
இன்றைய பஞ்சாங்கம் – ஜூலை 30
ஶ்ரீராமஜயம் ஜய்ஸ்ரீராம் ஜய்ஸ்ரீராம்
||श्री:|| !!ஸ்ரீ:!!
श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
பஞ்சாங்கம்
ஆடி ~ 14 ( 30.7.2026 ) வியாழன் கிழமை.
வருடம் ~ பராபவ { பராபவ நாம சம்வத்ஸரம் }
அயணம் ~ தக்ஷிணாயணம்.
ருது ~ க்ரீஷ்ம ருது.
மாதம் ~ ஆடி மாஸம் { கடக மாதம் }
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்.
திதி ~ இரவு 10.00 PM வரை ப்ரதமை பின் த்விதீயை.
நாள் ~ { குரு வாஸரம் } வியாழன் கிழமை.
நட்சத்திரம் ~ மாலை 6.55 PM வரை திருஓணம் பின் அவிட்டம்.
யோகம் ~ ஆயூஷ்மான்.
கரணம் ~ பாலவம் / கௌலவம்.
அமிர்தாதியோகம்~ சுபயோகம்
நல்ல நேரம் ~ காலை 10.30 ~ 11.30 AM & மாலை 5.00 ~ 6.00 PM.
ராகு காலம்~ மதியம் 1.30 ~ 3.00 PM.
எமகண்டம் ~ காலை 6.00 ~ 7.30 AM
குளிகை ~ காலை 9.00 ~ 10.30 AM.
சூரிய உதயம் ~ காலை 6.05 AM.
சந்திராஷ்டமம் ~ மிதுனம்.
சூலம் ~ தெற்கு.
பரிகாரம் ~ நல்லெண்ணெய்.
ஸ்ராத்ததிதி ~ ப்ரதமை.
இன்று ~ ச்ரவண வ்ரதம்.
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள்.
!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु!!
॥ॐ शान्तिः शान्तिः शान्तिः |!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!

சுப ஓரைகள்: அவரவர் இருப்பிடத்தில் சூரிய உதயத்திற்கு தகுந்தவாறு நேரத்தை கூட்டி, குறைத்து கொள்ளவும்.
காலை :
சுக்கிர ஓரை 08.01 முதல் 09.00 வரை
புதன் ஓரை 09.01 முதல் 10.00 வரை
பகல் :
குரு ஓரை 12.01 முதல் 01.00 வரை
சுக்கிர ஓரை 03.01 முதல் 04.00 வரை
புதன் ஓரை 04.01 முதல் 05.00 வரை
இரவு :
குரு ஓரை 07.01 முதல் 08.00 வரை

இன்றைய ராசிபலன்கள்
30.7.2026
மேஷம்
நண்பர்கள் மனம் விட்டு பேசுவார்கள். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். விலகி இருந்தவர்கள் திரும்பி வருவார்கள். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிந்தனைகளில் தெளிவுகள் ஏற்படும். புதுவிதமான பொருள்கள் மீது ஆர்வம் ஏற்படும். வீடு பராமரிப்பு தொடர்பான காரியங்கள் நிறைவேறும். பொதுமக்கள் துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல் உருவாகும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்
அஸ்வினி : வாய்ப்புகள் கிடைக்கும்.
பரணி : தெளிவுகள் ஏற்படும்.
கிருத்திகை : சாதகமான நாள்.
ரிஷபம்
உழைப்பிற்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கமான சூழ்நிலை காணப்படும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு மேம்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகங்கள் கிடைக்கும். நண்பர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சிந்தனைகளில் தெளிவுகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்
கிருத்திகை : பாராட்டுகள் கிடைக்கும்.
ரோகிணி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
மிருகசீரிஷம் : தெளிவுகள் உண்டாகும்.
மிதுனம்
செய்யும் காரியங்களில் எதிர்பார்த்திருந்த பலன்கள் காலதாமதமாக கிடைக்கும். கணவன் மனைவி இடையே அனுசரித்து செல்லவும். அரசு தொடர்பான பணிகளில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். அலைச்சல்கள் மூலம் உடல் சோர்வுகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். விலை உயர்ந்த பொருள்களில் கவனம் வேண்டும். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படவும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட திசை : தென் மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்
மிருகசீரிஷம் : தாமதம் உண்டாகும்.
