December 5, 2025, 3:38 PM
27.9 C
Chennai

2019 வருட ராசிபலன்: மேஷம்

ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
(01.01.2019 முதல் 31.12.2019 வரை)


கன்னி லக்னத்தில் வருடம் பிறக்கிறது. ஸ்வாதி நக்ஷத்திரம் துலாம் ராசியில் பிறக்கிறது.  ராகு கடக ராசியில் மார்ச் 09, 2019 வரை சஞ்சரித்து அதன் பின் மிதுன ராசியில் சஞ்சரிப்பார். அதே போன்று கேது மகர ராசியில் இருந்து, தனுசு ராசிக்கு இடம் மாறுகிறார். சனி பகவான் தனுசு ராசியில் இந்த 2019 வருடம் முழுவதும் சஞ்சரிப்பார். குரு விருச்சிக ராசியில் மார்ச் 27, 2019 வரை சஞ்சரிப்பார். அதன் பின் தனுசு ராசிக்கு அதி சாரமாக பெயர்ச்சியாகி, வக்கிர கதி அடைந்து மீண்டும் விருச்சிக ராசிக்கு ஏப்ரல் 25, 2019 அன்று வந்து விடுகிறார். குரு ஆகஸ்ட் 11, 2019 அன்று வக்கிர நிவர்த்தி அடைந்து, பின் தனுசு ராசிக்கு நவம்பர் ௦4, 2019 அன்று இடப்பெயர்ச்சி ஆகிறார். 

mesham rasi - 2025

மேஷ ராசி (அஸ்வினி, பரணி , க்ருத்திகை 1ம் பாதம் முடிய) :

இந்த வருடம் குரு 8லும் ராகு மார்சுக்கு பின் 3லும், கேது சனி 9லும் சஞ்சரிக்கின்றனர். குருவால் பெரிய நன்மைகள் ஏதும் இல்லை அதிசார வக்ரமாய் தனுருக்கு பெயரும் போது ஓரளவு நன்மையை செய்கிறார்.

அதிக எதிர்பார்ப்புகள் வேண்டாம். எந்த முடிவையும் எடுக்கும் முன் உங்கள் ஜனன ஜாதகத்தை அருகில் உள்ள ஜோதிடரிடம் காட்டி அதன்படி செய்வது நன்மை தரும்.

உடல் ஆரோக்கியம்:

குரு 8ல் இருப்பதால் மன அழுத்தம், அவசரம் பதட்டம் ஏற்படும், அதுமட்டும் அல்லாமல் சனி பகவான் 9ல் சஞ்சரிப்பதால் பெற்றோருடைய உடல் நலத்திலும் பாதிப்பு ஏற்படும்,  உங்களின் தசை புக்திகள் சரியாக இருந்தால் இவற்றின் பாதிப்புகள் குறையும். வருடத்தின் முதல் 3 மாதங்கள் இப்படி இருந்தாலும் 25.4.2019 முதல் அதிசாரமாய் தனுருக்கு போவதால் ஆகஸ்ட் 2019 வரை நிம்மதியாய் நோய்கள் பாதிப்பின்றி ஆரோக்கியமாய் இருக்கலாம் பின் செப்டம்பர் 2019 முதல் நவம்பர் 4ம் தேதி வரை திரும்ப மன அழுத்தம் பதற்றம் இருக்கும். இறை ப்ரார்த்தனை பலம் தரும்.

உறவுகள்:

ராகுவால் சற்று நிம்மதி இருந்தாலும் பொதுவாக நெருங்கின சொந்தங்கள், மனைவி பிள்ளை அல்லது பெற்றோர் உங்களுடன் மனஸ்தாபம் ஏற்படும் வகையில் இருப்பார்கள், பலவிதமான பிரச்சனைகளை சில நம்பிக்கைக்கு உறியவர்களால் ஏற்படும். இது நவம்பர் 4,2019 முடிய இருக்கும் அதன் பின் தான் நல்ல நிலை உண்டாகும்.

வேலை/உத்தியோகம்:

ரொம்ப எதிர்பார்க்காமல் கடுமையாக உழைத்து வர வேண்டி இருக்கும், சிலருக்கு வேண்டாத இடத்துக்கு மாற்றல் இருக்கும், பதவி உயர்வை எதிர்பார்த்து வேலை செய்ய வேண்டாம், அரசு ஊழியர்களுக்கு கட்டாய காத்திருப்பு அல்லது பிடிக்காத ட்ரான்ஸ்பர் என்று இருக்கும். குரு தனுருக்கு அதிசாரமாய் செல்லும் போது கொஞ்சம் மகிழ்ச்சியை தருவது போல உத்தியோகம் அமைந்திருக்கும். வேலை தேடுவோருக்கும் மார்ச் கடைசியில் வேலை கிட்டும். நவம்பர் 4 முதல் நல்ல நிலை உண்டாகும் அது வரை பொறுமை அவசியம்.  தேவையில்லாத பிரச்சனைகளில் வாயை கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம் பெண் தொழிலாளிகளுடன் மேலதிகாரிகளுடன் மோதல் வேண்டாம்.

