் மாதொருபாகராய் அணிகலன்கள் பூண்ட திருமார்பினராய் விளங்கும் இறைவர் இப்பூங்கொடியாளை வாடச்செய்து பழிப்புரை கொள்ளல் இவரது அழகுக்கு ஏற்ற செயலா?
தினம் ஒரு பாசுரம்
நாலாயிர திவ்யப் பிரபந்தம்
” ஆலினிலைப் பாலகனாய் அன்று உலகமுண்டவனே!, வாலியைக் கொன்று அரசு இளையவானருத்துக்கு அளித்தவனே!, காலின்மணி கரையலைக்கும் கணபுரத்து என் கருமணியே!, ஆலிநகர்க்கு அதிபதியே! அயோத்திமனே! தாலேலோ”
- ( குலசேகரப் பெருமாள் அருளிய பெருமாள் திருமொழி – சக்கரவர்த்தித் திருமகனைக் கௌசலையார் தாலாட்டும் பாசுரம் – 725).
இன்றைய சிந்தனை!
முதல் படி
உன்னால் முடியும் என்று எண்ணுவதையோ அல்லது முடியும் என்று கனவு காண்பதையோ துணிந்து தொடங்கு. உனது துணிவிலேயே அறிவும், ஆற்றலும், மந்திரமும் அடங்கியுள்ளன.
- Goethe.
நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.
- Martin Luther King Jr.
உழைப்பு = வெற்றி
மாபெரும் லட்சியத்தையும் வெற்றியில் நம்பிக்கையையும் வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டால், யாரும் உயர்ந்த நிலையை அடைய முடியும்! – அம்பேத்கர்
வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற மூன்று வழிகள்
- பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.
- பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
- பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.
- வில்லியம் ஷேக்ஸ்பியர்
தினசரி.காம்
இன்றைய சிந்தனைக்கு…
பொறுப்பு என்பது, பாரம் அல்ல, வாய்ப்பு, ஒருவரின், திறமையை நிரூபிப்பதற்கான, சந்தர்ப்பம்!
முடியாது என்பதை பிறகு சிந்தி, எப்படி முடிப்பது என்பதை, எப்பொழுதும் சிந்தி, வெற்றி நிச்சயம்!!
ஒருவருக்கு கிடைத்ததைப் பற்றி, பேசும் இந்த சமூகம், அதனை அடைய, அவர் இழந்ததைப் பற்றி, பேசுவதில்லை!!!
உன் வார்த்தைகளின் நாகரீகமே, பிறரிடம், உனக்கான நன்மதிப்பை, பெற்று கொடுக்கும்!
நீ வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால், உன்னுடைய கால்களை பயன்படுத்து, பிறரின் முதுகை அல்ல!!
உன்னை எப்படி நினைக்கிறாயோ, மத்தவங்களையும் அப்படியே நினைக்க கத்துக்கோ; உன் எண்ணம் உறுதியா இருந்தா, நீ எண்ணியபடி உயர்ந்திடுவாய்!!!