திருவாதிரை : பொறுமை வேண்டும்.
புனர்பூசம் : வாதங்களை தவிர்க்கவும்.
கடகம்
இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். சிந்தனைப் போக்கில் மாற்றம் உண்டாகும். சூழ்நிலைகளை சமாளிப்பதற்கான பக்குவம் ஏற்படும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். போட்டி தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். சுப காரிய எண்ணங்கள் கைக்கூடி வரும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்
புனர்பூசம் : மாற்றம் உண்டாகும்.
பூசம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
ஆயில்யம் : புரிதல் ஏற்படும்.
சிம்மம்
இழுபறியான வரவுகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களைப் பற்றிய புரிதல் மேம்படும். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் லாபங்கள் மேம்படும். பிரபலமானவர்களின் அறிமுகம் உண்டாகும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் ஏற்படும். உத்தியோக பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அரசு சார்ந்த காரியங்கள் நிறைவேறும். வழக்கில் திருப்பம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
மகம் : புரிதல் மேம்படும்.
பூரம் : அறிமுகம் உண்டாகும்.
உத்திரம் : திருப்பம் ஏற்படும்.
கன்னி
பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபங்கள் உண்டாகும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். சுபகாரிய தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். இலக்கியம் சார்ந்த பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். உத்தியோகம் தொடர்பான பயணங்கள் கைகூடும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து வந்த வேறுபாடுகள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம்
உத்திரம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
அஸ்தம் : ஆர்வம் அதிகரிக்கும்.
சித்திரை : வேறுபாடுகள் குறையும்.
துலாம்
மற்றவர்களால் உங்களிடத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். நம்பிக்கைக்குரியவர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். செல்வ சேர்க்கை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மனதில் இருந்த கவலைகள் குறையும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் கிடைக்கும். உத்தியோக பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்
சித்திரை : மாற்றங்கள் ஏற்படும்.
சுவாதி : சிந்தனைகள் அதிகரிக்கும்.
விசாகம் : பொறுப்புகள் கிடைக்கும்.
விருச்சிகம்
எதிலும் திட்டமிட்டு செயல்படுவீர்கள். மனதளவில் தைரியம் உண்டாகும். காலி மனை மூலம் ஆதாயம் அடைவீர்கள். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். கல்வியில் ஏற்ற இறக்கம் உண்டாகும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். தபால் துறைகளில் புதிய அனுபவம் கிடைக்கும். விளம்பர சார்ந்த துறைகளில் திறமைகள் வெளிப்படும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம்
விசாகம் : தைரியம் பிறக்கும்.
அனுஷம் : ஏற்ற இறக்கமான நாள்.
கேட்டை : திறமைகள் வெளிப்படும்.
தனுசு
நிதானமான பேச்சுக்கள் உங்கள் மீதான நன்மதிப்பை மேம்படுத்தும். குழந்தைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். பொருளாதார சிக்கல்கள் குறையும். பணிகளில் அதிகாரிகளை அனுசரித்து செல்லவும். தன வரவுகளில் ஏற்ற இறக்கமான சூழ்நிலைகள் ஏற்படும். வாக்குறுதிகள் அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள் நிறம்
மூலம் : மதிப்புகள் மேம்படும்.
பூராடம் : பிரச்சனைகள் குறையும்.
உத்திராடம் : சிந்தித்து செயல்படவும்.
மகரம்
வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நண்பர்களின் வருகையால் மாற்றம் ஏற்படும். மனதிற்கு நெருக்கமானவர்களின் சந்திப்புகள் உண்டாகும். ஆடம்பரத்தை குறைத்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். விவாதங்களில் சமநிலை அறிந்து செயல்படவும். வியாபாரத்தில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்களால் எண்ணியவை நிறைவேறும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
உத்திராடம் : மாற்றம் ஏற்படும்.
திருவோணம் : சேமிப்பு மேம்படும்.
அவிட்டம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
கும்பம்
அனுபவ பேச்சுக்களால் பலரையும் கவருவீர்கள். வீடு மாற்ற சிந்தனைகள் மேம்படும். வெளியூர் பயணத்தால் ஆதாயம் ஏற்படும். சொந்த ஊர் தொடர்பான பயணங்கள் மேம்படும். கல்வி பணிகளில் மதிப்புகள் அதிகரிக்கும். விவசாய பணிகளில் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். தனிப்பட்ட விஷயங்களில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்
அவிட்டம் : சிந்தனைகள் மேம்படும்.
சதயம் : பயணங்கள் மேம்படும்.
பூரட்டாதி : கவனம் வேண்டும்.
மீனம்
விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். புதுவிதமான தேடல்கள் மனதில் உருவாகும். தடைப்பட்ட பணிகளை விடாப்பிடியாக செய்து முடிப்பீர்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் மகிழ்ச்சி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு நிறம்
பூரட்டாதி : முன்னேற்றம் உண்டாகும்.
உத்திரட்டாதி : தேடல்கள் உருவாகும்.
ரேவதி : மகிழ்ச்சியான நாள்.
இன்றைய நற் சிந்தனைகள்
விடாமுயற்சி
ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.
உன்னிடம் மறைந்திருக்கும் ஆற்றல்களை வெளிக்கொணரும் வழி விடா முயற்சியும், தொடர்ந்த உழைப்புமே ஆகும்; வலிமையோ, புத்திசாலித்தனமோ அல்ல.- Sir Winston Churchill
நான் மெதுவாக நடப்பவன்தான்; ஆனால், ஒருபோதும் பின்வாங்குவதில்லை.
– Abraham Lincoln.

தினம் ஒரு திருக்குறள்
நாள்தோறும் திருக்குறள் படிப்போம், நடப்போம் அதன்படி, நல்லறம் வளர்ப்போம்
அதிகாரம் : படைச்செருக்கு
குறள் 775
விழித்தகண் வேல்கொண் டெறிய அழித்திமைப்பின்
ஒட்டன்றோ வன்க ணவர்க்கு.
மு.வ உரை:
பகைவரை சினந்து நோக்கியக் கண், அவர் வேலைக் கொண்டு எறிந்த போது மூடி இமைக்குமானால், அது வீரமுடையவர்க்குத் தோல்வி அன்றோ.
இன்றைய சிந்தனைக்கு
”யானெனும் செருக்கு மனிதர்க்குப் பகை”
‘நமக்குத்தான் அனைத்தும் தெரியும்’ என்ற செருக்குதான் மனிதனின் முதல் பகைவன், “எம்மால்தான்” அனைத்துமே இயலும், நான் அனைவரிலும் சிறந்தவன் என்ற இறுமாப்பு, இறுதியில் தோல்வியில்தான் முடியும்…
எந்த மனதில் ‘செருக்கு’ சூழ்ந்திருக்கிறதோ அங்கு சிக்கல்களும் இருக்கும். ’’நான்’’ அனைவரிலும் சிறந்தவன் என்ற இறுமாப்பு, இறுதியில் தோல்வியையே கொடுக்கும்…
மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையில் தடையாக இருப்பது இந்த ‘’நான்’’ எனும் செருக்குதான்… !
பணியிடமாகட்டும், மாமியார் மருமகள் உறவுகளாகட்டும், கணவன் மனைவிடையே ஆகட்டும், இங்கெல்லாம் உறவுமுறை கெடுவதற்கு இந்த கேடான எண்ணங்களே காரணம்…!
நண்பர்களிடையே பிரிவு நிகழ்வதும் இந்த எண்ணங்களினால்தான்…!
இன்று செயல்படுவோம், நாளை செயல்படுவோமா…? என்று நமக்குத் தெரியாது. இப்படியிருக்க, நமக்கு இந்த செருக்கு மிகத் தேவைதானா…? என்று சற்று ஆலோசிக்க வேண்டும்…!
ஆம் நண்பர்களே…!
‘நான்’, ‘எனது’ என்பது அறியாமை…!
‘நாம்,’ ‘நம்முடையது’ என்பது அறிவுடைமை…!!
?? நாம் வாழ்வில் முழுமையான நிலையினை அடைய விரும்பினால், ‘’நான்’’ எனும் செருக்கினை முழுமையாக அகற்றிவிடுவதே சாலச் சிறந்தது…!??
- தினசரி.காம்




ரிஷபம௠ராசி ரோகிணி நடà¯à®šà®¤à¯à®¤à®¿à®°à®®à¯ கடகà¯à®• லகà¯à®•னம௠பிறநà¯à®¤ தேதி
௨௦.௦௮.௧௯௮௫ நேரம௠காலை ௪.௩௦மà¯