தொழில்/வியாபாரம் :

அதிக போட்டி சூழ்ச்சிகளை சந்திக்க வேண்டி இருக்கும், சம்பளத்துக்காகவோ அல்லது தொழில் வளர்ச்சிக்காகவோ கடன் வாங்க வேண்டி இருக்கும் அதனால் மன அழுத்தம் ஏற்படும். கடன் கொடுத்தவர் தொல்லை தருவார். எதிரிகளை சமாளிக்க எப்போதும் கவனமாய் இருத்தல் வேண்டும். வங்கி கடன் கிடைப்பதும் கடினமாய் இருக்கும். நம்பிக்கை நிறைந்தவர்களே கெடுதல் செய்வர். நவம்பர் 4, 2019 வரை கொஞ்சம் பொறுமை காத்து நிதானமாக செயல்களை செய்ய வேண்டும். தொழிலாளர் மூலமும் பிரச்சனை ஏற்படும். புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்கள் நவம்பருக்குமேல் தொடங்கலாம்.

கலைஞர்கள்:

மறைமுக எதிர்களாலும் சக கலைஞர்களாலும் அதிக தொல்லை ஏற்படும் ஒப்பந்தங்கள் கிடைப்பதே அரியதாயிருக்கும். வீண் விவாதம் வேண்டாம், கடன் வாங்கும் சூழல் உண்டாகும் இந்த வருட கடைசி வரை பொறுமையாய் இருத்தல் அவசியம் நல்ல சூழல் இல்லை.

அரசியல்வாதிகள் :

மேலிடத்தில் பணிவுடன் இருப்பது நல்லது சிலருக்கு பண பாதிப்பு அதிகமாகும் தொண்டர்கள் விலகும் நிலை ஏற்படலாம். அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம், தேர்தலில் அதிக பணம் செலவழிக்க வேண்டி இருக்கும். செலவழித்தாலும் ஜெயிப்பது மிக கடினமாக இருக்கும். இந்த வருடம் முழுவதும் அமைதியாக இருத்தல் நலம் தரும்.

மாணவர்கள் :

இந்த 2019ம் வருடம் அவ்வளவு நன்றாக இல்லை மேஷராசி மாணவர்களுக்கு, கவனம் சிதறும் காதல் வயப்படும் அதனால் படிப்பு கெடும், மனதை ஒருமுக படுத்தி படிப்பில் கவனம் செலுத்துவது நலம் தரும். விளையாட்டு பந்தயங்களும் அவ்வளவு நன்மை தராது.

விவசாயிகள்:

மகசூல் குறையும், புதுப்பயிர்களில் லாபம் இராது, வட்டிக்கு கடன் வாங்கி விவசாயம் செய்யும் நிலை உண்டாகும், வழக்குகளும் சாதகம் இல்லை. புதிய வழக்குகளில் சிக்காமல் இருப்பது நலம். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

பெண்கள்:

இந்த வருடம் வெகு சுமார் என்பதால் அதிக விவாதங்கள் செய்வதை தவிர்க்கவும், மனதை ஒருமுக படுத்தி எல்லோருடனும் அனுசரித்து போகுதல் நலம், உழைக்கும் மகளிருக்கு உழைப்பு கேற்ற பலன் கிடைக்காது. கணவருடன்/ குடும்பத்தாருடன் விட்டுக்கொடுத்து செல்வது மனதில் நிம்மதியை தரும். புதிய முயற்சிகளில் இறங்கவேண்டாம்.

வணங்க வேண்டிய தெய்வமும், ப்ரார்த்தனைகளும்:

குருவுக்கு, ராகுவுக்கு அர்ச்சனை, வெள்ளிக்கிழமை ராகுகாலத்தில் துர்க்கைக்கு எலுமிச்சைபழ விளக்கு ஏற்றுதல், நவக்ரகங்களில் வியாழக்கிழமை குருவுக்கு அர்ச்சனை செய்வது, அனுமனுக்கு துளசி மாலை சாற்றுங்கள், ஏழைகளுக்கு அன்னதானம் செய்யுங்கள். முடியாதோருக்கு சரீர ஒத்தாசை செய்யுங்கள்.

வருட பலன்கள்-2019 கணித்து வழங்குபவர்… 
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாச்சாரி
ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
FG,II block , Alsa Green Park ஹஸ்தினாபுரம் மெயின் ரோடு நேரு நகர், குரோம்பேட்டை, Near MIT Gate Phone : 044-22230808
Skype / Whats app : 8056207965
Email.: mannargudirs1960@gmail.com
Contact Timings for fixing appointment –
6 AM to 8 AM & 8.30 PM to 10 PM

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories